முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூரியல் ஸ்பார்க் கவிதைகள்

லண்டன் சுற்றுலா


கென்சிங்டன் பூங்கா


முதிய பெண்கள் மற்றும் துலிப் பூக்கள், மாதிரிப் படகுகள்

கையடக்கக் குழந்தைகள், நடமாட்ட அம்மாக்கள்,

கிளிகள் போல் தூரத்து பேருந்துகள்

தனியான ஆண்கள் மழை அங்கிகளை

கைமேல் கொண்டு – எங்கே போகிறார்கள்? தற்போது கோடையின்

மூட்டை முடிச்சுக்கள் மற்றும் வண்ணத் தெளிப்பு

ஒரு வருடத்துக்கு முன் விதைத்தது போல் வெளிவந்து விட்டபடியால்.



அந்நியள் வியந்தது என்ன?


லண்டனில் தனியாய் காபி உறிஞ்சியபடி

இவள் எங்கிருந்து வருகிறாள்?

ஷூக்கள், கூந்தல் – வங்கியில் அவளுக்கு ஏதுமிருப்பதாக எனக்கு படவில்லை.

அவளுக்கு ஆண்துணை உண்டா, எனில் அவன் எங்கே,

பத்தரை மணிக்கு லண்டனில் புத்தகம் படித்தபடி

ஏன் அமர்ந்து இருக்கிறாள்?


அவளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது

ஆண்துணை இன்றி, வேலையற்று, மளிகைக் கடையில் நாயுடன் அவசரமாக ஓடாமல்

தனித்து இருக்கும் படியாக. உறிஞ்சிடும் படியாக.



ஓய்வு நாள்


மூன்றே கால் மணிக்கு கடிகாரம் நின்று போனது;

மேலும் கைகளை அகலமாக விரித்து கொட்டாவி விட்டு அங்கே இருந்தது,

மேலும் அதை திரும்ப ஓட வைக்கவில்லை யாரும்,

ஞாயிற்றுக்கிழமை ஆகையால், நாங்கள் வேலையில் மூழ்கி இருந்தமையால்.


ஆகையால் அந்நாள் நிகழ்ந்தது, மறைந்தது.

ஆனால் துண்டுத் துண்டாய் கிழிக்க, தைக்க, நேசிக்க, வெறுக்க

நாங்கள் பின்பற்றின நேரம் சரியானதா

என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை; நிகழந்தவை எல்லாம்

ஞாயிற்றுக் கிழமை, லண்டன், மணிமுழக்கங்கள், பேச்சு, விதி.




மூரியல் ஸ்பார்க்: சிறுகுறிப்பு

The Mandelbaum Gate, The Prime of Miss Jean Brodie போன்ற தனது நாவல்களுக்காகவே பிரதானமாக அறியப்பட்ட ஸ்காட்லாந்து எழுத்தாளர் மூரியல் ஸ்பார்க் கவிஞராகவே எழுத்தை ஆரம்பித்தார். ஆங்கிலேய அம்மாவுக்கும் யூத அப்பாவுக்கும் பிறந்த ஸ்பார்க் பின்னர் கத்தோலிக்க மதத்துக்கு மாறி, அது தனக்கு நாவல் எழுத ஒரு விரிவான பார்வை அளித்திருப்பதாய் அறிவித்தார். இந்த மதமாற்றம் காரணமான மனஸ்தாபம் மூன்று வருடங்களுக்கு முன் 88 வயதில் சாகும் வரை அவரை தன் மகனிடம் இருந்து பிரித்து வைத்தது. வாழ்வின் ஒழுக்கில் ஒவ்வொரு பிடிமானமாக நாடி சென்றுள்ள மூரியலின் எழுத்தின் முக்கிய தேடல் வஸ்து அடையாளம். இங்கு தமிழாக்கப்பட்டுள்ள கவிதைகள் All the Poems என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...