முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொல்லப்பட்டவனும் கடவுளும்




ஒரு கொலையை ஆதரிக்க
நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல நேர்கிறது!
ஒரு கொலைக்கு
உண்மையில்
இவ்வளவு நியாயங்களா இருக்க முடியும்?
துரோகம் செய்வதில் இருந்து
குருதி இழைப்பது வரை
ஒரு களங்கமின்மை, தூய்மை, கனிவு உள்ளது
வன்முறையில் அடிப்படையில் உள்ளது
ஒருவித அன்பு தான்

வன்முறை
அன்பின்
துருபிடித்த ஆயுதமொன்றின் வாசனையும் நிறமும் படைத்த
மொழிதான்

குருதி சிந்துபவரை
உறுப்புகளை நறுக்குபவரை
மனித வலியை ரசிப்பவரை
சதையை சிதைத்து தீக்கிரையாக்குபவரை
கழுத்தில் இட்டு முறுக்கும் கயிறை கவனமாய் சோதிப்பவரை
பாதுகாவலரை தூக்குக்கைதியின் பாதுகாவலரை
இறுதி ஆசையை நிறைவேற்றுவோர், இறுதிக் கவலைக்கு பொறுப்பாகுவோர்
இறுதி நிமிடம் வரை உயிரை தக்க வைக்க உழைப்பவர்
இறுதி நிமிடத்துக்குப் பின்னான இல்லாத எதிர்காலத்தை
மீளமீள
ஸ்வீகரித்து புனைவுகளில் நம்பிக்கைகளில் துர்கனவுகளில்
பத்திரப்படுத்துவோரை
விட
அக்கோலையை செய்கிற அரசை விட
அரசின் குரலில் பேசும் அதிகார எந்திரம், மீடியாவை விட
ஒரு மனிதனின் கொலையை
நியாயப்படுத்த அப்படி தத்தளிப்போர் ஆவேசப்படுவோர்
தம் தர்க்கத்தில் விடாமல் அதை நிகழ்த்திக் கொண்டிருப்போர்
பிணத்தின் குருதியைக் கண்டு அஞ்சுபவர்
கொலையை வெறுப்பவர் மறுப்பவர்
அதனை எப்படியெல்லாம் ஆதரிப்பது என
கனவு காண்பது தான்
துக்கத்திற்கு உரியது.

கொல்லப்பட்டவன்
கோடானுகோடி மனங்களில்
இருப்பது போல்
எதார்த்தத்தில் இருப்பதில்லை
அவன் கோடானுகோடி முறை கொல்லப்படும் போது
ஆயிரம் ஆயிரம் மொழிகளில்
பேசுகிறான்
அழுது இறைஞ்சி குமுறி கண்ணீர் சிந்துகிறான்
அல்லது மொழியற்றவனாக
எதையும் ஏற்றுக் கொள்பவனாக இருக்கிறான்
கொல்லப்படுபவனுக்கு
கோடானுகோடி முகபாவங்களும் குணாதசியங்களும் மனநிலைகளும்
உருவாகின்றன
கொல்லப்படுபவனை
உங்கள் நியாயத்திற்கு வளைக்கும் போது
அவன் கோடானுகோடி முறை கொல்லப்பட்டவாறே
இருக்கிறான்.
அவன் துர்விதி
நம் கடவுளர்களின்
முடிவுறாத பிறப்புகளின் வாதையை ஒத்தது.
ஒரு மனிதனை
சட்டப்படி கொன்று
அவனை
உங்கள் நாட்டின் கோடானுகோடி கடவுளர்களில்
ஒருவர் ஆக்குகிறீர்கள்.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நறுக்கென்று இருக்கிறது...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...