முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமருக்கு ஒரு performance review நடைமுறை ஏன் கூடாது?



 ஒரு பெட்ரோல் பங்கில் பணி செய்யும் இவருக்குத் தோன்றுகிற இந்த எளிய விசயம் ஏன் நம் அரசியலமைப்பை எழுதியவர்களுக்குத் தெரியவில்லை?

நீங்கள் ஒரு தொழிலை செய்யும் போது காசு தருகிறவர்களிடம் ஒரு பாத்தியதை உங்களுக்கு உண்டு; வேலையிடத்திலும் வருடத்திற்கு ஒருமுறை உங்கள் பணியின் நிறைகுறையை பரிசீலித்து அதற்கு ஏற்ப சம்பளத்தை உயர்த்தும், வேலையில் இருந்து நீக்கும் நடைமுறை உண்டு; எந்த பொருளை வாங்கினாலும் இணையத்தில் அதற்கான எதிர்வினையை தெரிவிக்கிறோம், அதைக் கண்டு அப்பொருளின் உற்பத்தியாளர்கள் உஷாராகிறார்கள். ஆனால் இந்த நடைமுறை ஏன் ஒரு ஆட்சியை மதிப்பிட்டு பரிசீலனை செய்ய மக்களுக்கு இருப்பதில்லை? முதல் வருடம் ஒரு அரசு செய்யும் தவறுகளை நினைவு வைத்திருந்து ஐந்தாவது வருடமே தண்டனை அளிக்க வேண்டுமென்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இது உலகம் முழுக்க உள்ள பிரச்சனை. இதற்குப் பதிலாக இந்த எளிய மனிதர் குறிப்பிடுவதைப் போல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசை தண்டிக்க வழிவகை செய்ய வேண்டும். உ.தா., ஆட்சியில் உள்ள கட்சிக்கு சில ஆயிரம் கோடிகளாவது ஒவ்வொரு வருடமும் அபராதம் விதித்து அத்தொகையை மக்களுக்கு பகுத்தளிக்கலாம். ஒரு நடுவண் அரசு எந்த மாநிலங்கள் எல்லாம் குறைவாக இடங்களைப் பெற்றிருக்கிறதோ அங்கு வருடாவருடம் கருத்துக்கணிப்பு நடத்தி, ஒரு குறிப்பிட்ட புள்ளிகளுக்கு கீழ் பெற்றால் அடுத்த தேர்தலில் அந்த கட்சியையும் ,ஆட்சி செய்யும் அதன் தலைவர்களை பத்து வருடங்களுக்கும் தேர்தலில் இருந்து தடை செய்யலாம். மீண்டும் ஆட்சிக்கு வந்து மீண்டும் குறைவான மதிப்பெண்களை கருத்துக்கணிப்பில் வாங்கினால் 30 வருடங்கள் தடை செய்யலாம்; அத்தோடு ஆட்சியில் சம்மந்தப்பட்டவர்களின் குடியுரிமையயும் 10 வருடங்களுக்கு ரத்து பண்ணலாம். 

ஒரு performance review system (செயல் திறன் ஆய்வு நடைமுறை) நமது பிரதருக்கு உண்டெனில், அதைக் கொண்டு அவரது ஒவ்வொரு ஆண்டு ஆட்சி சாதனையையும் மக்களால் கருத்துக்கணிப்பு வழி ஒரு தரவரிசைப் பட்டியலில் வைத்து மதிப்பிட முடியுமெனில், அது அவரது கட்சியின் அடுத்த தேர்தல் வெற்றியை பாதிக்குமெனில், அவர் இவ்வளவு துணிச்சலாக குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்திருப்பாரா? இவ்வளவு அலட்சியமாக புலம்பெயர் தொழிலாளிகளை கையாண்டிருப்பாரா? இவ்வளவு மோசமாக கொரோனா பிரச்சனையை எதிர்கொண்டிருப்பாரா?

இதெல்லாம் செய்தாலே ஆட்சியாளர்களுக்கு ஒரு பொறுப்புடைமை (accountability) வரும், உண்மையான குடியாட்சி தோன்றும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...