இந்நேரம் ஆசானின் ஓய்வறியாத விரல்கள் இவ்வாறு எழுதிக்கொண்டிருக்கும்...
"சுந்தர ராமசாமியின் இல்லத்தில் வைத்துதான் வேங்கடாசலபதியைச் சந்தித்தேன். கெச்சலான இளைஞர். வரலாறு, பண்பாட்டு நகர்வுகள் குறித்த ஆர்வம் கொண்டவர். சுந்தரராமசாமி மீது அபாரமான பற்றுக் கொண்டவர். பாரதியையும் வ.உ.சியையும் ஆய்வுபூர்வமாக விரிவாக தமிழுக்கு அறிமுகப்படுத்தும் துடிப்பு இருந்தது. கல்விப்புல கண்ணோட்டம் கொண்ட கூர்மையான மன அமைப்பு. என்னைப் பார்த்ததும் நீண்ட நேரமாக பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தார் ... வேங்கடாசலபதி தமிழில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தாலும் அவரை யாரும் பொருட்படுத்தவில்லை. நானே அவரது எழுத்துக்கான தடத்தை வரைந்தளித்து திசையையும் உருவாக்கினேன். நான் தான் அவரைப் பற்றி பலரிடம் எடுத்துச் சொல்லி பல இடங்களிலும் எழுதி அவருக்கான இடத்தை அமைத்துக்கொடுத்தேன். ...
அண்மையில் சாகித்ய அகாடெமியின் விருதுக்குழுவின் இறுதிக் கட்ட பரிசீலனையில் வந்த பெயர்களில் பொருட்படுத்தத்தகாத ஒருவருக்கு விருதைக் கொடுத்த சிலர் தவறான வழியில் முயன்றுகொண்டிருப்பதாக தகவல் வந்தது. தமிழின் முக்கிய விமர்சகரும் படைப்பாளியுமான சிலர் என்னை அங்கிருந்தே அழைத்து நீங்களே எதையாவது செய்து தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றுங்கள் என்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழிலக்கியத்திலும் அறிவுச்சூழலிலும் முக்கியமான பெயர்கள் யாரென முடிவெடுக்கிறவனாக, பலருக்கும் விருதளித்து அங்கீகரித்தும் விருதுகளைப் பெற்றுத் தந்தும் திசையை அமைக்கிறவனாக இது எனது கடமை என்றனர். அதனாலே நான் உடனே என் போனை எடுத்து...
இப்படித்தான் சலபதிக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தது. இதைக்கூட இந்நேரம் நாம் பிரஸ்தாபித்திருக்க மாட்டேன். ஆனால் சில அறிவிலிகளும் அற்பப் பதர்களும்..."
அதைப் படிக்கும் தமிழ் அறிவலகம்: ஓ மை காட்!
கருத்துகள்