அண்மையில் மூத்திர சர்ச்சைக்கு ஆளான மருத்துவரும், பாஜகவின் எபிவிபி தேசியத் தலைவருமான சண்முக சுப்பையா எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் இடம்பெற வைத்தார்கள். அது மேலும் பல கண்டனங்கள் பல தரப்புகளில் இருந்தும் பெற்றுத் தந்தது. இதில் கவனிக்க வேண்டியது இது வெறுமனே ஒரு தனிமனித ஒழுக்கப் பிறழ்வு மட்டும்ல்ல என்பது.
ஒடுக்கப்பட்டோர் மீது மூத்திரம் பெய்யும் இந்த சுபாவமானது சாதி, மதத் திமிரானது ஆணாதிக்கத்துடன் நுணுக்கமாய் பின்னிப்பிணைந்தது. தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் என தாம் துச்சமாக மதிக்கிறவர்களை சிறுநீரைக் கொண்டு அடையாளப்படுத்துவது, அவர்களை மலம் சுமக்க வைப்பது இந்துப்பெரும்பான்மை வாதம் பேரும் பலரது கீழ்மையான பண்பாடாக உள்ளது. மனுநீதியில் உள்ள கருத்துக்களை சொன்னதற்காக விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பெண்களை அவமதித்ததாக குற்றம் சாட்டி, போராட்டம் என்கிற பெயரில் சினிமாத்தனமான பரபரப்பை ஏற்படுத்தி ஊடக கவனத்தைப் பெற்ற தமிழக பாஜக மகளிர் அணித்தலைவர் குஷ்பு அவர்களும் பிறரும் இவ்விசயத்தில் அமைதியாக இருந்தார்கள். ஏனென்றால் அவர்களது கட்சியினரைப் பொறுத்தவரையில் எளியோரை அவமதிப்பதும், மனிதக்கழிவுகளைக் கொண்டு தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினரை கேவலப்படுத்தி ‘மனுநீதியை’ நிறுவுவதும் ஒன்றும் புதிதல்ல.
சில செய்திகளைப் பாருங்கள்:
2018 அக்டோபரில் ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் காளிச்சரன் ஒரு பொதுக்கிணறருக்கே ஒன்றுக்கடித்து சர்ச்சைக்குள்ளானார். அடுத்து ஷம்பு சிங் கட்டேஸர் எனும் பாஜக அமைச்சர் முதல்வர் வசுந்தர ராஜேவின் சுவரொட்டி மீது மூத்திரம் பெய்து மாட்டிக்கொண்ட பின் அதை தமது மரபு என நியாயப்படுத்தி சர்ச்சைக்குள்ளானார். 2017இல் மகாராஷ்டிர பாஜக அமைச்சர் ராம் ஷிண்டே பொதுவெளியில் ஒன்றுக்குப் போன காணொலி வைரலானது. 2019 செப்டம்பரில் உத்தர பிரதேச பாஜக அமைச்சர் நிஷாத் மனைவி தன் கணவன் தன் அடித்து அவர் மீது மூத்திரம் பெய்து வதை செய்ததாய் புகார் தெரிவித்தார்.
2019இல் உத்தரபிரதேசத்தில் கிஷன் லால் ராஜ்புத் எனும் பாஜக எம்.எல்.ஏ குர்ஜார் எனும் ஒரு கான்ஸ்டபிளை செருப்பால் அடித்து உதைத்து விட்டு பிற போலிசார் முன்னிலையில் மூத்திரத்தை குடிக்கும்படி செய்தார். 2018 ஆகஸ்ட் மாதம் மத்திய பிரதேசத்தில் உள்ளூர் பாஜக தலைவர் கீரம் சிங் தனது மகளையும் அவருடன் ஓடிச்சென்று மணம் புரிந்த ரமேஷ் என்பவரையும் கடத்தி வந்து அடித்து உதைத்து மூத்திரம் குடிக்க வைத்தார். இப்படி பல சம்பவங்கள்.
பொதுவாக மிருகங்கள் தாம் இப்படி தமது எல்லையை வகுக்க, பாலியல் ஆதிக்கத்தை நிறுவ, வளங்களை தமதாக்கிக் கொள்ள மூத்திரம் பெய்யும் என்கிறது அறிவியல். இத்தகைய மிருகங்களிடம் நமது நாட்டை, நமது மாநிலத்தை தொடர்ந்து ஒப்படைக்கப் போகிறோமா என மக்கள் சிந்திக்க வேண்டும்.




கருத்துகள்