முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கிலாந்தின் கிரிக்கெட் பார்வையாளர்கள்



டிரெண்ட் பிரிட்ஜில் நடக்கும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரைப் பார்க்கையில் என்னை ஆச்சரியப்படுத்தும் அம்சம் இங்கிலாந்து ஆதரவு பார்வையாளர்களின் வயது - 60 சதவீதத்துக்கு மேல் வயசாளிகள். மிச்ச ஆட்கள் நாற்பது வயதுக்கு மேலானவர்கள். இதுவே இந்திய பார்வையாளர்கள் என்றால் பெரும்பாலும் 40 வயதுக்குக் கீழானவர்கள். ஆனால் இங்கிலாந்தில் நடக்கும் டி-20 போட்டிகளில் நிறைய இளைஞர்கள் அரங்குக்கு வந்து வண்ணமயமாக குதூலகமாக இருப்பதை காண்கிறேன். டெஸ்டைப் பொறுத்தமட்டில் இங்கிலாந்தின் ஆதரவாளர்கள் தாத்தாக்களும் பாட்டிகளுமே. இதுவே இந்திய விளையாட்டரங்குகளில் டெஸ்ட் போட்டிகளிலும் முப்பது வயதுக்கு கீழானவர்களே அதிகம் வருகிறார்கள் என்பது தொடர்ந்து நேரடியாக டெஸ்ட் போட்டிகளை அரங்கத்துக்கு சென்று கண்டவன் என்ற முறையிலும் டிவியில் நிறைய பார்க்கிறவன் எனும் வகையிலும் சொல்லலாம். ஏன் இந்த வித்தியாசம்? இத்தனைக்கும் இந்தியாவில் பழைய ஆட்கள் இன்னும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர்களே. ஒருவேளை அவர்கள் சமகால கிர்க்கெட்டில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறார்களா, அதே கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத்தின் நினைவுகளில் இருந்து மீளவில்லையா அல்லது அவர்கள் வந்து பொறுமையாக அமர்ந்து பார்க்கும் படி இந்தியாவின் விளையாட்டு அரங்குகளின் கட்டமைப்பும், கட்டணமும் இல்லையா?


இங்கிலாந்தின் வயசாளி பார்வையாளர்களிடம் இன்னொரு சுவாரஸ்யம் ஆண்களுக்கு இணையாக நிறைய பெண்களும் புள்ளிபோட்ட கவுன், செயின் கண்ணாடி அணிந்த, கையில் கேக்கை வைத்து அமர்ந்திருக்கும் காட்சி தான். ஏதோ ஒரு மகிழ்ச்சியான முதியோர் பூங்காவைப் போல தோற்றமளிக்கிறது மைதானமே. 


இன்னொரு அழகான விசயம் - இந்த வயசான பார்வையாளர்கள் சுலபத்தில் உணர்வுவயப்படுவதில்லை. இங்கிலாந்தின் விக்கெட் விழும்போது தலையில் கை வைப்பதில்லை. சிலைபோல அமர்ந்திருக்கிறார்கள். முகத்தில் சலனமின்றி பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு அழகிய ஷாட் இங்கிலாந்து வீரரரால் அடிக்கப்படும் போது அவர்கள் அதே சலனமற்ற பாவனையுடன் கைகளை மென்மையாகத் தட்டுகிறார்கள். ஏதோ புறாக்கள் பறந்தெழும் மெல்லோசை மைதானத்தில் பரவுகிறது. ஷாட் அடிக்கப்பட்ட சப்தம் அதைவிட மேலாக ஒலிக்கிறது. இதுவே இந்திய மைதானம் என்றால் 90% ஆட்கள் ஆட்டத்தையே பார்க்காமல் பரஸ்பரம் பேசுவது, போனில் யாரிடமோ கதையளப்பது, குதிப்பது, குறுக்குமறுக்குமாய் ஓடுவது, மெக்ஸிக்கன் வேவ் பண்ணுவது, எல்லைக்கோட்டில் களத்தடுப்பு பண்ணும் வீரர்களை நோக்கி கூவுவது என ஒரே அல்லோலப்படுவார்கள். 10% ஆட்களே ஆட்டத்தை கவனிப்பார்கள். அதுவும் ஒரு ஷாட் அடிக்கப்பட்டதும் அதை கவனிக்காதவரே உள்ளுணர்வால் அறிந்து ஓவெகக் கத்தி எழுந்து துள்ளுவார்கள். அவர்களைக் கடந்து அமர்ந்திருப்பவர்களால் பந்து எங்கே போகிறது எனப் பார்க்க முடியாது. அடுத்து பேட்ஸ்மேன் ரெண்டு பந்தை கட்டை வைக்கும் வரை உட்கார மாட்டார்கள். நான் சொல்வது டெஸ்ட் ஆட்டங்களில் தான், ஒருநாள், டி-20 போட்டிகளில் அல்ல. 


இந்திய மைதானங்களில் இருக்கும் போது நமக்கு ரொம்ப வயசாயிடுச்சோ என எனக்கு அடிக்கடித் தோன்றும். நானெல்லாம் இங்கிலாந்தில் பிறந்து பக்கத்தில் ஒரு பாட்டியுடன் கேக், வைன் என வைத்துக் கொண்டு கிரிக்கெட் பார்க்க வேண்டியவன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...