முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேள்வி பதில் - 1



 கேள்வி: எதார்த்தவாத நாவல்கள் எவை? ஏன் எல்லாருமே எதார்த்த கதை எழுதுகிறார்கள்?

பதில்: எதார்த்தவாத நாவல்களே தமிழில் அதிகமாக எழுதப்படுகின்றன. எதார்த்த கதை மூன்று இயல்புகள் கொண்டது:
அ) நேர்கோட்டுக் கதையமைப்பைக் கொண்டிருக்கும். காலம், இடம் சார்ந்த ஒழுங்கு இருக்கும் - ஒரு புள்ளியில் துவங்கி மற்றொரு புள்ளியில் முடிவுறும். கதை நடக்கும் இடமும், நிகழ்வுகளின் தர்க்கமும் தெளிவாக இருக்கும். உ.தா., ஒரு கற்பனை ஊரென்றாலும் அந்த ஊரின் தன்மை, அதன் இயங்குமுறை எல்லா ஊர்களையும் போலத்தன இருக்கும். பாத்திரம் கற்பனையானது என்றாலும் அவர் நிஜமனிதர்களைப் போலத் தான் நடந்துகொள்வார். உதாரணமாக, ஒரு ஆண் கருவுற்றுப் பிரசவிக்க மாட்டான். அப்படி நிகழ்ந்தாலும் அதற்கான தொழில்நுட்ப தர்க்க தரப்படும். ஒரு காட்சியில் கொல்லப்படும் ஒருவர் மறு காட்சியில் உயிருடன் வர மாட்டார். ஒரு காட்சியில் திருமணமாகும் ஒருவர் அடுத்த காட்சியில் தனியாக துணையற்று இருக்க மாட்டார். அப்படி இருந்தால் அதற்கான தர்க்க விளக்கம் தரப்பட்டிருக்கும்.
ஆ) குறையில் இருந்து நிறை அல்லது நிறையில் இருந்து குறையெனும் பாணியில் அமைந்த கதை; ஒரு தனிமனிதனின் பாத்திர வழு, சுபாவப் பிழை, குறையில் ஆரம்பித்து அதன் விளைவுகள், அதில் இருந்து பாடம் கற்று அவர் மேம்படுவது அல்லது பாடம் கற்காமல் மேலும் சீரழிந்து முழுமையான தன்னை அழித்துக் கொள்வது என இக்கதைகள் இருக்கும். தனிநபரின் இடத்தில் சில பாத்திரங்களோ ஒரு சமூகமோ ஒரு தேசமோ இருக்கலாம். அப்போது அது உறவு / குடும்ப / வரலாற்று நாவலாகும்.
இ) கதைக்கென்று ஒரு விழுமியம், அர்த்தம் / படிப்பினை இருக்கும். ஏதோ ஒன்றி மீதான நம்பிக்கை, பிடிமானம் இருக்கும். வாசகர்கள் இதற்காகவே எதார்த்த நாவல்களைப் படிப்பார்கள். இதுவே எதார்த்த நாவலுக்கு ஒரு துவக்கம், மையம், முடிவை கட்டாயமாக்குகிறது.
மேலும் பல கேள்விகளை என்னிடம் வகுப்பில் கேட்கலாம். ஆர்வமுள்ளோர் என் நாவல் வகுப்பில் இணைய 9790929153 எண்ணுக்கோ இன்பாக்ஸுக்கோ வந்து விசாரிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.