முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசியக் கோப்பை: தோல்வியுற்ற பாகிஸ்தானின் முன்னுள்ள சவால்கள்



இந்த ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானுக்கு ஜுரத்துக்கு பின்னர் வியர்ப்பதை விட முக்கியமானது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு கௌரவத்தை காப்பாற்றுவது நோக்கமாக இருக்கும் என்றால் பாகிஸ்தானுக்கு சர்வதேச அரங்கில் தன்னை நிலைநாட்ட இந்த தொடரின் ஆட்டங்கள் பயன்பட வேண்டும். மேலும் குறிப்பாக ஷோயப் அக்தர், ஷோயப் மாலிக், கம்ரான் அக்மல் ஆகிய மூத்த வீரர்கள் பழைய ஆட்டத்திறனுக்கு திரும்ப வேண்டும் என்றும் பாக் மேலாண்மை எதிர்பார்க்கும். அடுத்து மூத்த மற்றும் இளைய வீரர்கள் அப்ரிதியின் கீழ் ஒன்றுபட்டு கொண்டை ஊசியால் பின்புறம் குத்தாமல் செயலூக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதும் பாக் ரசிகர்களின் மற்றொரு பிரார்த்தனையாக இருக்கும். ஆசியக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் பாக் அணி சன்னமான வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இந்த தோல்வியை விட முக்கியமாக, மேற்ச்சொன்ன எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு கனிந்துள்ளன என்பதே சுவாரஸ்யமான பார்வை.



கடைசி சில ஓவர்கள் தவிர்த்து பாக் அணியின் களத்தடுப்பு அவர்களின் தரத்தை பொறுத்த அளவில் சிறப்பாகவே இருந்தது. பந்து வீச்சு புத்திசாலித்தனமாக ஒழுக்கத்துடன் இருந்தது. ஷோயப் அக்தரின் பிம்பம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் இலங்கை மட்டையாட்டத்தை நிச்சயம் பாதித்தது. ஷோயப்பின் உடற்தகுதி சில ஐயங்களை ஏற்படுத்தினாலும் அவர் கூர்மையாக சராசரி 140 கி.மீ வேகத்தில் வீசினார். காயம் உறாத பட்சத்தில் அக்தரின் உளவியல் பாதிப்பு இந்த தொடரில் கணிசமாக இருக்கும். பாக் அணிக்கு இது ஒரு முக்கிய பலமாக இருக்கும். அடுத்து பாக் அணியினர் உற்சாகம் மற்றும் மனக்குவிப்புடன் மூன்றரை மணிநேரமும் இயங்கியது ஒரு நல்ல அறிகுறி என கூற வேண்டும். சாதகமான நிலைமையில் ஈடுபாட்டுடன் இயங்குவதும் பின்னர் சோர்ந்து விடுவதும் பாக் அணியின் மரபாக இருந்து வந்துள்ளது. இன்று மாறுபட்ட முறையில் அவர்கள் சிரமமான கட்டத்திலும் போராடினர். இதன் தொடர்ச்சியாக மட்டையாட்டத்திலும் அப்ரிடி சரிவில் இருந்து தன் அணியை சதம் மூலம் கிட்டத்தட்ட மீட்டுக் கொண்டு வந்தார். இந்த போராட்ட குணத்தை வரும் ஆட்டங்களிலும் பாகிஸ்தானியர் தக்க வைத்தால் வரும் உலகக் கோப்பையில் அவர்களால் அரை இறுதி வரை நிச்சயம் செல்ல முடியும்.

இந்த ஆட்டத்தின் முடிவில் பாக் அணி நேரிடும் பிரச்சனைகள் என்ன?
ஷோயப் மாலிக் மற்றும் கம்ரானின் ஆட்டத்திறன். மட்டையாட்டம் பாக் அணியின் ஒரு பலவீனமாகவே கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இந்த ஆசியக் கோப்பையில் மேற்சொன்ன மூத்த மட்டையாளர்களுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமின் மற்றும் ஹசன் சோபிக்காவிட்டால் பாக் அணியின் மட்டையாட்டத்துக்கு ஒரு பெரும் முடக்கமாக அது இருக்கும். யூனிஸ்கான் மற்றும் யூசுப்பை மீண்டும் வரவேற்று சமரசம் செய்யும் சூழலை உருவாக்கும். இந்த ஆதிக்க வீரர்கள் மீண்டும் நுழைவது அப்ரிடியின் தலைமைக்கு மேலும் சவாலாக இருக்கும். அப்ரிடி ஒரு இளைய அணியை மேய்க்கவே விரும்புவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...