முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை - சரவணன் சந்திரன்

https://youtu.be/Gmc6g3lyeGw 

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்று சொல்வார்கள். ஓரளவிற்கு அது உண்மைதான். என்றாலும், எல்லா நேரங்களிலும் பொன்மொழி அடிப்படையிலேயே வாழ்வு நகர்கிறதா என்ன? காலத்துக்குக் காலம் ஒவ்வொன்றுமே மாற்றம் கண்டபடியேதானே இருக்கிறது?

அறைக்கு வெளியே வைத்தே, "டேய் செல்போன்ல பார்த்ததை எல்லாம் உள்ள பண்ண நினைக்காத அவங்க விருப்பமும் முக்கியம்" எனப் பையனிடமோ, "ஏம்மா இங்க பாரு. மொத நாள் கூடக் குறைய இருக்கும்தான். அதுக்காக நாளைக்கு காலையிலயே ஆண்மை இல்லாதவன்னு கோர்ட் வாசல்ல போயி நின்னிடாத" எனப் பெண்ணிடமோ சொல்கிற மாதிரிதான் காலம் இருக்கிறது.
இயற்கை உந்துதல் சார்ந்த இதிலேயே, நாசுக்குகளைச் சொல்லித்தர வகுப்புகள் இப்போது வந்து விட்டன. அதே போலத்தான் எழுத்து சார்ந்த வகுப்புகளும். கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியுமா? என்பது போன்ற கேள்விகள் இப்போது எழுகின்றன.
முழுக்க முடியாதுதான். ஆனால் என்னளவில் ஒரு விஷயத்தைக் கோடிட்டுக் காட்ட முடியும். இதுமாதிரியான வகுப்புகளின் வழியாகத் தயக்கத்தை உடைக்க முடியும். அது உடைந்து விட்டால் அப்புறம் உன்பாடு. என்னையே எடுத்துக் கொண்டால், நான் முதலில் எழுதியது நாவல்தான். ஐந்து முதலைகளின் கதை நாவல் வெளியீட்டு விழாவில் வைத்து, "முதல்லயே நாவல்தானா? சிறுகதைலாம் எழுதி பார்க்கலையா?" என்று குரலைத் தாழ்த்திக் கேட்டார் நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர். அவர் பல வருடங்களாகச் சிறுகதை எழுதுகிறார். ஆனால் நாவல் எழுதவில்லை இன்னும்.
காரணம், தயக்கம்தான் என்பதை உறுதியாகச் சொல்வேன். அந்தத் தயக்கத்தைச் சுற்றி ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டார், அவ்வளவுதான். ஏற்கனவே எழுத்து சார்ந்த துறையில் இருந்ததால் அந்தத் தயக்கத்தை என்னால் எளிதில் உடைக்க முடிந்தது. அப்புறம் என்னுடைய இயல்பான குணம். எதையும் நேருக்கு நேர் நின்று அச்சமின்றி உற்றுப் பார்ப்பது. அதனால் சாத்தியமாகி விட்டது. சரஸ்வதி கிருபையும் உண்டு.
எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தர் மிக நன்றாக எழுதுகிறார். அவ்வபோது எனக்கு அனுப்பி வைப்பார். அவரிடம் சொல்வதற்கு நாவலுக்குண்டான வாழ்க்கை ஒன்றும் இருக்கிறது. எழுதச் சொன்னால், "நாவலா? நானா? அது எப்படி முடியும்?" என்கிறார் படபடப்பாக. அந்த வடிவத்தைக் கண்டு அச்சப்படுகிறார். அந்த அச்சம் அவரிடம் இருந்து கழன்று கொள்கிற அன்று நிச்சயமாக நாவலை எழுதத் துவங்கி விடுவார்.
இதுமாதிரியான வகுப்புகளின் வழியாக அந்தத் தயக்கத்தையும் அச்சத்தையும் ஓரளவிற்குக் களைந்து விட முடியும் என்பதே என் கருத்து. பேயைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தாலே பேயைப் பற்றிய பயம் நிச்சயம் போய்விடும். அதற்காக தயக்கமும் அச்சமும் போய்விட்டது எனச் சும்மா நினைத்துக் கொண்டு குண்டுச் சட்டியில் குதிரையையும் ஓட்டி விட முடியாது. எந்த ஒரு விஷயத்தைச் செய்வதற்குமே ஆழ்ந்த பயிற்சியும் உழைப்பும் மிக முக்கியம். வெறும் கயிற்றில் முழம்போட முடியாது. முழம்கை வேண்டும் அதற்கு.
இப்போது எழுத்தாளர் அபிலாஷ் நாவல் குறித்த வகுப்பு ஒன்றை இணையம் வழியாக நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார். அபிலாஷை பொறுத்தவரை அவர் அடிப்படையில் ஆசிரியர் என்பதால் ஒரு விஷயத்தை எளிதாக விளக்கி விட முடியும். கூடவே எல்லா மொழி ஆக்கங்களையும் கூடுமான அளவிற்குப் படிக்கிறவர். தத்துவம் சார்ந்த படிப்பும் அவரிடம் இருக்கிறது.
அந்த வகுப்பில் நிச்சயம் பல்வேறு நாவல்கள் குறித்து பிரித்துத் தொகுத்துப் பேசுவார். இதன் வழியாக நாவல் என்கிற வடிவத்தின் மீது அச்சமற்ற ஒரு பிடிமானம் கிடைக்கக் கூடும். மலை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கை எட்டிப் பார்க்கையில், கம்பி வேலிப் பிடிமானம் இருக்கிற மாதிரி.
சந்தேகங்களைக் கேட்க முடியும். அதன் வழியாக உள்ளுக்குள் உருவாக்கி வைத்து இருக்கிற, ஒரு விஷயம் குறித்த தயக்கம் சார்ந்த கருத்துக்கள் உடைபடவும்கூடும். அந்தக் கருத்து உடைந்தால் போதும். முதலிலேயே சொன்ன மாதிரிதான். அதற்கப்புறம் உங்கள் பாடு. உள்ளுக்குள் திரண்டு வருகிற அந்த ஒன்றின் பாடு. எந்த விதை பொத்துக் கொண்டு மேலேறி வந்து விருட்சமாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் உரத்தை ஏந்திப் பெற்றுக் கொள்ளலாம், தப்பில்லை. தீவிரமாகப் பரிந்துரைக்கிறேன்.
(இந்த வகுப்பில் இணைய விரும்புகிறவர்கள் அபிலாஷின் பக்கத்திற்குச் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...