உயரம் குறைவாக இருக்கும் சிறுவன் ரகு,
குள்ளமாக இருப்பதால் அவன் படும் அவமானங்கள் , இன்னல்கள்
அவன் அம்மா அவனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதும்
தன் பிள்ளை தன் வேலையை தானே செய்ய உயர்ந்த சிகிச்சை அளித்து நன்றாக படிக்க வைக்கிறார், ஒரு தாயாக தன் கடமையை செய்கிறார்,
ஒரு கல்லூரியில் ஆய்வாளராக பணிபுரியும் குள்ளமாக இருக்கும் ரகுவை சுத்தி நகர்கிறது.
மனிதன் தன்னை விட வலிமை குறைந்தவனிடம் தான் தன் பலத்தை, அதிகாரத்தையும் காட்டுவான்
மென்மையான இதயம் கொண்டவர்கள் நல்லவர்களாக தோன்றினாலும் அவர்களால் சுயமாக முடிவு எடுத்து வாழ முடிவதில்லை , ஒருவரின் அதிகாரத்தின் கீழ் தான் வாழ முடிகிறது அப்படி தான் அவர்கள் வாழ்க்கையும் அமைகிறது
ரகு தன்னை சிறப்பாக சிறந்தவனாக காட்ட தன் திறமையை வளர்த்துக் கொண்டு தன் செயலால் எப்படி தலை நிமிர்ந்து உயர்ந்து நிற்கிறான் என்பதை இக்கதை காட்டுகிறது
எதிர்காலத்தில் கல்லூரி எப்படி இருக்கும் எனவும்
கல்லூரி ஆசிரியர்கள், கல்வி நிர்வாகம் பற்றி. எழுத்தாளர் தன் கற்பனையில் உதிர்த்து இருக்கிறார்,
கற்பனையாக இருந்தாலும் இப்படி தான் இருக்குமோ என நாவலை வாசிக்கும் போது நம்மை பயம் கொள்ள வைக்கிறது,
கல்லூரி ஆய்வாளரான ரகுவிற்கு கல்லூரி பெண்களால் ஏற்படும் இன்னல்கள் அவமானங்கள் அவர் அதை எப்படி எதிர்கொண்டு வருகிறார் , அவர் மீது போடப் படும் பாலியல் வழக்கு எப்படி எதிர் கொள்கிறார் என்பதை விரிவாக காட்டி இருக்கிறார், எழுத்தாளர்
நிழல் பொம்மை
வாசிக்கும் போது கொஞ்சம் பயத்தை மட்டும் இல்லாமல் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இப்படி கூட நடக்குமோ என ஐயம் எழுகிறது,
நிழல் பொம்மை வாசிக்க புதுமையாக இருந்தது.
நூல் - நிழல் பொம்மை
ஆசிரியர் - ஆர். அபிலாஷ்
நூல் கிடைக்கும் இடம் ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்
கருத்துகள்