முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்பு - ஒரு எதிர்-சென்டிமெண்டல், எதிர்-கதை நாவல்

 


சாருவின்அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனுநாவலை நான் நீதிமன்றத்துக்கும் அலுவலகத்துக்குமாக அலைந்து கொண்டிருந்த கொடூரமான காலத்தில் வாசித்தேன். அப்போது நான் அனுபவித்த மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து என்னைக் காப்பாற்றியது அந்நாவலே. எனக்கு ஒரு பழக்கம் - எதைப் படித்தாலும் உடனே எழுதிவிட வேண்டும், அல்லாவிடில் அடுத்தடுத்த புத்தகங்களுக்கு நகர்ந்துவிடுவேன். அப்படித்தான் இதைப் பற்றி எழுதும் வாய்ப்பு விட்டுப் போனது. அதனால் அன்று தோன்றியதை என் நினைவில் இருந்து இப்போது கீழ்வருமாறு எழுதுகிறேன்.


இந்நாவல் என்னைக் கவர்ந்ததற்கு மூன்று காரணங்கள்:


தமிழில் வந்த முழுமுதல் எதிர்-செண்டிமெண்டல் நாவல் இதுதான். பாசம், நேசம் மாதிரியான செண்டிமெண்டுகளுக்கு நாம் அடிமையாகி இருக்கிறோம். அதுவும் இங்குதான் காதலுக்காக அன்றி காதல் பற்றின நம்பிக்கைக்காக நம்மை ஒப்புக் கொடுத்து கைகால்களில் சங்கிலியைப் பிணைத்துக் கொண்டு நம்மையும் அதற்காக வதைத்துக் கொள்கிறோம். இது என் தலைமுறையினருக்கு உள்ள பிரச்சினை மட்டுமல்ல. இன்றைய தலைமுறையினரும் கூட அப்படித்தான். இன்றைய 17 வயதுப் பெண்கள் தம் காதலர்களுக்கு பொதுவெளியில் வைத்து ஒரு வயதுக் குழந்தைக்கு செய்வதைப் போல சோறூட்டுவதைப் பார்க்கிறேன். அவர்கள் தம் காதலர்களின் தோளில் தொங்கியபடியே பயணிப்பதை, அவர்களுடைய போன் கடவுச்சொல்லை வாங்கி வைத்து சதா கண்காணிப்பதைப் பார்க்கிறேன். ஒருவர் என்னென்ன பேசலாம், யோசிக்கலாம், எங்கெங்கு போகலாம், எதை சாப்பிடலாம், எப்போது எப்படி சாப்பிடலாம், எதை அணியலாம் எந்த நேரத்தில் எங்கு இருக்கலாம் என்றெல்லாம் முடிவெடுக்கும் உரிமையை இன்னொருவரிடம் கொடுப்பதே இங்கு நேசம், பாசம், காதல் உறவாக இருக்கிறது. இப்படி சுதந்திரத்தை ஒப்படைப்பதில் ஒரு சுயவதை இன்பம் - ஒரு மசோக்கிஸம் - இருக்கிறது. இதைப் பற்றி தமிழில் சிறந்த படைப்பாளர்கள் எழுதியதில்லை என்பதோடு மட்டுமல்லாமல் நமது 80 ஆண்டுகால நவீன எழுத்துக்களை எடுத்துப் பார்த்தால் அது பெரும்பாலும் இந்தமெசோக்கிஸத்தைகொண்டாடுவதாகவே இருக்கிறது. சரி, இது ஏன் இப்படி இருக்கிறது எனப் பார்ப்பதற்காக பின்னால் போனால் நமது பக்தி இலக்கியம் முழுக்கவே இப்படித்தான் இருக்கிறது. அதன் சட்டை பேண்ட் இட்ட வடிவமே பெரும்பாலும் நாம் நவீன இலக்கியம் எனக் கொண்டாடுவது. இந்த செண்டிமெண்டல் பண்பாட்டை சாரு பகடி செய்கிறார் எனபதை அதன் ஒரு பகுதியாக இருந்தே அதைப் பண்ணுகிறார் என்பதே என்னை வெகுவாக கவர்ந்தது.


நீங்கள் சு.ராவின்ஜெ.ஜெ சில குறிப்புகளைபடித்தால் அதில் வரும் அறிவுஜீவி ஜெ.ஜெ தான் விமர்சிக்கும் பண்பாட்டுக்கு வெளியிலே நின்று கொண்டிருப்பான். ஆனால் இது எதார்த்தம் அல்ல - நிஜத்தில் நாம் எதை விமர்சிக்கிறோமோ நடைமுறையில் அதுவாகவே இருப்போம். சேற்றில் நின்று கொண்டேஅதோ பார், ஊரே சேறாக கிடக்கிறதுஎன்று கூவுவதே மனித இயல்பு. இதை முதலில் எழுதியவர் ஆதவன் தான். அடுத்து சாரு. ஆதவனிடம் எழுத்தாளன் எனும் ஒரு தன்னிலை இருக்கும். சாருவிடம் அதுவும் இல்லை. சாருவிடம் அந்த தன்னிலையே சேற்றில் மூழ்கி இருக்கும், சேறும் தானும் வேறுவேறல்ல என யோசிக்கும் தன்னிலை தான். அந்த தன்னிலை தன்னையும் உலகையும் இருவேறாகப் பார்ப்பதில்லை.


அடுத்து, இதிலுள்ள அபாரமான பகடியும், நகைச்சுவையும். கடும் துயரில் இருந்த காலத்தில் இது என்னை சிரித்து சிரித்து ஒரு தன்னறிவான பன்றியைப் போல மகிழ்ச்சியின் சேற்றில் ஊறியிருக்க வைத்தது. அந்த நகைச்சுவை தன்னை நோக்கியே செலுத்தப்படுவது, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டே செய்வது என்பதால் அதன் வலியுடன் கூடிய ஒன்றாக இருந்தது. அதனாலே சிரித்து முடிக்கையில்என்னடா இப்படி?” எனும் உணர்வையும் தந்தது. இதை ஒரு மெஸோக்கிஸ பகடி நகைச்சுவை என்று பார்க்கிறேன்.


கடைசியாக, இதன் மொழி. சாருவின் இசைநயமும் சரளமும் பெற்ற மொழியை நான் சொல்லவில்லை. இதன் கதைகூறலில் கதைத்தன்மைக்கு எதிரான ஒரு அம்சம் உள்ளது. அம்மொழியையே சொல்கிறேன் - சாருவின் ஏற்கனவே பதிப்பிக்கட்ட புனைவுகளிலும் இது உள்ளது. அப்புனைவுகள் கட்டுரைகளா கதைகளா என்றால் அந்த எல்லைகளை உடைத்த ஒரு கதைகூறல் என்று சொல்வேன். கதையென்று வந்துவிட்டால் அங்கு ஒரு சாராம்சப்படுத்தப்பட்ட தன்னிலை, அதற்கென ஒரு முறைமை, கால ஒழுங்கு, கால ஒழுங்கினோடே மனிதர்களின் இயல்புகளும், உணர்வுகளும், விழுமியங்களும் மாறுகிறது எனக் காட்ட வேண்டும் எனும் கட்டாயம் தோன்றிவிடுகிறது. இது எதார்த்த கதை வடிவின் பிரச்சினை மட்டுமல்ல. பின்நவீன கதைகளில் இந்த கதைச்சரடு அறுக்கப்படுகிறது என்றாலும் அது திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறது, ஒரு தொழில்நுட்பமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. சாரு இந்த விதிகளை உடைக்கிறார். அதற்காக அவர் சாரு நிவேதிதா எனும் ஒரு தன்னிலையை கற்பனை செய்கிறார். அதைக் கொண்டே நம்மிடம் பேசுகிறார், கட்டுரைகள் எழுதுகிறார், அதை கதையாகவும் வெளியிடுகிறார், அடிப்படையில் அந்த தன்னிலையே ஒரு கதையாடலின் பகுதி என்பதால், சாரு நிவேதிதா நமது சங்கப் பாடல்களில் வரும் தலைவன், தலைவியைப் போல ஒரு பாத்திரம் மட்டுமே என எனக்குத் தோன்றுகிறது. அவ்விதத்தில் சாரு நிவேதிதாவின் இருப்பின்மையெ சாரு நிவேதிதாவின் இருப்பு என்பது என் கருதுகோள்.

 இந்நாவலை வாசிக்கையில் நான் மிகவும் ரசித்தது அவர் நாவல் அல்லாமல் நாவலை எழுதும், கதையல்லாமல் கதையெழுதும் பாங்கைத் தான், அதன் பின்னுள்ள (தன்னிலையின் சாரம்சத்தை அழிக்கும்) தத்துவத்தை தான்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...