முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவலர்களின் சேடோமெசோக்கிசம்


சாத்தான்குளம் சிறைப்படுகொலை பற்றி நினைக்கையில் மனம் உடைந்து போகிறது. மனிதனை மனிதன் இப்படியெல்லாமா வதைப்பான், சிறுக சிறுக துடிக்க வைத்துக் கொல்வான், அதுவும் சுற்றிலும் உள்ள மக்கள் அந்த இருவரும் அலறுவதை இரவு முழுக்க கேட்டு வெறுமனே இருக்க இந்த கொடூரம், அதனாலான படுகொலை நடந்திருக்கிறது என்பதை நினைக்க நினைக்க நம்பிக்கை வரவில்லை, மனம் ஆறவில்லை.

 ஏழெட்டு லுங்கிகள் நாள் முழுக்க தொடர்ந்து மாற்றினாலும் நிற்காதபடி பென்னிக்ஸுக்கு பின்புறமிருந்து ரத்தம் தொடர்ந்து வந்திருக்கிறது. காரணம் போலீசார் தாக்குதலின் போது ஆசன வாயில் ஏதேதோ பொருட்களை நுழைத்து வன்கொடுமை பண்ணியிருப்பது. இது அதிகார வெறியில் நடந்ததா அல்லது இதன்பின்னர் சாடிஸ, சேடோமஸோக்கிச மனநிலை - ஒருவர் தன்னெதிரே வலியில் கதறுவதைக் கண்டு பாலின்பம் அடைவது - செயல்பட்டுள்ளதா? என்னுடைய ஒரு சந்தேகம் பென்னிக்ஸ் தன் தந்தையை அடிக்கும் போலீஸாரை காவல் நிலையத்தில் வைத்துக் கண்டித்த போது அங்கிருந்த ஆய்வாளர் ஶ்ரீதர் மற்றும் துணை ஆய்வாளர் பால்துரை இருவரில் ஒருவருக்கு அவரிடத்து ஒருபாலின ஈர்ப்பு தோன்றியிருக்க வேண்டும், இது தான் விரும்பும் ஆண் தன்னை அவமரியாதையாய் பேசுகிறாரே எனும் இச்சை கலந்த கோபமாக மாறியிருக்க வேண்டும். இதுவே அவரை ஆசன வாயைக் கிழித்து வதைக்குமளவுக்கு இவர்களைத் தூண்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். (அல்லாவிடில் அவருக்கு மட்டும் ஏன் அந்த கொடுமை நடக்க வேண்டும்?) ஆகையால் இதை வெறுமனே கொலை அல்லது போலீஸ் வன்முறை என அல்ல, பாலியல் வன்கொடுமை எனப் பார்ப்பதே சரியாக இருக்கும்.



 இதில் சம்மந்தப்பட்டவர்களை வெறுமனே இடம்மாற்றுவது, தற்காலிக வேலை நிறுத்தம் செய்வது எப்படித் தீர்வாகும்? இவர்களுக்கும் ரேப்பிஸ்டுகள், சைக்கோபாத்துகளுக்கும் வித்தியாசம் இல்லை எனும் போது இவர்களின் உளவியல் சிக்கலை ஆய்வு செய்து தகுந்த சிகிச்சை அளித்த எதிர்காலத்தில் மனித சமூகத்திடம் இருந்து இவர்களை விலக்கி வைக்க வேண்டாமா?


இறுதியாக, இதை வெறுமனே தனிமனித உளவியல் பிரச்சனையாக, வன்முறை விழைவாக, அதிகார துஷ்பிரயோகமாகக் கண்டு கடப்பது ஆபத்தானது - மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி அதிகாரத்தை நிலைநிறுத்துவதே காவல்துறை வேலை எனும் எண்ணம் இன்று வலுவாக வேரூன்றி விட்டது. அதை வேரறுக்க வேண்டும், மக்களின் பணியாளர்களே காவலர்கள் எனும் நிலையை உருவாக்க வேண்டும். எப்படி?

ஒரு சிறிய நடைமுறை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்:

பணியில் இருக்கும் காவலருக்கு ஒவ்வொரு ஆறுமாதமும் performance review நடத்தப்பட வேண்டும். உச்சபட்ச மேலதிகாரி முதல் கான்ஸ்டபிள் வரை இது நடக்க வேண்டும். ஒரே வித்தியாசம் இதை செய்பவர் காவல்துறைக்குள் இருக்கும் அதிகாரியாக இருக்கக் கூடாது. காவல் நிலையம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களாக இருக்க வேண்டும். கருத்துக்கணிப்பு மூலம் இதை சுலபத்தில் செய்யலாம். ஒரு காவலர் மீது மக்கள் அதிருப்தியாக இருந்தால் அவர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவராக இருந்தாலும் அவரது பதவி தற்காலிகமாய் பறிக்கப்பட வேண்டும். ஒரு மாதத்திற்குள் அவரால் மக்களின் நல்லெண்ணத்தைப் பெற முடியாவிடில் நிரந்தரமாய் பதவி பறிக்கப்பட வேண்டும்.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியிலும் என்னென்ன விசயங்களில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் என்பதை மக்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்து முடிவு செய்ய வேண்டும். இவற்றை இலக்காக அறிவித்து காவல்துறை செயல்பட வேண்டும்

குறைந்தது ஒரு வருடமேனும் ஒரு காவலர் இடமாற்றம் செய்யப்படக் கூடாது.

மேலும், காவல்நிலைய எல்லைக்கு உடபட்ட மக்களுக்கு அடுத்தபடியாய் காவலர்கள் மீது அதிகாரம் நீதிமன்றத்துக்கே இருக்க வேண்டுமே அன்றி அரசியல்வாதிகளுக்கோ மேலதிகாரிகளுக்கோ அல்ல.

கடந்த சில ஆண்டுகளாகவே காவல்துறையினர் கூலிப்படையை விட மோசமாக மக்கள் விரோதிகளாக செயல்பட்டு வருகிறார்கள். போராடுகிற மக்களை ஏதோ மிருகங்களைப் போல சாவகாசமாகக் குறிபார்த்து சுடுகிறார்கள். மக்களை மொத்தமாய் குற்றவாளிகளாக, மற்றமையாகக் காணும் போக்கு ஒரு உளவியலாக, அமைப்பு ரீதியாக காவல்துறைக்குள் செயல்படுகிறது. காவலர்களுக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி அதிகமாக ஆக அவர்கள் காலனிய காலத்து பிரிட்டிஷ் காவலர்களாக மாறி வருகிறார்கள். இதை மாற்றி மக்களைத் தம் முதலாளிகளாக, தம்சேவைக்கான’ ‘நுகர்வோராகக் காணும் புதிய நோக்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

 மாறாக இந்த மக்கள் விரோத மனநிலையை வளரவிட்டால் மிக மோசமான சமூக வியாதியாக இது பரவும். 1922இல் சுதந்திர போராட்ட காலத்தில் சவுரி சவுராவில் நடந்ததைப் போல நடந்ததைப் போல மக்களே ஒன்று கூடி காவல்நிலையங்களைக் கொளுத்தும் சம்பவங்கள் நடைபெறும் காலம் தொலைவில் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...