முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மர்ம யோகி




கிஷோர் கெ ஸ்வாமி எவ்வளவு பெரிய ஊடக புரோக்கர், மிரட்டிப் பணம் பறிக்க ஆட்களை செட் செய்யும் ஆசாமி என இப்போது வெளிவந்திருக்கும் நிலையில் சில விசயங்கள் விளங்குகின்றன:

கிஷோர் பாஜக ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொண்டாலும் அவருக்கு எந்த குறிப்பிட்ட கொள்கையும் இல்லை. குடி / போதைப்பொருள், அதிகாரம், பணம் மட்டுமே அவரது மூச்சிருக்கும் மூன்றெழுத்து. அவருக்கு அனேகமாக எல்லா கட்சிகளுக்குள்ளும் ஆட்கள் இருக்கிறார்கள்.

இந்த 'ஆட்களும்' இவர் சேற்றை வாரியடித்தும், தன் அரசியல் தொடர்புகளையும் ஊடக அடிமைகளையும் காட்டியும் அவர் மிரட்டி சம்பாதித்தவர்களே. 

இந்த நபர் இத்தனைக் காலமும் தனிமனித அவதூறுகளில் ஈடுபட்டது அவரது அரசியலுக்காகவோ, ஆபாசமான, கேவலமான மனநிலையாலோ அல்லது மனப்பிரச்சினையினாலோ அல்ல - ஒவ்வொன்றும் ஒரு டீலிங். "உங்க பொண்ணை நாங்க தூக்கிட்டோம். அதனால நீங்க என்ன பண்ணுங்க..." என போன் போடுவார்களோ அந்த பணியை இவர் அவதூறு செய்து ஆற்றி வருகிறார்.

பலருக்கும் இவர் பயன்பட்டு வந்ததாலே இத்தனை ஆண்டுகளாக நிலைத்திருக்கிறார் (அதாவது உயிருடன் இருக்கிறார்). 

இவரை திமுக அரசு கைது செய்தது கலைஞரை அவதூறு செய்ததற்காக மட்டும் இருக்காது - வேறு எங்கோ பெரியாக கை வைக்கப் பார்த்து அதற்காக மேலிடத்துக்கு புகார் செல்ல இந்த அவதூறை ஒரு காரணமாக வைத்து தூக்கி இருக்கிறார்கள். 

வெளியே வந்த பின்னரும் கிஷோருக்கு 'மவுசு' குறையவில்லை.

பணம் வரும் வழியை நோக்கி விளக்குப் பிடித்து அழைத்துப் போகிற 'தேவதூதன்' என்பதாலே கொள்கை முரண் கொண்டோரும் அவரிடம் இணக்கமாக இருக்கிறார்கள். இன்று தமிழ் தேசிய, திராவிட, தி.க என எத்தனையோ கொள்கை கொண்டுள்ளவர்களின் சேனல்களின் விவாதங்களே கிஷோர் கட்டுப்படுத்தவே வாய்ப்பதிகம். 

ஒவ்வொரு சேனலிடமும் பேரம் பேசி இன்னின்னாருக்கு அதனால் ஆபத்து வராமலோ / லாபம் ஏற்படவோ ஏற்பாடு பண்ணிக் கொடுப்பதே அவரது பணி எனும் போது இன்று தினமும் நடத்தப்படும் பல சேனல் விவாதங்கள் ஒரே பேட்டர்னில் இருப்பதைப் பார்த்து அது ஏன் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. நாம் இன்று மிகுந்த மரியாதையுடன் நோக்கும் சில நெறியாளர்கள், கருத்தாளர்களும் கஷோரிடம் இருந்து வாங்கிக் குடிப்பவர்களாகவே இருக்க வேண்டும். 

கிஷோரைப் போன்றவர்கள் கூலிப்படை தரகர்களைப் போன்றவர்கள் ("பட்டியல்" கொச்சின் ஹனீபா). பரத்தும் ஆர்யாவும் செத்தாலும் புதிதாக டீ கிளாஸ் கழுவும் பையனை இறக்கிவிட்டு தொழிலைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அம்பலமாவது கிஷோரைப் போன்றவர்களுக்கு கூடுதலான பலமாகுமே ஒழிய சீரழிக்காது (எதாவது இருந்தால் தானே அழிக்க?). ரவீந்திரன் துரைசாமியைப் போல கெத்தாக "ஆமா வாங்குவேண்டா, என்னாடா அதுக்கு இப்ப?" என பேசிக் கொண்டிருப்பார்கள்.

மாதேஷ், சவுக்கைப் போல இவர்களுக்கு நன்மதிப்பு அவசியமில்லை. பாதரச மனிதர்கள் இவர்கள். நசுக்கவே முடியாது. தப்பித்து ஓடிவிடுவார்கள். பார்க்க லூஸைப் போல இருப்பதும் ஒரு முகமூடியே. கிறுக்கனைப் போல நடந்து கொள்வதும் தம் வியாபாரத்துக்கான வேடமே.

தமிழின் வணிக எழுத்தாளர்கள் கூட இந்தளவுக்கு தம் ஒவ்வொரு சொல்லையும் விற்று காசாக்கியிருக்க முடியாது. இத்தனைக்கும் கிஷோர் வகையறாவுக்கு எதையும் யோசிக்கவும் எழுதவும் தெரியாது. ஆனால் வேறேதோ தெரிந்திருக்கிறது. 

கிஷோர் நிஜத்தில் ஏன் கைதானார் என யாராவது இனி வீடியோ போட்டால் தான் உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...