முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சிகளை முறைப்படுத்துவதன் அவசியம்

மனுஷ் இப்படிச் சொல்வதால் குறைகள் கவனம் பெறும். அது முக்கியம்   யாராவது இந்த நிகழ்வுகளை முறைப்படுத்த வேண்டும். இலக்கிய விசயங்களில் கடும் விமர்சனங்களே மிகவும் சரியான அணுகுமுறை என நினைக்கிறேன். எழுத்தாளர் எப்போதும் வெளியாளாகவே இருக்க வேண்டும். கவலை, பொறுப்பு, சொற்களில் கவனம் எல்லாம் இருக்கக் கூடாது. தார்மீகக் கோபமும் உண்மையும் மட்டும் போதும். அவ்விதத்தில் தமயந்தியின் விமர்சனம் எனக்குப் பிடித்திருந்தது. 

திமுக அரசின் முயற்சிகள் சிறப்பானவை, பாராட்டுக்குரியவை. ஆனால் அவர்களுடைய செயல்பாடுகளில் கோளாறுகள் தோன்றும்போது தட்டிக்கேட்க வேண்டும். அதில் மிகை இருந்தாலும் நல்லதே. மிகையை மட்டுமே நாம் பொருட்படுத்துவோம். மென்மையாக சொன்னால் யார் காதிலும் விழாது. 

 - அபிலாஷ்

%%%%

 
(...)

 மாவட்ட தோறும் புத்தக கண்காட்சிகள் ஒரு பெரும் திருவிழா போல நடந்து வருகின்றன.  பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளின் சங்கமமாக இந்த கண்காட்சிகள் இருக்கின்றன. இதெல்லாம் முன்பு ஒருபோதும் தமிழ்நாட்டில் நடந்ததில்லை. 38 மாவட்டங்களில் ஒரு வருடத்தில் எத்தனை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்கின்றன, மொத்தமாக எத்தனை லட்சம் வாசகர்கள் வருகிறார்கள்,  ஆயிரத்திற்கு மேற்பட்ட உரைகள் ஒரு வருடத்தில் புத்தக கண்காட்சிகள் மட்டும் நிகழ்த்தப்படுகின்றன என்பதை எல்லாம் பண்பாட்டு நிகழ்வாக பார்க்க வேண்டும்.

 சில குறைகளும் வருத்தங்களும் இருக்கலாம்.  அவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த குறைகளுக்காக ஒட்டுமொத்த புத்தக கண்காட்சி இயக்கத்தை எதிர்மறையாகப் பார்த்து எழுதும் போக்கு அவ்வளவு நியாயமற்றதில்லை என்று நினைக்கிறேன். 

தினமும் ஒரு நவீன எழுத்தாளர், ஒரு மேடைப் பேச்சாளர், ஒரு இலக்கிய விமர்சகர் என்ற அளவில் மேடைகளை அமைக்கலாம். அதில் நடைமுறையில் எந்தக் சிக்கலும் இல்லை. பிரபலமான பேச்சாளர் பேசினால்தான் கூட்டம் கூடும் என்பது கற்பனை. அத்தகைய பேச்சாளர்கள் பேசிய பல புத்தகக் கண்காட்சி அரங்குகளில் வெறும் ஐம்பது பேர் அமர்ந்திருக்கும் காட்சியை எல்லாம் கண்டிருக்கிறேன். 

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள புத்தகக் கண்காட்சிகளிலும் உள்ள புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்களுக்கும் யாரெல்லாம் தமிழிலில் நல்ல எழுத்தாளர்கள் என ஒரு கையேடு அச்சிட்டு அனுப்பலாம் என்று நினைக்கிறேன். அரசாங்கம் பெரும் நிதிச் செலவில் நல்லெண்ணத்தோடு நடத்தும் புத்தகக் கண்காட்சிகளுக்கு சில பொறுப்பற்ற நபர்கள் கெட்ட பெயரைத் தேடித் தருகிறார்கள்.

ஒருவருடத்தில் நான்கைந்து புத்தகக் கண்காட்சிகளில் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் அதிகம். ஒரு கவிஞன், பிரபல முகம், மேடைகளில் சிறப்பாக பேசக்கூடியவன், பொது நூலகத்துறையை சேர்ந்தவன், ஆளும் கட்சியைச் சேர்ந்தவன் என இத்தனை தகுதிகள் இருந்தாலும் அந்த மாவட்ட கமிட்டியில் என்னை அறிந்த யாராவது இருந்தால்தான் அழைப்பார்கள். நான் எங்கும் எந்த முன்னுரிமையும் பெற்றதில்லை.

நான் புத்தகக் கண்காட்சிகளில் பேசுகிற இடங்களில் எல்லாம் அங்கு அழைக்கப்படாத படைப்பாளிகளின் படைப்புகள் குறித்தே பேசுகிறேன்.

அதே சமயம், இவ்வளவு பெரிய ஒரு அறிவுசார் பண்பாட்டு நிகழ்வினை பேச அழைக்கப்படுபவர்களை மட்டும் மையமாக வைத்து முற்றிலும் ஒரு எதிர்மறை பிம்பத்தை உருவாக்குவது ஏற்புடையதல்ல.

எல்லாவற்றையும் தொடர் முயற்சியால் செழுமைப்படுத்தலாம். ஜனநாயகப் பண்பு நம் அனைவருக்குமே தேவை. 

(...)

- மனுஷ்யபுத்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...