முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜான்டி ரோட்ஸ்கள் இனித் தேவையில்லை!


 

இன்றைய இந்தியா-தென்னாப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளரும் தற்போது தமிழ் வர்ணனையாளராக இருப்பவருமான ஶ்ரீதர் "தென்னாப்பிரிக்கா 20 ரன்களையாவது களத்தடுப்பில் சேமிப்பார்கள், ஆகையால் 280 எனும் இலக்கானது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆடும் போது 300ஆகிறது" என்று சொன்னார். இது ஒரு காலாவதியாக கருத்து என்று எனக்கு அப்போதே தோன்றியது. ஶ்ரீதர் சொன்னதைப் போல தென்னாப்பிரிக்க தடுப்பாளர்கள் பாய்ந்து விழுந்து உருண்டு புரண்டு களத்தடுப்பு பண்ணினார்கள். நான்கு, மூன்று ஓட்டங்கள் எனத் தடுத்தார்கள். ஆனால் மட்டையாடி விரட்டி சென்ற இந்தியா வெகு சுலபமாக போட்டியில் வென்றது. ஏன் எப்படி?

ஶ்ரீதர் சொல்லும் விதி 2010 வரையிலான கிரிக்கெட்டில் மட்டுமே செல்லுபடியானது. இன்று மட்டையாளர்களால் எப்போது வேண்டுமெனிலும் சிக்ஸர் அடிக்க முடியும். அதனால் ஸ்டிரைக் ரேட் பற்றி அவர்கள் துவக்கத்தில் கவலைப்படுவதில்லை. தேவையான ரன் ரேட் 7-8 போனாலும் அது அவர்களை அலட்டுவதில்லை. பந்தை எப்போது வேண்டுமெனிலும் மைதானத்துக்கு வெளியே அடிக்கலாம் எனும் போது களத்தடுப்பாளர்கள் அசகாய சூரர்களாக இருந்தாலும் பயனில்லை. எல்லைக் கோட்டுக்கு வெளியே 5-6 களத்தடுப்பாளர்களை நிறுத்தினால் தான் உண்டு.

கட்டுப்பாடான, வேகமான களத்தடுப்பு எல்லைக் கோட்டிலோ உள்வட்டத்தில் குறிப்பாகவோ 90களில் ரன் ரேட்டை வெகுவாகக் குறைத்து பல விக்கெட்டுகள் விழக் காரண்மாகியது. அதுவே இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை இரும்புக் கோட்டைகள் ஆக்கின. அந்த காலம் முடிந்து விட்டது. இப்போது பந்து வீச்சாளர் இந்த களத்தடுப்பின் அழுத்தத்தை பயன்படுத்தி நன்றாக வீசி விக்கெட்டும் எடுக்க வேண்டும். உயரக் கேட்சுகள் வரும் போது அவற்றைப் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் மூன்று ஓவர்களில் 10 ஓட்டங்களில் எடுத்து விட்டு அடுத்த இரண்டு ஓவர்களில் மூன்று சிக்ஸர்கள் அடித்து ரன் ரேட்டை இயல்பாக்கி விடுவார்கள்.

இன்று சிக்ஸர் அடிக்கும் மட்டையாட்ட பாணியானது கிரிக்கெட்டை தலைகீழாக மாற்றி உள்ளது. 5வது நாள் டெஸ்ட் போட்டியில் 350 ஓட்டங்களை இலக்காக வைத்தால் கூட அடித்து விடுகிறார்கள். இருபது ஓவர்களில் 12 சிக்ஸர்கள் அடிக்க முடிந்தால் போதும் ஆட்டத்தின் போக்கே மாறி விடும். Bazball! டி20யில் எல்லாம் சொல்லவே வேண்டாம் - எல்லைக்கோட்டுக்கு வெளியே போகும் பந்தை ஒருவர் பாய்ந்து தட்டி விட இன்னொருவர் பிடிக்கிற கேட்சுகள் கூட அவை விக்கெட்டுகள் என்பதாலே முக்கியமாகின்றன. இன்று ஓட்டங்களைத் தடுக்கும் களத்தடுப்பல்ல, உயரக் கேட்சுகளை எடுக்கும் தடுப்பாளர்களே அவசியமாகிறார்கள். அவர்களே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். ஏனென்றால் விக்கெட் எடுக்காமல் இன்று ரன்களின் பொழிவைத் தடுக்க முடியாது. இன்றைய போட்டியில் கூட இஷான் கிஷன் மகராஜின் பந்து வீச்சில் சிக்ஸர்கள் அடித்ததும் போட்டி திசை மாறி விட்டது. களத்தடுப்பாளர்கள் உயிரைக் கொடுத்து பவுண்டரிகளைத் தடுத்தது வீணாகி விட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...