முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரமேஷ் பிரேதன்




இவ்வாண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் ரமேஷ் பிரேதனுக்கு அன்பும் வாழ்த்துகளும். தொண்ணூறுகளிலும்ரெண்டாயிரத்தின் முற்பகுதியிலும் இங்கு தீவிரமாகப் பேசப்பட்ட உடல்மொழியை தன் கவிதைகளில் அவர் மெய்யியலுடன் இணைத்துப் பேச முயல்வதை, சிலநேரங்களில் நேரடி அரசியல் விமர்சனங்களையும், கருத்தியலையும் அதற்குள் இணைக்க முயல்வதைக் கண்டிருக்கிறேன். அவரது மொழிநடை உருவகத்தன்மை கொண்டது. கூடை பின்னுவதைப் போன்றது. ஆரம்பித்த இழை எங்கெல்லாம் போய் என்ன உருவெடுக்கிறது என்று பார்க்க ஒருவித கவனம் வேண்டும். தொடர்ந்து எதையோ ஒன்றை உண்மையாகத் தேடுவதையும், முற்றுப்பெற்று நின்று விடாததையும் அவரது குறிப்புகளிலும் கவிதைகளிலும் இன்றும் பார்க்க முடியும். இதுவே குழப்பமான சொற்றொடர்களாக, படைப்புகளாக வெளிப்படும். ஆனால் இது எந்தப் படைப்பாளிக்கும் முக்கியமானது. தெளிவும் உறுதிப்பாடும் படைப்பாக்கத்தை அழித்து போதனையாகவோ பிரச்சாரமாகவோ அதை மாற்றிவிடக் கூடும். ரமேஷின் நெகிழ்வுத்தன்மை அதிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறது.

பிரேதன் - பிரேதம் எனும் புனைப்பெயரின் பின்னுள்ள தத்துவத்தைக் குறித்து நான் பலமுறைச் சிந்தித்திருக்கிறேன். இந்த உடலென்பது ஒற்றை உயிராலானதா? அது பல்வேறு உயிர்களும் பிரக்ஞைகளும் நினைவுகளும் சஞ்சரிப்பதா? அது இயற்கையின் கண்ணியான ஒரு பௌதீக அமைப்பா? அது ஒரு வெற்றுக் குறிப்பானா? அது ஒரு கவித்துவக் குறியீடா? இந்த ஒரு உடல் ஒரு குறியீடு என்றால் நாம் யார்? ஒரு சவ ஊர்வலத்தின் போது எடுத்துச் செல்லப்படும் உடல் ஏன் ஒரு நபர் என நமக்குத் தோன்றுகிறது? எனக்கு பிரேதங்களைப் பார்க்கையில் அவை உயிருடன் உள்ளதாக உறுதியாகத் தோன்றும். இப்படி மிகமிக அழகான புனைப்பெயர் பிரேதன் என்பது.
ஒரு ஆளுமையாக, தனிமனிதராக அவர் வாழ்க்கையே சுவாரஸ்யமானது. நான் அவரைச் சந்தித்தது இல்லையென்றாலும் கேள்விப்பட்டதை வைத்துச் சொல்கிறேன். ஒரு நாவலின் நாயகனாக அவரை வடிவமைத்து யாரேனும் எழுதிப் பார்த்தால் நன்றாக இருக்கும்.
பிரேம்-ரமேஷ் கண்ணி உடையாமல் இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும், அது இலக்கியப் புலத்தில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என நான் யோசித்திருக்கிறேன். தனித்து எழுத ஆரம்பித்த பின்னர் ரமேஷ் தனக்கான பாதையை நிச்சயமாக உருவாக்கிக் கொண்டார் என்றாலும் இந்தக் கணத்தில் நாம் அந்த இரட்டையரையும் சேர்த்தே நினைக்கவும் பாராட்டவும் வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...