ஒரு பெட்ரோல் பங்கில் பணி செய்யும் இவருக்குத் தோன்றுகிற இந்த எளிய விசயம் ஏன் நம் அரசியலமைப்பை எழுதியவர்களுக்குத் தெரியவில்லை?
நீங்கள் ஒரு தொழிலை செய்யும் போது காசு தருகிறவர்களிடம் ஒரு பாத்தியதை உங்களுக்கு உண்டு; வேலையிடத்திலும் வருடத்திற்கு ஒருமுறை உங்கள் பணியின் நிறைகுறையை பரிசீலித்து அதற்கு ஏற்ப சம்பளத்தை உயர்த்தும், வேலையில் இருந்து நீக்கும் நடைமுறை உண்டு; எந்த பொருளை வாங்கினாலும் இணையத்தில் அதற்கான எதிர்வினையை தெரிவிக்கிறோம், அதைக் கண்டு அப்பொருளின் உற்பத்தியாளர்கள் உஷாராகிறார்கள். ஆனால் இந்த நடைமுறை ஏன் ஒரு ஆட்சியை மதிப்பிட்டு பரிசீலனை செய்ய மக்களுக்கு இருப்பதில்லை? முதல் வருடம் ஒரு அரசு செய்யும் தவறுகளை நினைவு வைத்திருந்து ஐந்தாவது வருடமே தண்டனை அளிக்க வேண்டுமென்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இது உலகம் முழுக்க உள்ள பிரச்சனை. இதற்குப் பதிலாக இந்த எளிய மனிதர் குறிப்பிடுவதைப் போல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசை தண்டிக்க வழிவகை செய்ய வேண்டும். உ.தா., ஆட்சியில் உள்ள கட்சிக்கு சில ஆயிரம் கோடிகளாவது ஒவ்வொரு வருடமும் அபராதம் விதித்து அத்தொகையை மக்களுக்கு பகுத்தளிக்கலாம். ஒரு நடுவண் அரசு எந்த மாநிலங்கள் எல்லாம் குறைவாக இடங்களைப் பெற்றிருக்கிறதோ அங்கு வருடாவருடம் கருத்துக்கணிப்பு நடத்தி, ஒரு குறிப்பிட்ட புள்ளிகளுக்கு கீழ் பெற்றால் அடுத்த தேர்தலில் அந்த கட்சியையும் ,ஆட்சி செய்யும் அதன் தலைவர்களை பத்து வருடங்களுக்கும் தேர்தலில் இருந்து தடை செய்யலாம். மீண்டும் ஆட்சிக்கு வந்து மீண்டும் குறைவான மதிப்பெண்களை கருத்துக்கணிப்பில் வாங்கினால் 30 வருடங்கள் தடை செய்யலாம்; அத்தோடு ஆட்சியில் சம்மந்தப்பட்டவர்களின் குடியுரிமையயும் 10 வருடங்களுக்கு ரத்து பண்ணலாம்.
ஒரு performance review system (செயல் திறன் ஆய்வு நடைமுறை) நமது பிரதருக்கு உண்டெனில், அதைக் கொண்டு அவரது ஒவ்வொரு ஆண்டு ஆட்சி சாதனையையும் மக்களால் கருத்துக்கணிப்பு வழி ஒரு தரவரிசைப் பட்டியலில் வைத்து மதிப்பிட முடியுமெனில், அது அவரது கட்சியின் அடுத்த தேர்தல் வெற்றியை பாதிக்குமெனில், அவர் இவ்வளவு துணிச்சலாக குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்திருப்பாரா? இவ்வளவு அலட்சியமாக புலம்பெயர் தொழிலாளிகளை கையாண்டிருப்பாரா? இவ்வளவு மோசமாக கொரோனா பிரச்சனையை எதிர்கொண்டிருப்பாரா?
இதெல்லாம் செய்தாலே ஆட்சியாளர்களுக்கு ஒரு பொறுப்புடைமை (accountability) வரும், உண்மையான குடியாட்சி தோன்றும்!

கருத்துகள்