முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலங்கை இளம் மட்டையாளர்களின் வயிற்றுப் போக்கு ஆட்டம்


 

இந்தியா இலங்கை முதல் ஒருநாள் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். இலங்கை அணி குறித்து ஆயிரம் குறைகள் சொன்னாலும் மட்டையாளர்களுக்கு நிறைய திறமை இருக்கிறது. கொஞ்சம் மே.இ தீவுகளை நினைவுபடுத்துகிறார்கள். செம ஸ்டைல். குறிப்பாக, ராஜபக்ஸா, பனுகா, தனஞ்சயா போன்றோருக்கு இயல்பாகவே பந்தை வேகமாய் கணித்து பெரிய ஷாட்டுகளை சோம்பலான அழகுடன் அடிக்க வருகிறது. ஒரே சிக்கல் percentage cricket ஆட வரவில்லை என்பது. அதாவது சராசரியான வேகத்தில், பெரிய அவசரம் இல்லாமல் ஓவருக்கு 4.5-5.5 என ரன்ரேட்டில் ஆடி விட்டு சரியான நேரத்தில் அடித்தாடுவது. ஒரு 50 ஓவர் ஆட்டத்தின் நான்கு பகுதிகளை 200 ரன்களுக்கும், மிச்சத்தை 100 ரன்களுக்கும் ஆட முனைந்தால் ஒவ்வொரு ஆட்டத்திலும் 300 அடிக்கலாம் (இந்திய பாணி). ரொம்ப தட்டையான ஆடுதளம், மத்திய வரிசை மட்டையாட்டம் சிறப்பாக உள்ள பட்சத்தில் முதல் நான்கு பகுதிகளில் 300 ரன்கள் அடிக்க முயலலாம் (இங்கிலாந்து பாணி). முதலாவதில் ஒவ்வொரு பத்து ஓவர் பகுதியில் இரண்டு மூன்று ஓவர்கள் சற்று நிதானித்து ஓவருக்கு 4-4.5 ரன்கள் அடிக்கலாம். இரண்டாவதில் அதே மூன்று ஓவர்களுக்கு 15-18 ரன்களும், மிச்ச ஏழு ஓவர்களில் ஓவருக்கு 9-10 ரன்கள் அடிக்க முயலலாம். இலங்கை இந்த ரெண்டு பாணிகளுக்கும் நடுவே சிக்கி தத்தளிக்கிறது.


உ.தா., இன்றைய ஆட்டத்தில் பந்து சிறிது திரும்பினாலும் இலங்கை மட்டையாளர்கள் சுழலுக்கு அல்ல, அவசர ஆட்டத்திற்கே அவுட் ஆனார்கள். ஏதோ வயிற்றுப்போக்கு வந்து உடனடியாக பாத் ரூமுக்கு வரிசை கட்டுவது போல ஒரு ஆட்டம். இரண்டு ஓவர்கள் ரன்கள் வராவிட்டால் உடனே ஒரு சிக்ஸர், பவுண்டரி அடிக்க வேண்டும் எனும் பதற்றம். (இது அவர்கள் உள்ளூரில் அதிகமாக ஆடும் டி-20யால் இருக்கலாம்.) மாறாக, அணித்தலைவர் ஷனாகா, திறமை குறைந்தவர் என்றாலும், நிதானமாக நேரம் எடுத்து ஆடினார். அவரிடம் இருந்து இந்த வயிற்றுப்போக்கு வரிசையாளர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.


ஒரு நல்ல விசயம் இலங்கையிடம் கருணரத்னே, சமாரா போன்று திறமையான ஆல்ரவுண்டர்கள் / கீழ்வரிசை மட்டையாளர்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் கிளிக் ஆனாலும் ஒரு சிறந்த வெள்ளைப் பந்து அணியாக இலங்கையால் உருவாக முடியும்.


இந்த ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக ஆடி 262க்கு கொண்டு வந்ததைப் பார்த்த போது மத்திய வரிசையாளர்கள் வயிற்றைப் பற்றி கவலைப்படாமல் ஆடி இருந்தால் 292-300 கூட அடித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...