முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமருக்கு ஒரு performance review நடைமுறை ஏன் கூடாது?



 ஒரு பெட்ரோல் பங்கில் பணி செய்யும் இவருக்குத் தோன்றுகிற இந்த எளிய விசயம் ஏன் நம் அரசியலமைப்பை எழுதியவர்களுக்குத் தெரியவில்லை?

நீங்கள் ஒரு தொழிலை செய்யும் போது காசு தருகிறவர்களிடம் ஒரு பாத்தியதை உங்களுக்கு உண்டு; வேலையிடத்திலும் வருடத்திற்கு ஒருமுறை உங்கள் பணியின் நிறைகுறையை பரிசீலித்து அதற்கு ஏற்ப சம்பளத்தை உயர்த்தும், வேலையில் இருந்து நீக்கும் நடைமுறை உண்டு; எந்த பொருளை வாங்கினாலும் இணையத்தில் அதற்கான எதிர்வினையை தெரிவிக்கிறோம், அதைக் கண்டு அப்பொருளின் உற்பத்தியாளர்கள் உஷாராகிறார்கள். ஆனால் இந்த நடைமுறை ஏன் ஒரு ஆட்சியை மதிப்பிட்டு பரிசீலனை செய்ய மக்களுக்கு இருப்பதில்லை? முதல் வருடம் ஒரு அரசு செய்யும் தவறுகளை நினைவு வைத்திருந்து ஐந்தாவது வருடமே தண்டனை அளிக்க வேண்டுமென்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இது உலகம் முழுக்க உள்ள பிரச்சனை. இதற்குப் பதிலாக இந்த எளிய மனிதர் குறிப்பிடுவதைப் போல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசை தண்டிக்க வழிவகை செய்ய வேண்டும். உ.தா., ஆட்சியில் உள்ள கட்சிக்கு சில ஆயிரம் கோடிகளாவது ஒவ்வொரு வருடமும் அபராதம் விதித்து அத்தொகையை மக்களுக்கு பகுத்தளிக்கலாம். ஒரு நடுவண் அரசு எந்த மாநிலங்கள் எல்லாம் குறைவாக இடங்களைப் பெற்றிருக்கிறதோ அங்கு வருடாவருடம் கருத்துக்கணிப்பு நடத்தி, ஒரு குறிப்பிட்ட புள்ளிகளுக்கு கீழ் பெற்றால் அடுத்த தேர்தலில் அந்த கட்சியையும் ,ஆட்சி செய்யும் அதன் தலைவர்களை பத்து வருடங்களுக்கும் தேர்தலில் இருந்து தடை செய்யலாம். மீண்டும் ஆட்சிக்கு வந்து மீண்டும் குறைவான மதிப்பெண்களை கருத்துக்கணிப்பில் வாங்கினால் 30 வருடங்கள் தடை செய்யலாம்; அத்தோடு ஆட்சியில் சம்மந்தப்பட்டவர்களின் குடியுரிமையயும் 10 வருடங்களுக்கு ரத்து பண்ணலாம். 

ஒரு performance review system (செயல் திறன் ஆய்வு நடைமுறை) நமது பிரதருக்கு உண்டெனில், அதைக் கொண்டு அவரது ஒவ்வொரு ஆண்டு ஆட்சி சாதனையையும் மக்களால் கருத்துக்கணிப்பு வழி ஒரு தரவரிசைப் பட்டியலில் வைத்து மதிப்பிட முடியுமெனில், அது அவரது கட்சியின் அடுத்த தேர்தல் வெற்றியை பாதிக்குமெனில், அவர் இவ்வளவு துணிச்சலாக குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்திருப்பாரா? இவ்வளவு அலட்சியமாக புலம்பெயர் தொழிலாளிகளை கையாண்டிருப்பாரா? இவ்வளவு மோசமாக கொரோனா பிரச்சனையை எதிர்கொண்டிருப்பாரா?

இதெல்லாம் செய்தாலே ஆட்சியாளர்களுக்கு ஒரு பொறுப்புடைமை (accountability) வரும், உண்மையான குடியாட்சி தோன்றும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...