முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கணேசகுமாரனின் “சிலிங்”



கணேசகுமாரனின் ஒரு சிறப்பு என்னவென்றால் அவரது சிறுகதைகளுக்கு ஒரு களமும் மொழியும் உண்டெனில் அதில் இருந்து விலகி இன்னொரு மொழியில் களத்தில் குறுநாவல்கள் எழுதுவார். அவற்றுக்கும் சம்மந்தமில்லாமல் முற்றிலும் புதிதாக அடுத்ததொரு குறுநாவலைப் படைப்பார். இதையெல்லாம் கணேசகுமாரன் திட்டமிடாமல் தன்போக்கில் செய்கிறார்; இப்படி தான் செய்வதையே அவர் உணர்வதில்லை என நினைக்கிறேன். “மெனிஞ்சியோமா” அப்படியான ஒரு குறுநாவல் தான். இப்போது வந்துள்ள “சிலிங்” இன்னும் ஒரு படி மேலே போய் தமிழில் இதுவரை யாருமே முயன்று பார்க்காத ஒரு கதைக்கருவை, ஒற்றை வரியை எடுத்தாள்கிறது.

 ஒரு மனநோயாளி, அவனுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் ஒரு மனநல ஆலோசகர். ஆலோசகர் மிகுந்த புரிந்துணர்வும் கருணையும் கொண்டவராக காட்டப்படுகிறார். மனநோயாளி தடுமாற்றமும் குழப்பமும் தன்னிரக்கமும் கொண்டவனாக வருகிறான். ஒரு கட்டத்தில் இந்த ஆலோசகரின் சிக்கல்கள் பேசப்படுகின்றன. இன்னதென்று வரையறுக்க முடியாத அகச்சிக்கல்களில் அவர் மாட்டிக் கொள்கிறார். அவருடைய வாழ்க்கையில் நடக்கிற சில அபத்தமான சம்பவங்களும் அவரை கடும் நெருக்கடிக்குள் தள்ளுகின்றன. நாவல் முடியும் போது ஆரம்பத்தில் வந்த மனநோயாளி நாம் எதிர்பார்த்த ஆளல்ல, அவன் ஒரு தந்திரசாலி என சொல்லப்படுகிறது. இது தமிழ் இலக்கியத்துக்கு முற்றிலும் புதிதான ஒரு கரு - ஒருவருடைய தான் எனும் நிலை, அவருடைய தான்-மை (subjectivity), மற்றொருவருடைய தொடர்பால் உருமாறி, இரு தான்-மைகளும் இரண்டறக் கலப்பது, ஒருவர் மற்றொருவராக ஆவது என்பது நகுலன், ஓரளவுக்கு மௌனி ஆகியோரால் (பின்னர் சாருவாலும்) புனைவில் பேசப்பட்டிருக்கிறது என்றாலும் இது இப்போதும் தமிழுக்கு முற்றிலும் புதிதான ஒரு விசயம் தான். பொதுவாக நாம் இங்கு குடும்பக் கதை, சாகசக் கதை, பழிவாங்கும் கதை, காதல் கதை, இழப்பின் கதை, சமூக அவலக் கதை, வரலாற்று மாந்தர்களின் வீர சோக காவியங்கள் ஆகியவற்றை தாம் திரும்பத் திரும்ப எழுதி வந்திருக்கிறோம். “சிலிங்” இந்த டெம்பிளேட்டை உடைக்கிறது.


 இதை நான் நமது புனைவு மரபை விமர்சிப்பதற்காக அல்ல, புரிந்து கொள்ளவே சொல்கிறேன். வழிவழியாக எழுதப்பட்டதை புதிய மொழியில், நிறத்தில் திரும்ப எழுதுவதே எளிது. ஆனால் ஒருவர் இந்த டெம்பிளேட்டை உடைக்க முயல்கையில், ஒரு உளவியல்-தத்துவ நெருக்கடியை புனைவாக்கும் போது அவருக்கு எங்கு போய் நிற்பது, எப்படி பயணிப்பது எனும் நெருக்கடி ஏற்படுகிறது. இதுவே கணேசகுமாரன் இந்த நாவலில் எதிர்கொள்வது எனத் தோன்றுகிறது. தான்-மை ஒழுகி ஓடும் ஒன்றாக, சாராம்சமற்றதாக இருக்கையில் ஒருவருடைய இருப்பு அங்கு என்னவாகும் என்பது ஒரு அபாரமான தத்துவப் பிரச்சனை. அது தஸ்தாவஸ்கி போன்ற ஒரு மேதை எழுத வேண்டியது. தமிழில் அப்படி ஒரு விசயத்தை ஒருவர் எடுத்துப் பேசுவதே பாராட்டத்தக்கது தான். இந்த பின்னணியில் தான் எனக்கு இந்த நாவல் மிகுந்த மகிழ்ச்சியளித்தது; யாருமே பறிக்க முயலாத மலர் மீது கணேசகுமாரன் தன் விரல்களை வைத்திருக்கிறார். அவர் அதைப் பறிப்பதில் சில தடுமாற்றங்கள் இருக்கலாம், ஆனால் அவர் இதை செய்திருப்பதே ஒரு முக்கிய சாதனை என நினைக்கிறேன்.


இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம் எனும் புகார்களைத் தாண்டி “சிலிங்” நாம் அனைவரும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டிய நாவல் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இந்நாவலை வெறுமனே ஒரு எதார்த்தக் கதையாகப் படிப்பதும் நியாயமல்ல!


பி.கு: தலைப்பு தான் கடைசி வரை எனக்குப் புரியவில்லை.

கருத்துகள்

J. ADALARASAN இவ்வாறு கூறியுள்ளார்…
எழுத்தாளர்களுக்கு எழுதப்பட்ட
நாவல் மொனி நகுலன் என்று
குறிப்பால்‌ உணர்த்தி காத்தமைக்கு
நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...