முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்த காலம் இந்த காலமாக வேண்டும்

"We're here to win - whether it's two days or five days, it doesn't really matter. We don't want to prepare a pitch where the results are not coming. We are here to win." - Rohit Sharma

ரோஹித்தின் இந்த கருத்து மிக மட்டமானது - இப்படியான ஆடுதளங்களில் உருட்டி உருட்டி இந்திய மட்டையாளர்கள் தம் ஆட்டத்திறனை இழக்கப் போகிறார்கள். ஒரு ஆடுதளம் எல்லா வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். வெறுமனே சுழலர்கள் மட்டும் செயல்பட எதற்கு ஒரு டெஸ்ட் போட்டி? கடந்த மூன்று போட்டிகளிலும் அதற்கு முன் வங்கதேசத்தில் நடந்த போட்டிகளிலும் ஒருவர் கூட சதமடிக்கவில்லை. 
வேகப்பந்து வீச்சாளர்களும் மொத்தமாக இருபது ஓவர்கள் கூட் வீசுவதில்லை. ஒரே ஒரு வேகவீச்சாளருடன் ஆஸ்திரேலியா இரண்டாவது போட்டியில் ஆடியது. என்னவொரு அவலம். 1930களில் தான் இந்தியா இப்படி ஆடியது. நாம் 90 ஆண்டுகள் பின்னால் போய் விட்டோம். ஆஸ்திரேலியாவைத் தவிர அனேகமாக எல்லா கிரிக்கெட் ஆடும் நாடுகளும் இப்படி பந்துவீச்சுக்கு மிக அதிகமாக ஆதரவளிக்கும் ஆடுதளங்களை உருவாக்கி ஆட்டம் 3 நாளுக்குள் முடிந்தால் ஓக்கே எனும் சமாதானத்துக்கு வந்துவிட்டார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற புள்ளிகளைப் பெறும் ஆவேசம். டெஸ்ட் போட்டி வடிவத்துக்கு தெம்பளிக்க உருவாக்கப்பட்ட உலக டெஸ்ட் போட்டித்தொடர் எனும் திட்டம் டெஸ்ட் வடிவத்தையே சிதைத்து விட்டது. 

இதை சரி செய்ய இரண்டு விசயங்களை ஐ.சி சி செய்ய வேண்டும்:
 
அயல் நாடுகளில் ஆடும் போட்டிகளில் பெறும் வெற்றிக்கு இரண்டு மடங்கு அதிக புள்ளிகளை அளிக்க வேண்டும். அத்துடன் ஆறாத அப்பத்தை வாயிலிட்டு திணிப்பதைப் போல கிரிக்கெட் ஆடுவது முடிவுக்கு வரும். சமநிலை வரும்.

அடுத்து, இங்கிலாந்து டெஸ்ட் அணி செய்வதை பிற அணிகளும் செய்ய வேண்டும் - Bazball. அதற்கு ஒரு அணி வெற்றி பெறும் போட்டிகளில் 5க்கு மேல் சராசரி ரன்ரேட்டுடன் மட்டையாடினால் மட்டுமே இரட்டிப்பு புள்ளிகள் என bazball விதியை உருவாக்க வேண்டும். அப்போது மெதுவான, பவுன்ஸ் இல்லாத, முதல் ஓவரிலே பம்பரம் போல் திரும்புகிற ஆடுதளங்கள் ஒழிந்துவிடும். ஆட்டம் இயல்பாகவே 5வது நாள் வரை போகும்.

 நான் முன்பு சென்னையில் இருக்கையில் ஐந்து நாள் டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் போய் வந்திருந்த போட்டிகள் நினைவுக்கு வருகின்றன. அது அந்த காலம் ஆகிவிட்டது. அது மீண்டும் இந்த காலம் ஆக வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...