கேள்வி: எதார்த்தவாத நாவல்கள் எவை? ஏன் எல்லாருமே எதார்த்த கதை எழுதுகிறார்கள்?
பதில்: எதார்த்தவாத நாவல்களே தமிழில் அதிகமாக எழுதப்படுகின்றன. எதார்த்த கதை மூன்று இயல்புகள் கொண்டது:
அ) நேர்கோட்டுக் கதையமைப்பைக் கொண்டிருக்கும். காலம், இடம் சார்ந்த ஒழுங்கு இருக்கும் - ஒரு புள்ளியில் துவங்கி மற்றொரு புள்ளியில் முடிவுறும். கதை நடக்கும் இடமும், நிகழ்வுகளின் தர்க்கமும் தெளிவாக இருக்கும். உ.தா., ஒரு கற்பனை ஊரென்றாலும் அந்த ஊரின் தன்மை, அதன் இயங்குமுறை எல்லா ஊர்களையும் போலத்தன இருக்கும். பாத்திரம் கற்பனையானது என்றாலும் அவர் நிஜமனிதர்களைப் போலத் தான் நடந்துகொள்வார். உதாரணமாக, ஒரு ஆண் கருவுற்றுப் பிரசவிக்க மாட்டான். அப்படி நிகழ்ந்தாலும் அதற்கான தொழில்நுட்ப தர்க்க தரப்படும். ஒரு காட்சியில் கொல்லப்படும் ஒருவர் மறு காட்சியில் உயிருடன் வர மாட்டார். ஒரு காட்சியில் திருமணமாகும் ஒருவர் அடுத்த காட்சியில் தனியாக துணையற்று இருக்க மாட்டார். அப்படி இருந்தால் அதற்கான தர்க்க விளக்கம் தரப்பட்டிருக்கும்.
ஆ) குறையில் இருந்து நிறை அல்லது நிறையில் இருந்து குறையெனும் பாணியில் அமைந்த கதை; ஒரு தனிமனிதனின் பாத்திர வழு, சுபாவப் பிழை, குறையில் ஆரம்பித்து அதன் விளைவுகள், அதில் இருந்து பாடம் கற்று அவர் மேம்படுவது அல்லது பாடம் கற்காமல் மேலும் சீரழிந்து முழுமையான தன்னை அழித்துக் கொள்வது என இக்கதைகள் இருக்கும். தனிநபரின் இடத்தில் சில பாத்திரங்களோ ஒரு சமூகமோ ஒரு தேசமோ இருக்கலாம். அப்போது அது உறவு / குடும்ப / வரலாற்று நாவலாகும்.
இ) கதைக்கென்று ஒரு விழுமியம், அர்த்தம் / படிப்பினை இருக்கும். ஏதோ ஒன்றி மீதான நம்பிக்கை, பிடிமானம் இருக்கும். வாசகர்கள் இதற்காகவே எதார்த்த நாவல்களைப் படிப்பார்கள். இதுவே எதார்த்த நாவலுக்கு ஒரு துவக்கம், மையம், முடிவை கட்டாயமாக்குகிறது.
மேலும் பல கேள்விகளை என்னிடம் வகுப்பில் கேட்கலாம். ஆர்வமுள்ளோர் என் நாவல் வகுப்பில் இணைய 9790929153 எண்ணுக்கோ இன்பாக்ஸுக்கோ வந்து விசாரிக்கலாம்.
கருத்துகள்