முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்களின் உடலை சந்தைக்கு விற்றுப் பிழைக்கும் அரசுகள் - அன்றும் இன்றும்


தவறாமல் பார்க்க வேண்டிய காணொளி இது (https://youtu.be/z8Qv7zZBxq8?si=-Zr_5RZfCYFOoITX)
- பிரித்தானிய காலனியாதிக்கத்தினால் இந்தியாவில் ஏற்பட்ட இரு பெரும் பஞ்சங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் நமது உடலை இன்சுலினை சரிவர பயன்படுத்த இயலாததாக மாற்றிவிட்டது என எப்பிஜெனடிக்ஸ் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கத்தியர்களை விட தெற்காசியர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளிகள் ஆகிறார்கள். 100 வயது வாழ வேண்டியவர்கள் இன்று 60-70 வயதிற்குள் மிக மோசமான வியாதிகள் வந்து துன்புற்று சாகிறார்கள். 20 வயது குழந்தைகள் 40 வயதினரைப் போல இருக்கிறார்கள். இதைச் சொன்னால் மாற்றம் முன்னேற்றம் அன்புமணிகள் வந்து 19ஆம் நூற்றாண்டில் இருந்த ஆயுளை விட இன்று அதிகரித்திருக்கிறது என்பார்கள். ஆனால் இன்று திட்டமிட்டு நம் ஆரோக்கியம் அழிக்கப்படுவதை விமர்சிக்க மாட்டார்கள். அதை விமர்சிக்கிறவர்களை இந்த மாற்றம் முன்னேற்றம் அன்புமணிகள் பழமைவாதிகள் என அழைப்பார்கள்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு பாரம்பரிய வாழ்க்கை முறைக்குத் திரும்புவதே என கார்டியன் சொல்கிறது.

 அதாவது மேற்கத்திய உணவுகளை, உறையிலிட்ட உணவுகளைத் தவிர்ப்பது, விரதம் இருப்பது, குறைவான நேரம் உண்பது, மாலை ஆறு மணிக்கு மேல் சாப்பிடாதிருப்பது, கறிவகைகளை குறைவாக உண்பது, அதிக காய்கறிகளை எடுத்துக் கொள்வது.

முதலில், அரசு ஏழு மணிக்கு மேல் செயல்படும் உணவகங்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும். விலையை உயர்த்தி மக்கள் இரவில் வெளியே உண்பதைக் குறைக்க வேண்டும். ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் 7மணிக்கு மேல் செயல்பட தடைவிதிக்க வேண்டும். மதுக்கூடங்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும்.
இதன் மூலம் மட்டுமே மக்களின் ஆயுளை 30 ஆண்டுகள் கூட்ட முடியும்.
 அடுத்து உறையில் இடப்பட்ட துரித உணவுகளை சந்தையில் இருந்து குறைப்பதை அரசு தன் இலக்காக அறிவிக்க வேண்டும். இது ஏதோ சர்வாதிகாரம் என உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் இதைப் போன்ற விதிமுறைகளை சிங்கப்பூரில் உள்ளன.

உணவுச் சந்தையை கட்டுப்படுத்தாத அரசு அரசல்ல தீவிரவாத அமைப்பு. காசுக்காக நம் மக்களை 20 வயதில் நீரிழிவும் 40 வயதில் மாரடைப்பும் வர வைக்கும் இந்த அரசு நம் உடலை சந்தைக்கு விற்கிறார்கள். இவர்களுக்கும் காலனியாதிக்கவாதிகளுக்கும் என்ன வித்தியாசம். சிறுகுழந்தைகள் சாக்லேட்டுகளையும் பாக்கெட் சிப்ஸையும் மட்டுமே கையில் கொண்டு திரிவதைக் காணும் போது ஏன் நம் குழந்தைகளை நாமே விஷமூட்டி அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பறிக்கிறோம் எனத் தோன்றும். ஆனால் நம் அரசே இதை ஆதரிக்கும் போது நம்மால் என்ன முடியும், சின்னச்சின்ன அளவில் எதிர்ப்பதைத் தவிர்த்து!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...