"சாகித்ய அகாடமி விருதுபெற்று தமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய்ப் பெருவாழ்வு வாழ்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது.
இது இனிமேல் நவீன இலக்கிய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களுக்கு அரசு மரியாதையை இறப்பில் மட்டுமல்ல வாழும் போதும் வழங்குகிற ஒரு நல்ல மரபுக்கு துவக்கப் புள்ளியாக அமையட்டும்.
திராவிட இயக்கம் மீதான ஒவ்வாமை தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் பெரும்பாலும் குறைந்து விட்டதென நினைக்கிறேன். இப்போதே மனுஷ்யபுத்திரன், இமையம், சல்மா என மூன்று முக்கிய படைப்பாளிகள் திமுகவில் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கணிசமான நவீன படைப்பாளிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததையும் கவனிக்க வேண்டும். திராவிடத்துக்கும் நவீன எழுத்துக்குமான ஒரு உரையாடல், நவீன சிந்தனைகளின் பக்கம் இருந்து இடையீடுகள் திராவிட புலத்தில் அதிகமாக நடப்பதும் பாசிசம் உச்சம் பெறும் இந்த ஆபத்தான காலத்தில் அவசியம்.
நல்ல மாற்றங்களை எதிர்நோக்குவோம்!
கருத்துகள்