Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கனிமொழியை ஆதரிப்பதன் அறிவீனம்


நம் காலத்தின் மிகப்பெரிய துயரம் குற்றவாளிகளை எளிதில் பூஜை செய்து தீபாராதனை காட்டி புனிதர்களாக்குவது. அவர்களை மிக எளிதில் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டி விட்டு பத்து வருடங்களுக்கு மேல் நீடிக்கும் வழக்குகளின் புதிர்பாதைகளில் மறைந்து போவார்கள். அப்படி மறைந்து போனால் கூட பரவாயில்லை. வழக்கின் சூடு தணியும் சட்டென்று ஒரு பெரும் அரசியல் பதவியையும் அடைந்து விடுவார்கள்.

அவரை ஆதரிக்கும் சிலர் “யார் தான் ஊழல் பண்ணவில்லை. அவங்க பதவியில் இருக்காங்கன்னா இவரும் பதவி அடையலாமே?” என அற்பமாக நியாயப்படுத்துகிறார்கள். கனிமொழியின் ராஜ்யசபா தேர்வும் அதை நம் மீடியாவும் விமர்சகர்களும் கையாளும் விதம் நமக்குள் புரையோடியுள்ள ஒரு பெரும் சீர்கேட்டைத் தான் காட்டுகிறது.


யார் தான் குற்றம் பண்ணவில்லை என்பது எப்படி ஒரு குற்றவாளி தப்பிப்பதற்கான நியாயம் ஆக முடியும்? உலகம் தோன்றிய நாள் முதலே கொலை, கொள்ளை, ஏமாற்றுகள் நடந்து கொண்டு உள்ளன. அவர்கள் தண்டிக்கப்பட்டு சமூகத்தின் முன் கூசி நின்றார்கள். ஆனால் இன்று அதே குற்றவாளிகளை கடவுளாக கொண்டாடும் காலகட்டத்தில் வாழ்கிறோம். கனிமொழி ஜெயிலில் இருந்து வெளிவந்த பின் அவரை தியாகியாக்கி திமுகவினர் வழிபட்டதை பார்த்தோம். ஆனால் அவர் தன் மேல் உள்ள கறையை நீக்காமல் மீண்டும் பொதுவாழ்வுக்கு வரமாட்டார் என எதிர்பார்த்தோம். ஆனால் இப்போது கூச்சமில்லாமல் மீண்டும் அவர் ராஜ்யசபாவுக்கு போகிறார். இது ஒருவிதத்தில் நமது நீதி அமைப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு நேரும் ஒரு அவமானம்.
கனிமொழியை நாம் விதிவிலக்காக எண்ண வேண்டியதில்லை. குற்றம் சாட்டப்பட்ட யார் பதவியில் இருப்பதும் தவறு தான். இதை எதிர்த்து ஒரு சமூக இயக்கம் உருவாக்கப்பட்டு போராட வேண்டிய காலத்தில் இருக்கிறோம். நம்முடைய முக்கிய பிரச்சனை ஊழலை தடுப்பதை விட ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் உரித்தான தண்டனை அனுபவிப்பதை உறுதி செய்வதே. அவர்கள் அதிகார ஸ்தானத்தில் இருக்கையில் அது நடக்காது. BCCI தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததும் இதை முன்னிட்டே.
சொல்லப் போனால் கனிமொழி விசயத்தில் நமக்கு இன்னும் கவலை கூடுதலாகிறது, ஏமாற்றம் மிகுகிறது. அவர் தேர்ந்த சிந்தனையும் தெளிவான ஆரசியல் பார்வையும் கொண்டவர். ஒரு எதிர்பார்க்கத்தக்க எழுத்தாளராக தோன்றியவர். ஆனால் தன் கண்ணியத்தை முழுக்க இழந்து அவர் ஊழலுக்கு கீழ்ப்படிவார் என நாம் எதிர்பார்க்கவில்லை. ஒருவிதத்தில் அது தமிழ் அறிவுலகத்துக்கு, சமூக சிந்தனையாளர்களுக்கு, அவர் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு துரோகம் பண்ணி விட்டார். அதனால் தான் அவரைப் போன்ற ஒருவர் தான் செய்த குற்றத்துக்காக தண்டனையை விட வெகுமதிகளை பெறுவது பார்க்கையில் நமக்கு கொதிப்பும் வருத்தமும் இன்னும் அதிகமாகிறது.
2G ஊழலில் கனிமொழி நேரடியாக சம்மந்தப்படவில்லை என்றொரு தரப்பு உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அவரது சம்பாத்தியம், சொத்துக்கள் பன்படங்கு பெருகி உள்ளன. சரி அவர் வழி சென்ற பணம் எங்கு போயிற்று? அவர் உண்மையை வெளிக்கொணர்ந்து தன்னை நியாயப்படுத்தப்பட்டுமே? அதுவரை அவர் தியாகி என்பதும், ஒரு வருடம் ஜெயிலில் இருந்த பரிகாரத்துக்காக அவரது அம்மாவை சமாதானப்படுத்த திமுக அவரை மீண்டும் காங்கிரசிடம் சமரசம் பேசி ராஜ்யசபா அனுப்புகிறதையும் வெட்கங்கெட்ட அரசியல் என்று மட்டுமே நாம் கூற முடியும்.
”அவனை முதலில் நிறுத்த சொல்லுங்க, நான் நிறுத்துறேன்” என்று மணிரத்னம் வசனத்தை சிலர் கனிமொழிக்கு ஆதரவாக சொல்லுகிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருக்கையில் ஏன் கனிமொழி கூடாது என்று கேட்கிறார்கள். இதற்கான ஒரே பதில் கனிமொழியை எதிர்ப்பவர்களை ஜெயா ஆதரவாளர்களாக பார்ப்பது ஒரு அபத்தம் என்பதே. திமுக அதிமுக என்கிற எதிரிடை கடந்து அரசியலை பார்ப்பவர்களும், இருதரப்பின் சீர்கேட்டை எதிர்ப்பவர்களும் தான் இங்கு இங்கிருக்கிறோம்.
மேலும் இதே தர்க்கத்தை நீங்கள் பயன்படுத்துவதானால் நீங்கள் ராஜபக்‌ஷேவுக்கு சர்வதேச நீதிமன்றம் தண்டனை வழங்க வேண்டும் எனவும் கேட்கக் கூடாது. அவர் ருவாண்டாவில், துருக்கியில், வங்கதேசத்தில், கம்போடியாவில் இனப்படுகொலை நடக்கவில்லையா எனக் கேட்பார். ஏன் இந்தியாவில் கூடத் தான் இஸ்லாமியரை பலகட்டங்களாய் படுகொலை செய்தார்கள். அதற்கு நீங்கள் நீதி வழங்கி விட்டீர்களா? இல்லையே? அப்புறம் எப்படி என்னை கேள்வி கேட்கலாம் என ராஜபக்‌ஷே கேட்கலாம். கனிமொழியை ஆதரிக்கும் ஈழ ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்லுவீர்கள். அவர் மோடியை உள்ளே தள்ளி விட்டு என்னிடம் வாங்க எனலாம். நீங்கள் முழி பிதுங்கி நிற்பீர்களா?
என்றுமே நாம் ஒரு அநீதியை இன்னொரு அநீதியின் பெயரில் நியாயப்படுத்தல் ஆகாது. நாளை உங்கள் மகளை ஒருவன் பலாத்காரம் பண்ணி விட்டு அல்லது உங்கள் மகனை ஒருவன் கொன்று விட்டு ஊரில் நடக்காததையா பண்ணி விட்டேன் எனக் கேட்பான். அவனையும் ஆதரிப்பீர்களா?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...