முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசியக் கோப்பை: தோல்வியுற்ற பாகிஸ்தானின் முன்னுள்ள சவால்கள்



இந்த ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானுக்கு ஜுரத்துக்கு பின்னர் வியர்ப்பதை விட முக்கியமானது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு கௌரவத்தை காப்பாற்றுவது நோக்கமாக இருக்கும் என்றால் பாகிஸ்தானுக்கு சர்வதேச அரங்கில் தன்னை நிலைநாட்ட இந்த தொடரின் ஆட்டங்கள் பயன்பட வேண்டும். மேலும் குறிப்பாக ஷோயப் அக்தர், ஷோயப் மாலிக், கம்ரான் அக்மல் ஆகிய மூத்த வீரர்கள் பழைய ஆட்டத்திறனுக்கு திரும்ப வேண்டும் என்றும் பாக் மேலாண்மை எதிர்பார்க்கும். அடுத்து மூத்த மற்றும் இளைய வீரர்கள் அப்ரிதியின் கீழ் ஒன்றுபட்டு கொண்டை ஊசியால் பின்புறம் குத்தாமல் செயலூக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதும் பாக் ரசிகர்களின் மற்றொரு பிரார்த்தனையாக இருக்கும். ஆசியக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் பாக் அணி சன்னமான வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இந்த தோல்வியை விட முக்கியமாக, மேற்ச்சொன்ன எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு கனிந்துள்ளன என்பதே சுவாரஸ்யமான பார்வை.



கடைசி சில ஓவர்கள் தவிர்த்து பாக் அணியின் களத்தடுப்பு அவர்களின் தரத்தை பொறுத்த அளவில் சிறப்பாகவே இருந்தது. பந்து வீச்சு புத்திசாலித்தனமாக ஒழுக்கத்துடன் இருந்தது. ஷோயப் அக்தரின் பிம்பம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் இலங்கை மட்டையாட்டத்தை நிச்சயம் பாதித்தது. ஷோயப்பின் உடற்தகுதி சில ஐயங்களை ஏற்படுத்தினாலும் அவர் கூர்மையாக சராசரி 140 கி.மீ வேகத்தில் வீசினார். காயம் உறாத பட்சத்தில் அக்தரின் உளவியல் பாதிப்பு இந்த தொடரில் கணிசமாக இருக்கும். பாக் அணிக்கு இது ஒரு முக்கிய பலமாக இருக்கும். அடுத்து பாக் அணியினர் உற்சாகம் மற்றும் மனக்குவிப்புடன் மூன்றரை மணிநேரமும் இயங்கியது ஒரு நல்ல அறிகுறி என கூற வேண்டும். சாதகமான நிலைமையில் ஈடுபாட்டுடன் இயங்குவதும் பின்னர் சோர்ந்து விடுவதும் பாக் அணியின் மரபாக இருந்து வந்துள்ளது. இன்று மாறுபட்ட முறையில் அவர்கள் சிரமமான கட்டத்திலும் போராடினர். இதன் தொடர்ச்சியாக மட்டையாட்டத்திலும் அப்ரிடி சரிவில் இருந்து தன் அணியை சதம் மூலம் கிட்டத்தட்ட மீட்டுக் கொண்டு வந்தார். இந்த போராட்ட குணத்தை வரும் ஆட்டங்களிலும் பாகிஸ்தானியர் தக்க வைத்தால் வரும் உலகக் கோப்பையில் அவர்களால் அரை இறுதி வரை நிச்சயம் செல்ல முடியும்.

இந்த ஆட்டத்தின் முடிவில் பாக் அணி நேரிடும் பிரச்சனைகள் என்ன?
ஷோயப் மாலிக் மற்றும் கம்ரானின் ஆட்டத்திறன். மட்டையாட்டம் பாக் அணியின் ஒரு பலவீனமாகவே கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இந்த ஆசியக் கோப்பையில் மேற்சொன்ன மூத்த மட்டையாளர்களுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமின் மற்றும் ஹசன் சோபிக்காவிட்டால் பாக் அணியின் மட்டையாட்டத்துக்கு ஒரு பெரும் முடக்கமாக அது இருக்கும். யூனிஸ்கான் மற்றும் யூசுப்பை மீண்டும் வரவேற்று சமரசம் செய்யும் சூழலை உருவாக்கும். இந்த ஆதிக்க வீரர்கள் மீண்டும் நுழைவது அப்ரிடியின் தலைமைக்கு மேலும் சவாலாக இருக்கும். அப்ரிடி ஒரு இளைய அணியை மேய்க்கவே விரும்புவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.