முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உண்மையை சொன்னேன்



வேறு ஒருவரின் பொங்கல் வாழ்த்துகள் பதிவில் நண்பர் பால்ராஜ் துளசிரா இப்படி எழுதியிருக்கிறார். இதைப் போல வேறு பலர் என்னிடம் போன் செய்து சொல்லுகிறார்கள். புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த போதும், என்னுடைய நூல் வெளியீட்டின் போதும் சொன்னார்கள். புத்தகக் கண்காட்சி வெளியில் ஒரு இலக்கிய அமைப்பை சேர்ந்த நண்பர் என் கையைப் பற்றிக் கொண்டு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார் - "உங்கள் எழுத்தில் உண்மை இருக்கிறது. படிக்கும் போது அது வெளிப்படையாகவே தெரிகிறது." 

மனித உறவுகள், நடத்தை, குடும்ப உறவுகள் பற்றி பாசாங்கின்றி எழுதுகிறேன் என்றார். "அப்படி எழுதுவதால் சிலர் என்னை வெறுக்கக் கூடும் என்றறிவேன். ஆனால் அது என் மீதானது, ஒரு கருத்தின் மீதானது என்றும் அறிவேன். அதனால் பிரச்சினையில்லை." என்றேன்.

வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியாதோர் நேரடியாக என்னைக் காணும் போது வந்து பாராட்டும் போது வெளிப்படையாகப் பேசுவோருக்கு இங்கு எந்தளவுக்கு பஞ்சம் நிலவுகிறது, சமூகவலைதள யுகத்தில் status quoஐ ஒட்டி எழுதுவோராக நாம் எந்தளவுக்கு மாறிவிட்டோம் என வியப்பேற்படுகிறது. போனிலோ நேரிலோ பேசும் கருத்துக்களை வெளிப்படையாக எழுத அஞ்சுகிறார்கள் - தம்மை பிற்போக்கு என சொல்லிவிடுவார்களோ எனும் அச்சம். இந்த உலகில் எத்தனையோ பித்தலாட்டங்கள் உள்ளன. அவற்றை நாம் வெளிப்படையாகப் பேசுவதே அவற்றை எதிர்க்கும் வழி. பார்ப்பனிய, சனாதன, இந்துத்துவ எதிர்ப்பு மட்டுமே எதிர்ப்பு அல்ல. உங்கள் பக்கத்தில் உள்ள அவலங்களைப் பற்றி பேசுவதும் தான்.

இனிமேலும் இப்படித்தான் இருப்பேன்.

ஆனால் யாருடைய கண்ணையும் நான் திறப்பதாக நம்பவில்லை. ஆனால் மக்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றை, அவர்களுக்கு இதுதானே நிஜம் எனத் தோன்றும் ஒன்றை, ஆம் அது தான் வேறொன்றுமில்லை என நான் சொல்கிறேன். எனக்குத் தெரிந்த அளவில் இப்போதைக்கு இதுதான் சரி என்கிறேன். அதைத் தாண்டி எல்லாராலும் ஏற்கத்தக்க, எல்லாருடைய நெஞ்சையும் நக்குகிற கருத்துக்களில் எனக்கு ஆர்வமில்லை, அவை நமக்குத் தேவையுமில்லை என்கிறேன். அரசியல் சரித்தன்மை தேவையில்லை என்கிறேன்.

 அவ்வளவு தான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...