முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சம்பத்தின் “இடைவெளி” - ஒரு உரையாடல்



வரும் ஞாயிறுக்கு அடுத்த ஞாயிறு பாலம் அமைப்பு நடத்தும் இணைய வழி உரையாடலில் பங்கேற்று பேசுகிறேன். அவர்கள் என்னிடம் உங்களுடைய அண்மையில் வெளியான நூல் பற்றிக் கூட பேசலாம் என்றார்கள். அது ரொம்ப அலுப்பாக இருக்கும் என்பதால் (எனக்கு புத்தகத்தை கூவி விற்கும் திறமை எல்லாம் இல்லை) மற்றொருவருடைய நூலைப் பற்றி பேசலாம் என முடிவெடுத்தேன். உடனடியாக மனத்தில் வந்து நின்றது சம்பத்தின் “இடைவெளி”.  


“இடைவெளி” தமிழில் வெகுவாக கொண்டாடப்பட்ட நாவல். இணையத்திலேயே நிறைய விமர்சனக் குறிப்புகளை காணக் கிடைக்கிறது. நிறைய பேர் சம்பத்துக்கு மரணம் என்பது ஒரு உளவியல் ஆட்கொள்ளலாக மாறியது, அதனால் அவர் நெருக்கடிக்கு ஆட்பட்டது பற்றி இக்குறிப்புகளில் பரவலாக பேசுகிறார்கள். ஆனால் எனக்கு முற்றிலும் மாறுபட்ட பார்வை ஒன்று - அது சம்பத்துக்கு மரணம் குறித்த சிந்தனை கடும் தவிப்பை தந்தாலும் அது அவனுக்கு மிகுந்த களிப்பை தந்தது என்பதே. மரணத்தை ஒரு கவித்துவமான கண்டுபிடிப்பாக இந்நாவல் முன்வைக்கிறது என்பதே.


நாவலில் சம்பத் தான் ஒரு கண்டுபிடிப்பை செய்ததாக சொல்லுகிறார். அது மரணம் என்பது ஒரு “இடைவெளி” என்பது. ஏன் மரணத்தை அப்படி உருவகிக்கிறார்? நான் இதைப் பற்றியே பேசலாம் என இருக்கிறேன். குறிப்பாக தத்துவார்த்த தளத்தில் வைத்து.


“இடைவெளியின்” மற்றொரு சிறப்பு தமிழில் - என்னுடைய வாசிப்பில் - இத்தகைய நாவலொன்று வேறில்லை என்பது. ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” கூட வரலாற்று தொன்ம நாவலே அன்றி தத்துவ நாவல் அல்ல. ஆல்பர்ட் காமு, சார்த்தர போன்றவர்கள் தத்துவ நாவல் எழுதும் போது தமது தத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் எழுதினார்கள். ஆனால் சம்பத் இந்த தத்துவப் பயிற்சி பின்புலம் இல்லாமல், கவித்துவமான மன எழுச்சியால் மரணம் என்கிற உருவகத்தை எட்டித் தொட்டிருக்கிறார். அல்லது அப்படி ‘வெள்ளந்தியாக’ மரணத்தைப் பற்றி பேச முயன்று தான் தத்தளிப்பதாக சித்தரித்திருக்கிறார். 


ஆனால் நான் என் வாசிப்பில் தெளிவான ஒரு தத்துவ கட்டமைப்புக்குள் வைத்தே விவாதிக்கிறேன். அதற்கு எழுதும் குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் கொண்டு வாருங்கள். விவாதிப்போம்.


ஒருமுறை வாசித்துப் பார்க்க விரும்பும் நண்பர்களுக்காக: நாவலின் அச்சுப்பிரதி இப்போது வாங்கக் கிடைக்கிறது. மென்பிரதியும் ரொம்ப நாளாக சுற்றில் இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...