முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெற்றிக்கண்




ஒரு படத்தை தழுவி தமிழுக்கு ஏற்ப மாற்றி படமாக்கலாம், அல்லது உரிமம் பெற்று ஷாட் மாறாமல் திரும்ப எடுக்கலாம். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மிலிந்த் ராவ் தனது “நெற்றிக்கண்ணில்” கொரியன் படமான Blindஐ ஷாட்டுக்கு ஷா, வசனத்துக்கு வசனம், ஒரு சிறிய சொல்லைக் கூட மாற்றாமல் எடுத்திருக்கிறார். எந்தளவுக்கு என்றால் முதலில் வரும் கார் விபத்துக் காட்சியில் அடிபட்ட நயன்தாரா எழுந்து தடுமாறி நடந்து வரும் ஷாட்களில் அவரது உடல்மொழி கூட அப்படியே காபியாக இருக்கிறது. இயக்குநர் Blind படத்தை ஒவ்வொரு காட்சியாக நடிகர்கள், ஒளிப்பதிவாளர், செட் அமைப்பாளர் போன்றோரிடம் போட்டுக்காட்டி அப்படியே திரும்ப செய்யக் கேட்டிருக்கிறார் என நினைக்கிறேன். வில்லனின் கண்ணாடி முதற்கொண்டு அட்டைக்காப்பி. ஒரு வசனத்தில் மட்டும் “ஹீட்டரை இயக்கட்டுமா?” என்பதை “ஏஸியை போடட்டுமா?” என மாற்றி இருக்கிறார்கள். நல்லவேளை, சென்னை வெக்கையில் ஹீட்டர் எல்லாம் போட முடியாதல்லவா! “பிளேக் பீன் நூடுல்ஸ் சாப்பிட்டிருக்கீங்க நீங்க” என நாயகி சொல்வதை “வெங்காய பஜ்ஜி சாப்பிடுருக்கீங்க” என நயன் சொல்வதாக மாற்றி இருக்கிறார். இதையும் பாராட்டுகிறேன். இப்படி அட்டைக்காப்பி எடுப்பவர் எப்படி துணிச்சலாக “திரைக்கதை, இயக்கம்” என தம் பெயரை போட்டுக்கொள்கிறார் என்பதே தமிழ் சினிமா குறித்து அடிக்கடி என்னை ஆச்சரியப்படுத்தும் விசயம்.

ரீமேக்கை இன்னும் சற்று படைப்பூக்கத்துடன் செய்திருக்கலாம்.

ஒரு விசித்திரம் என்னவென்றால் “நெற்றிக்கண்” பல இடங்களில் மிஷ்கின் படங்களை நினைவுபடுத்துகிறது. கொரியன் படங்களை தமிழில் பலமுறை இறக்குமதி பண்ணியது அன்னார் எனபதாலா? ஆனால் ஒரிஜினல் கொரியன் படத்தைப் பார்க்கும் போது மிஷ்கின் நினைவுக்கு வருவதில்லை. இது ஏன் என்று தான் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...