முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜக தலைமை: நல்ல போலீஸ், கெட்ட போலீஸ்



மோடியை பிடிக்குமோ இல்லையோ, அவரை முழுமூச்சாக வெறுப்பவர்கள் இந்தியாவில் மிகவும் குறைவு. அவர் இந்துத்துவ போஸ்டர்பாய் தான், சர்வாதிகாரிதான், ஆனால் ஒரு கனிவான வயோதிக பிம்பம் அதற்கெல்லாம் மேலெழுந்து மறைத்து விடுகிறது. கடந்த ஆறாண்டுகளாக அவர் தன்னை களங்கமற்ற, சூழ்ச்சியற்ற, குழந்தைத்தனமான, தேசபக்தி மிக்க மனிதனாக காட்டி பளபளப்பான பிம்பத்தை கட்டமைத்து வந்துள்ளார். மற்ற பாஜக தலைவர்களைப் போல அவர் முரட்டுத்தனமாய் பேசுவதோ, வன்மத்தை உடல்மொழியில் காட்டுவதோ இல்லை. சர்ச்சைக்குரிய கருத்துக்களை சரியாக தேர்தல் பிரச்சாரங்களின் போதுதான் சந்திரமுகியாகி சொல்லுவார். ஆனால் தேர்தல் முடிந்ததும் கங்கா ஆகி விடுவார். இவரா அப்படி சொன்னாரு என நாம் யோசித்து மறந்து விடுவோம்.

 மோடிஜி ஒரு பக்கம் வலுவான, ஆதிக்கவுணர்வு கொண்ட தலைவர், ஆனால் மற்றொரு பக்கம் அவரது பேச்சிலும், முகத்தோற்றத்திலும், சிரிப்பிலும், தழுதழுக்கும் குரலிலும் ஒரு வெகுளித்தனம், ஒரு பலவீனம் வெளிப்படுகிறது. இந்த காம்பினேஷன் தான் அவரது பலம். இது பிற பாஜக தலைவர்களிடம் இல்லை

மோடிக்கு நேரெதிர் நிலையில் பிற பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தம்மை காட்டிக் கொள்கிறார்கள் - “துலுக்கனை அடிடா வெட்டுறா கொல்றாஎன கதறுவது, முசுடுபோல முகத்தை வைத்துக் கொள்வது, போராட்டக்காரர்களை தாக்கி அழுக்கு படி நேரடியாகவே தொண்டர்களுக்கு ஊடகங்கள் வழி ஆணை வழங்குவது, பெண்களைப் பற்றி கேவலமாக பேசுவது (அல்லது நடிகையின் இடுப்பை அணைப்பது), கோமூத்திரம் குடித்தால் கொரோனா குணமாகும் எனஅறிவுரைப்பது’  என மோடி ஆட்சியின் அத்தனை எதிர்மறையான போக்குகளுக்கும் அவர்கள் முகமாகிறார்கள்; அவர்களை சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் மக்கள் விமர்சிக்க விமர்சிக்க மோடிஜியின் புனித பிம்பம் வளர்ந்து கொண்டே போகிறதுதன்னைச் சுற்றி சகதி அதிகமாக அதில் மிதக்கும் அவர் ஒரு தூய வெள்ளைத்தாமரையைப் போல அவர் ஜொலித்துக் கொண்டே போகிறார்


இந்த கொரோனா கால தகிடுதித்தங்கள், கொடூரமான முடிவுகள் கூட மோடியின் மீது ஒரு சமூகக் கோபத்தை உண்டுபண்ண வில்லை. மாறாக அக்கோபம் திரண்டு நிம்மி மேடம் மீதும் அமித் பாய் மீதும் திரும்புகிறது. நிம்மி மேடம் என்ன சொன்னாலும் செய்தாலும் வறுத்தெடுக்கப்படுகிறார். நம் இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிக அதிகமாய் வெறுக்கப்பட்ட நிதியமைச்சர் அவராகவே இருக்க முடியும். அண்மையில் அமித் பாய் கொரோனா வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன போது கடுமையான வெறுப்பலை ஒன்று சமூகவலைதளங்களில் அவருக்கு எதிராக கிளம்பியது. “சாவுடாஎன சிலரும், “நாங்க அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லாமல் தெருவில் கிடக்க உனக்கு மட்டும் தனியார் ஐந்து நட்சத்திர ஆஸ்பத்திரியா?” என பலரும் கேட்டனர். இப்படி வெகுண்டெழுபவர்கள், கசப்பை வெளிப்படுத்துபவர்கள் பாஜக எதிர்ப்பாளர்கள் அல்ல; பொதுமக்கள் தாம்; இதற்குக் காரணம் அமித் பாய் மீதான கோபம் அல்ல, இந்த அரசின் செயல்பாடு மீதான கோபம். மோடி மீது காட்ட முடியாததை இவர்கள் மீது காட்டுகிறார்கள். நிம்மி மேடத்தைப் போன்றே இன்று இந்தியாவில் மிகவும் வெறுக்கப்படுகிற தலைவர்களில் ஒருவராக அமித் பாய் மாறி வருகிறார்


இந்த நல்ல போலீஸ்-கெட்ட போலீஸ் கூட்டணி பாஜகவுக்கு இப்போதைக்கு சாதகமாக அமைந்தாலும், போகப் போக அடுத்தகட்ட நகர்வுக்கு பாதமாகிறது. அடுத்த தேர்தலுக்குப் பின் பாஜகவின் பிரதமர் தேர்வாக அமித் பாயே இருப்பார் என்பது பலரின் கணிப்பாக இருந்தது, பின்னர் யோகி ஆதித்யநாத்தாக இருக்கலாம் என்றார்கள். ஆனால் ஷாவின் பிம்பம் முரட்டு பீஸ் என ஆகி விட்டது, அதை வைத்து ஓட்டு வாங்க முடியாது. மோடியே பிரதமர் வேட்பாளராக முன்னின்று தேர்தலில் அடுத்து வென்று ஓய்வு பெற்று தன் நண்பர் அமித் பாய்க்கு பதவியை கொடுத்தாலும் மக்கள் செல்வாக்கு இல்லாமல் பாயால் தாக்குப்பிடிக்க முடியாது. யோகிக்கு உள்ள ரௌடி போலீஸ் பிம்பம் .பிக்கு வெளியே அவரது அரசியல் நலன்களை சேதப்படுத்தும். ஆர்.எஸ்.எஸ்ஸின் நாக்பூர்-வாழ் சகுனிகள் யாரைத் தேர்கிறார்கள் என்பதற்கான சமிக்ஞைகளை 2023இல் நமக்கு தருவார்கள் என நினைக்கிறேன். ஆனால் இப்போதைக்குகட்டம்சரியில்லை.


மோடிதான் இப்போதைக்கு அவர்களிடம் உள்ள பொன்முட்டையிடும் வாத்து. அடுத்த கட்ட தலைமையில் யாரையும் மோடிஜி வளரவும் விடவில்லை, இருக்கிறவர்களும் தெலுங்குப்பட வில்லன்களாகத் தோன்றுகிறார்கள். மோடியை நம்பியே மொத்த வடக்கத்திய அந்தண-பனியா கூட்டணியே பிழைக்கிறது. வாத்தும் ஒருநாள் முட்டையிடுவதை நிறுத்தும். காங்கிரஸ் இப்போது சந்திக்கும் தலைமை நெருக்கடி பாஜகவை சூழும் நாள் ரொம்ப தொலைவில் இல்லை. அதற்கான முதல் சமிக்ஞை தான் ஒரு உள்துறை அமைச்சர் நலம் பெற்று மீளக் கூடாது என எளிய மக்களே  கூட்டம் கூட்டமாய் சாபம் விடுவது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...