முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"அடிமைப்பெண்" எம்.ஜி.ஆர்கள்


இவ்வார "நீயா நானாவில்" ஒரு குழந்தை / ஒரு குழந்தைகள் பெறுகிற / பெற விரும்புகிற குடும்பங்களைப் பற்றி ஒரு விவாதம் நடைபெறுகிறது. எங்குமே ஒரு குழந்தைப்பேறில், வளர்ப்பில், ஆகிற செலவில், உழைப்பில் அப்பாவின் பங்கைப் பற்றின குறிப்பில்லை. பெண்கள் ஆளாளுக்கு கர்ப்ப காலத்தின் போது கஷ்டப்பட்டேன், ஐந்தாண்டுகள் என் வாழ்க்கையில் எஞ்சாய்மெண்டே இல்லாமல் போய்விட்டது, என் தொழில் வாழ்க்கை, சுதந்திரம் போய்விட்டது எனப் புலம்புகிறார்கள், அரட்டுகிறார்கள், மிரட்டுகிறார்கள். பேசின ஒன்று ரெண்டு ஆண்களும் "என் மனைவிக்கு வேலைக்கு போக வேண்டியிருக்கு, அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க, அவங்க மனசு புண்படும்" எனும் கணக்கில் சுரத்தே இல்லாமல் தன்னம்பிக்கையே இல்லாமல் பெண்களை ஒட்டியே பேசினார்கள். 
இதில் மூன்று பிரச்சினைகள் உண்டு:
ஆண்களின் முகமையை முழுக்க மறுத்துவிடுகிறார்கள். "நான் பெற்றுக் கொண்டேன், நான் பெற்றுக் கொண்டேன்" என்கிறார்களே, அதை எப்படித்தான் பெற்றுக் கொண்டார்கள் என அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு குழந்தையை ஒரு பெண் குந்தி தேவியைப் போல மந்திரம் சொல்லிப் பெற்றுக்கொள்வதில்லை. ஆனால் நிகழ்ச்சியில் பேசிய பெண்கள் எல்லாரும் குந்தி தேவியைப் போலவே நடந்துகொள்கிறார்கள்.

அடுத்து, ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் இன்று ஆண்களுக்கும் கடுமையான அழுத்தம் உள்ளது. தாமதமான திருமணம், விந்தணு குறைபாடு, மோசமான உணவுப்பழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம், பதற்றம் என ஏகப்பட்ட பிரச்சினைகள் ஆண்களுக்கும் உண்டு. ஆகையால் பெண் அளவுக்கு ஆணும் தான் இன்று குழந்தைப் பேறுக்காக உழைக்கிறான். குழந்தை பிறந்த பின்னரும் அதைப் பார்த்துக்கொள்வது, வளர்ப்பது என எல்லாவற்றிலும் அவன் பங்களிக்கிறான், அந்த எதிர்பார்ப்பை இன்று பெண்களே ஆண்களிடத்து வைக்கிறார்கள். அதை நிகழ்ச்சியில் ஒரு பெண் குறிப்பிடவும் செய்தார் - "எண் கணவர் முதல் குழந்தையைப் பார்த்துக் கொள்ள கஷ்டப்பட்டார். அதனால் அவரை மேலும் துன்புறுத்த விரும்பவில்லை." ஆனால் அந்த கணவர் இதில் தன்னுடைய முகமையை இழந்துவிடுவதை யாரும் கவனிக்கவில்லை. அடுத்து, ஒரு ஆண் தன் வாழ்வில் 18-23 ஆண்டுகள் வரை ஒரு குழந்தைக்காக தியாகம் செய்கிறான். குழந்தைக்காக சம்பாதிப்பது என இதை நாம் மகத்துவப்படுத்தினாலும் இந்த தியாகத்தை நாம் பொருட்படுத்துவதே இல்லை. ஏதோ அப்பாவே குடும்பத்தில் இல்லையென்பதைப் போல நடந்து கொள்கிறோம். "நீயா நானா" போன்ற நிகழ்ச்சிகளும் இதை முன்னெடுப்பது துரதிஷ்டவசமானது.

இரண்டாவதாக, இன்று விந்தணு வங்கிகள் இருந்தும் கூட ஏன் குழந்தைகள் கல்யாணம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்? ஏனெனில் ஒரு ஆணிடம் இருந்து மட்டுமே அவர்களுக்கு சாதி அந்தஸ்தும், சொத்தும் கிடைக்கிறது. இம்மாதிரி நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல பொதுவெளி விவாதங்கள், உரையாடல்களில் எங்குமே இந்த பங்களிப்பை யாரும் குறிப்பிடுவதில்லை. 40-50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஒரு விசயங்களும் குறிப்பிடப்பட்டன என்பதை நாம் சினிமா, கட்டுரைகள் என பல பனுவல்களில் பார்க்க முடியும். ஆனால் இன்றோ கல்யாணம் பண்ணி ஆணின் உடல், சாதி அடையாளம், அது வழியான சமூக அந்தஸ்து, சொத்து / பணம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டே ஆண்களை மகாபாரத பாண்டுவாக பாவித்துக் கொண்டு "நானே பெத்துக்கிட்டேன், நான் மட்டுமே தாங்க பெத்துக்கிட்டேன்" என கோருகிறார்கள். அதாவது ஆண் வேண்டும், ஆனால் அவனை அங்கீகரிக்க மட்டும் மாட்டோம் எனும் இடத்துக்கு நகர்ந்துவிட்டார்கள்.

மூன்றாவதாக, இந்த கால மத்திய வர்க்க தமிழ் ஆண்களை இந்த நிகழ்ச்சி பிரதிநுத்துவப்படுத்துகிறார்கள் என்றால் நிலைமை ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. எல்லாரும் "அடிமைப்பெண்" எம்.ஜி.ஆரைப் போல கூனலோடே நடக்கிறார்கள். (குறியீடே தான்) நிமிரவே மாட்டார்கள் போல. நிமிர்ந்தால் திமிர்பிடித்தவன், ஆணாதிக்கவாதி என புடைத்துவிடுவார்கள். வயதான ஆண்கள் மட்டுமே சற்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்கள். இவ்வளவு தன்னம்பிக்கையற்ற, பார்த்ததுமே ரெண்டு அடி பின்னுக்குப் போகிற ஒரு ஆணை ஒரு பெண் எப்படி விருப்பத்துடன் மணம் புரிய முடியும் என்பதும் புரியவில்லை. ஆகையால், வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்ளும் பண்பாட்டுக்கும் ஆணின் போதாமை, தகுதியின்மை, தன்னம்பிக்கையின்மைக்கும் ஒரு உளவியல் தொடர்புண்டு என நினைக்கிறேன். பணக்கார ஆணாக இருக்கும் போது இப்பிரச்சினை வருவதில்லை. ஏனெனில் பணம் அந்த ஆணுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் மதிப்பையும் கொடுத்து விடுகிறது. எண்பதுகள் வரை மரபும் பண்பாடும் அந்த மதிப்பை அவனுக்குக் கொடுத்தது. கடந்த நாற்பதாண்டுகளில் அதை ஆண்கள் இழந்துவிட்டார்கள். பெரும் பணக்கார ஆண்களைத் தவிர பிற ஆண்கள் ஒருவித பாதி ஆண்களாகவே பெண்களால் பார்க்கப்படுகிறார்களோ, அதனால் தான் பொருளாதார நெருக்கடி, வேலை அதிகம் என ஜல்லியடித்து இரண்டாவது குழந்தைக்கு சிவப்புக் கொடி காட்டுகிறார்களோ எனத் தோன்றுகிறது.

இது தானாக நடந்ததாக நான் நினைக்கவில்லை. கடந்த முப்பதாண்டுகளாக குறிப்பாக சந்தை, கல்விப்புலம், ஊடகம், சமூகக் கட்டமைப்பு என எல்லா இடங்களிலும் துணிந்து தன்னம்பிக்கையாக ஒரு பெண் பேசினால் அவனை ஆதிக்கவாதி, முரடன் என அடித்து காலி பண்ணிவிடுகிறார்கள். ஒரு பெண் திமிராக, முரட்டுத்தனமாக நடந்துகொண்டால் அதை தன்னம்பிக்கை, வளர்ச்சி, சமத்துவம் என்கிறார்கள். ஆங்கிலத்தில் தவறாது இதை இரு சொற்கள் வரை குறிப்பிடுகிறார்கள். ஆணின் நடத்தையென வந்துவிட்டால் அதை dominant என்றும், அதே நடத்தையை பெண் காட்டினால் assertive என்றும் சொல்கிறார்கள். இம்மாதிரி சொற்களே இன்று ஏகப்பட்ட அடிமைப்பெண் எம்.ஜி.ஆர்களை உண்டு பண்ணி விட்டன. 

இன்னொரு பக்கம் இன்றைய எதற்கு கல்யாணம் பண்ணிக்கொள்கிறார்கள், எதற்கு ஒப்புக்கு சப்பாக கணவனை வைத்துக் கொள்கிறார்கள் என்றே புரியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...