முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாமியார்களுக்கு ஒரு நுழைவுத் தேர்வும் கட்டுப்பாடுகளும்





மாநிலத்தில் செயல்படும் சாமியார்களுக்கு என ஒரு தரமதிப்பீட்டுக் குழுவை ஏன் திமுக அரசு உருவாக்கக் கூடாது?

இக்குழுவானது சமூக செயல்பாட்டாளர்கள், ஒரு அரசு அதிகாரி, ஒரு தத்துவ அறிஞர் ஆகியோரால் உருவாக்கப்படலாம். இவர்களின் பரிந்துரையின் பேரில் ஒரு நுழைவுத் தேர்வை சாமியார்களுக்கு உருவாக்கலாம். காவி அணிகிற யாரும் இத்தேர்வை எழுதி சான்றிதழ் பெற வேண்டும். இத்தேர்வில் இந்திய, ஐரோப்பிய தத்துவக் கேள்விகளைக் கேட்கலாம். (ஏன் ஐரோப்பிய தத்துவத்தை கொண்டு வர வேண்டும் என்றால் இன்று சாமியார்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.) சரியான பதிலை டிக் செய்கிற முறை அல்லாமல், 50 மதிப்பெண்களுக்கு நீண்ட விடைகளை எழுதும் வகையில் அமைக்கலாம். 25 மதிப்பெண்களுக்கு ஒரு ஆய்வேட்டை சமர்ப்பிக்க வேண்டும். மிச்ச 25 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு. மொத்தமாய் 100 மதிப்பெண்கள். குறைந்தது 50 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்வாக முடியும்.

சான்றிதழ் இன்றி சாமியாராக பயில்வது 5 வருட சிறைத்தண்டனைக்குரிய குற்றம்.


அடுத்து, சான்றிதழை பதிவு செய்கிற சாமியார்களுக்கு என ஒரு மையப்படுத்தப்பட்ட வாரியம். இந்த சாமியார் மைய வாரியம் அறநிலையத் துறையின் கீழ் இயங்கலாம். 


இதன் மூலம் சாமியார்கள் அரசியல்வாதிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என விதிமுறை இயற்றிட முடியும். அவர்களுக்கு வருகிற நிதியை சோதிக்க முடியும். முக்கியமாக, சிறு குழந்தைகளை ஆசிரமத்தில் சேர்ப்பதை தடை செய்யலாம். சாமியார்கள் பற்றின புகார்களை தெரிவிக்க ஒரு குறைதீர்ப்பு குழுவை உருவாக்க முடியும். 


இதன் முக்கிய நோக்கம் இந்து மதத்தின் தத்துவங்கள் குறித்த எந்த பயிற்சியும் இன்றி ஒருநாள் தன்னை துறவி என அறிவித்துக் கொண்டு, ஏற்கனவே பொதுத்தளத்தில் உள்ள தகவல்களை தமக்கு ஏற்ப மாற்றி பிரச்சாரம் செய்கிற போலிகளை களையெடுப்பதும், குற்றவாளிகள் காஷாயத்தின் பின்னால் ஒளிந்து கொள்வதைத் தடுப்பதுமே. ஓஷோ போன்ற ஒருவர் மோசமான நடத்தைகளைக் கொண்டிருந்தாலும் அவருடைய சிந்தனைகள் இன்றும் மக்களுக்கு பயன்படுகின்றன. ஆனால் அவருக்கு அடுத்து வந்த பல சுதந்திர சாமியார்களுக்கு அந்த தகுதி இல்லை. ஊரை ஏமாற்றுவதை அன்றி அவர்களுக்கு வேறெந்த நோக்கமும் இல்லை.


1)  சாமியார்களின் பணி கூட்டம் சேர்த்து ஒரு மதத்தின் தத்துவங்ளை மக்களுக்கு பயிற்றுவிப்பதாக இருக்க வேண்டும். வித்தை காட்டுவது, அதிசயங்களை நிகழ்த்துவது, சொஸ்தப்படுத்துவது அல்ல. ஏனென்றால் அவை ஜெப்படி வித்தைகள் மட்டுமே. ஒருவர் 9-6 ரியல் எஸ்டேட் முகவராகவும் மாலையில் சாமியாராகவும் இருப்பது சரி அல்ல. முழுநேர சாமியாராக அதன் அறிவுத் தகுதியுடன் ஒழுக்கத்துடன் இருக்கட்டும்.


2)  சாமியார்கள் மணமுடிப்பதுடனும் எனக்கு உடன்பாடில்லை. மனித மனம் ஒரு குரங்கு. அல்லது ஒன்றை பத்தாகக் காட்டும் கண்ணாடி. விலகி இருப்பதே மனித மனத்துக்கு ஓர்நிலையைத் தரும். ஆண் சாமியார்கள் பெண்களை சந்திப்பதை அறவே தவிர்க்க வேண்டும். பெண் பக்தையர் பெண் சாமியார்களிடம் செல்லட்டும். அதுவே ஆரோக்கியமானது. தற்பால் ஆர்வலராக இருப்போருக்கு இந்த விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் (அமிர்தானந்த மயியைப் போல).


3) அடுத்து சாமியார்கள் வாரம் ஒருநாள் ஒருமுறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும் (மாதத்துக்கு 4 முறைகள், வருடத்திற்கு 48 முறைகள் மட்டுமே உணவு). ஏனென்றால் மூன்று வேளை உணவு அவர்களை சோர்வடைய செய்வதுடன் நோய்களை உண்டுபண்ணி, இச்சைகளைத் தூண்டும். குறைவான உணவுடன் வாழும் போது அளப்பரிய ஆற்றலும் மனக்கூர்மையும் இருக்கும்.


4) அந்த வாரம் ஒருமுறை உணவையும் அவர்கள் இரந்து மட்டுமே பெற வேண்டும். மொட்டையடிக்க வேண்டும். விலையுயர்ந்த ஆடைகள் அணியக் கூடாது. பைக், கார், பேருந்து, விமானத்தில் பயணிக்கக் கூடாது. நடந்தோ சைக்கிளிலோ செல்லலாம்.   


5) சிறுபான்மை மதங்களில் உள்ள இத்தகைய சுதந்திர சாமியார்கள், போதகர்களுக்கும் இத்தகைய சட்டங்களும் வாரியங்களும் வகுக்கப்பட வேண்டும்.


உங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் எழுதுங்கள்!

கருத்துகள்

Gauthaman இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு மதத்தின் துறவிகளை பற்றி எழுதிவிட்டு கடைசியாக உங்க நடுநிலை பாதிக்க கூடாது என ஐந்தாவது பத்தியை சேர்த்து இருக்கீங்க.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...