போரை தேசப்பற்று, தேசப்பாதுகாப்புடன் தொடர்புபடுத்தி மட்டும் பார்ப்பது அபாரமான மூடத்தனம் மட்டுமே. பொதுவாக அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய நிதியில், ஆசியில் நடக்கும் ஊடக நிறுவனங்கள், கட்சியின் சமூகவலைதள டுரோல்கள் சேர்ந்து நாட்டின் பெரும்பகுதி மக்கள் மிருகங்களைப் போல மாறி யுத்த வெறியை ஆதரிக்க வேண்டும் எனக் கோருகிறார்கள், சிந்தனையை அவ்வாறு மாற்ற முயல்கிறார்கள். இவர்களை நோய்த்தொற்றைப் பரப்பும் நுண்கிருமிகளுடனே ஒப்பிட முடியும் - நோய் எந்தளவுக்கு வேகமாகப் பரவுகிறதோ அந்தளவுக்கு வேகமாக அவர்கள் பரவவும், நிலைக்கவும் செய்வார்கள். எல்லா நுண்கிருமிகளும் அவ்வாறே சிந்திக்கும். Armed Forces & Society எனும் நூலில் GAD BARZILAI and EFRAIM INBA எழுதியுள்ள கட்டுரையில் இஸ்ரேலில் பொதுமக்களிடம் தாம் நடத்திய ஒன்பது கருத்துக்கணிப்புகளைக் கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறார்கள் - தலைவர்களும் ஆளும் அரசும் எடுக்கும் போர் முடிவுகள், ஊடகப் பிரச்சாரம் மக்களுக்கு போர் வெறியைத் தூண்டும். அதேநேரம் எல்லாரும் இதற்கு பலியாவதில்லை. மக்களில் பலரும் போரை எதிர்க்கவே செய்கிறார்கள். அவர்களது குரலுக்கு நேரடியான விளைவு இருக்காது, ஆனால் மறைமுகமாக அது அரசின் முடிவுகளில் தாக்கத்தைச் செலுத்தும் என்கிறார்கள் அவர்கள். இந்திய அரசுகளின் விசயத்திலும் நமக்குள் நம்பிக்கை அதுமட்டுமே. என்றாவது இதெல்லாம் மாறும்!
கருத்துகள்