முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆர். அபிலாஷுடன் நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்





உங்களில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நாவல் உள்ளது. அந்த நாவலை உங்களால் மட்டுமே எழுத முடியும். அதை நீங்கள் எழுதாத பட்சத்தில் அது இந்த உலகத்துக்கும், உங்கள் பண்பாட்டுக்கும் ஒரு நட்டமாக மாறும். அதை எழுத நீங்கள் ஒரு எழுத்தாளனாக இருக்க அவசியம் இல்லை என்றாலும் கூட அதை எழுதுவதற்கான ஒரு அடிப்படையான பயிற்சி, எழுத்து வடிவத்தின் நுட்பங்கள் பற்றின அறிவு, வாசிப்பு, நேர நிர்வாகத் திறன், ஒழுக்கம் வேண்டும். இவை அனைவரிடமும் இருப்பதில்லை. அதே நேரம், உங்களிடம் எழுத ஆர்வம் மட்டும் உண்டெனில், மேற்சொன்ன தகுதிகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளவும் உங்கள் பெயரை நீங்கள் வாழும் காலத்திலேயே மக்கள் நினைவில் ஆழமாக பதிக்கத் தக்க நாவலொன்றை உங்களால் எழுத நிச்சயமாக முடியும். அதற்கான பயிற்சி அளிப்பதும், அந்த இடத்தை நோக்கி உங்களை அழைத்து செல்வதுமே இந்த வகுப்பின் குறிக்கோள்.


நாவலே நம் காலத்தில் அதிகம் படிக்கப்படும் கதைவடிவம். சிறுகதைகளைக் கொண்டு உங்களால் உடனடி கவனத்தைப் பெற முடியும் என்றாலும் சிறுகதைத் தொகுப்புகளை விட நாவல்களே புத்தக சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்றன. பெரும் கவனத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அரிதாகவே ஒரு சிறுகதைத் தொகுதி பரவலான வாசகர்களைப் போய் அடைகிறது. அடுத்து, நீங்கள் எதிர்காலத்தில் திரைக்கதையாளராக விரும்புபவர் என்றாலும் ஒரு பெரிய கதைக்கட்டமைப்பு, பாத்திரங்களின் பிரஞ்சத்தை உருவாக்கவும், தொடர்ச்சியாக எழுதவும், நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், புனைவின் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளவும் முக்கியமான பயிற்சியாக நாவலை எழுதிப் பார்ப்பது இருக்கும் (இரண்டின் விதிமுறைகளும் அடிப்படையில் ஒன்றுதான்.) நீங்கள் சிறுகதைகள் எழுதி பழக்கம் கொண்டவர் என்றாலோ பேஸ்புக்கில் சுவைபட எழுதும் பதிவர் என்றாலோ, அடுத்த கட்டமாக நாவலாசிரியராக விரும்பும் பட்சத்தில் உங்களுக்கு அடிப்படையான பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. இந்த வகுப்பு உங்களுக்கானதே

இத்தகைய வகுப்புகள் ஆங்கிலத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மேலைநாடுகளில் அதிகமாகவும் (MFA in Creative Writing), தற்போது இந்தியாவில் கல்லூரிகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்படுகின்றன. தமிழில் கடந்த சில ஆண்டுகளாக் பயிற்சிப் பட்டறை வடிவிலும், காணொளி வழியாகவும் நடந்து வருகின்றன. ஆனால் கல்விப்புல முறைமையுடன் செறிவான பாடத்திட்டத்துடன் கிட்டத்தட்ட MFA போன்றே நடத்தப்படும் நாவல் எழுத்து வகுப்பாகநாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்இருக்கும்.   




நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்வகுப்பு பங்கேற்பாளர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் மாலை வேளையில் ஒரு மணி நேரம் எனும்படி மொத்தமாக இரண்டு மாதங்கள் (மொத்தமாக 16 மணிநேரங்கள்) இணையவழியில் (gmeet) நடத்தப்படும். இவ்வகுப்பு தொடர்ச்சியாக வருடம் தோறும் ஆறு முறைகள் நடத்தப்படும். முதல் வகுப்பு ஜூன் 10, 2023 முதல் ஆரம்பமாகும். சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மாலை 6-7 ஆன்லைன் வகுப்புகள் நடக்கும்.  

இதில் எந்த வயதினர் வேண்டுமெனிலும் கலந்துகொள்ளலாம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...