எழுதுவதற்கான கருவி, அது கணினியோ பெரிய மேஜையிடப்பட்ட தனியறையோ அவசியமில்லை. அக ஊக்கமும் கனவும் வழிநடத்தினாலும் உங்களால் ஒரு பக்க காகிதங்களில் கூட கதையெழுதலாம், ஆசோகமித்திரன் செய்ததைப் போல. உள்ளங்கை அளவுள்ள செல்போனிலே ஒரு பெரிய புத்தகத்தை சிறுக சிறுக எழுத முடியும். மனுஷ்யபுத்திரன் கடந்த இரு ஆண்டுகளாக பிரசுரித்துள்ள ஆயிரம் பக்க கவிதைத்தொகுப்புகள் முழுக்க முழுக்க திறன்பேசியில் ஒற்றை விரலால் அவர் எழுதியவையே. அண்மையில் சுரேஷ் பிரதீப் முழுக்க முழுக்க திறன்பேசியில் எழுதிய நாவலொன்றை பிரசுரித்தார். இன்று ஜப்பானில் வெளியிடப்படும் பாதிக்கு மேற்பட்ட பெஸ்ட் செல்லர்கள் திறன்பேசியில் எழுதப்பட்டவையே.
அது மட்டுமல்ல, இன்று நீங்கள் எழுதும் அவசியம் கூட இல்லை - கூகிள் டாக்ஸ் போன்ற செயலிகள் குரலை எழுத்தாக்கும் வசதியை அளிப்பதால் நீங்கள் பேசியே கூட ‘எழுத’ முடியும். இவ்வளவு சௌகரியங்கள் இருக்கையில் நம்மை எழுதவிடாமல் தடுப்பவை அறிவின் போதாமையையும் தயக்கமும் தாம். அவற்றைப் பெற நீங்கள் நாவல் வகுப்பில் சேர வேண்டும். வகுப்பில் சேரவும் உங்களுக்குத் தேவை வெறுமனே ஒரு திறன்பேசியும் இணையத் தொடர்பும் மட்டும் தான். சில சோதிடர்கள் வெற்றிலையில் மை தடவி அதில் கடந்த, எதிர்காலங்களைப் பார்ப்பதைப் போல நீங்கள் உங்கள் கைப்பேசியில் காலாதீதமான படைப்புகளை உருவாக்கிப் பார்க்கலாம்.
தொடர்புக்கு 9790929153
கருத்துகள்