முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனிமொழியை ஆதரிப்பதன் அறிவீனம்


நம் காலத்தின் மிகப்பெரிய துயரம் குற்றவாளிகளை எளிதில் பூஜை செய்து தீபாராதனை காட்டி புனிதர்களாக்குவது. அவர்களை மிக எளிதில் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டி விட்டு பத்து வருடங்களுக்கு மேல் நீடிக்கும் வழக்குகளின் புதிர்பாதைகளில் மறைந்து போவார்கள். அப்படி மறைந்து போனால் கூட பரவாயில்லை. வழக்கின் சூடு தணியும் சட்டென்று ஒரு பெரும் அரசியல் பதவியையும் அடைந்து விடுவார்கள்.

அவரை ஆதரிக்கும் சிலர் “யார் தான் ஊழல் பண்ணவில்லை. அவங்க பதவியில் இருக்காங்கன்னா இவரும் பதவி அடையலாமே?” என அற்பமாக நியாயப்படுத்துகிறார்கள். கனிமொழியின் ராஜ்யசபா தேர்வும் அதை நம் மீடியாவும் விமர்சகர்களும் கையாளும் விதம் நமக்குள் புரையோடியுள்ள ஒரு பெரும் சீர்கேட்டைத் தான் காட்டுகிறது.


யார் தான் குற்றம் பண்ணவில்லை என்பது எப்படி ஒரு குற்றவாளி தப்பிப்பதற்கான நியாயம் ஆக முடியும்? உலகம் தோன்றிய நாள் முதலே கொலை, கொள்ளை, ஏமாற்றுகள் நடந்து கொண்டு உள்ளன. அவர்கள் தண்டிக்கப்பட்டு சமூகத்தின் முன் கூசி நின்றார்கள். ஆனால் இன்று அதே குற்றவாளிகளை கடவுளாக கொண்டாடும் காலகட்டத்தில் வாழ்கிறோம். கனிமொழி ஜெயிலில் இருந்து வெளிவந்த பின் அவரை தியாகியாக்கி திமுகவினர் வழிபட்டதை பார்த்தோம். ஆனால் அவர் தன் மேல் உள்ள கறையை நீக்காமல் மீண்டும் பொதுவாழ்வுக்கு வரமாட்டார் என எதிர்பார்த்தோம். ஆனால் இப்போது கூச்சமில்லாமல் மீண்டும் அவர் ராஜ்யசபாவுக்கு போகிறார். இது ஒருவிதத்தில் நமது நீதி அமைப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு நேரும் ஒரு அவமானம்.
கனிமொழியை நாம் விதிவிலக்காக எண்ண வேண்டியதில்லை. குற்றம் சாட்டப்பட்ட யார் பதவியில் இருப்பதும் தவறு தான். இதை எதிர்த்து ஒரு சமூக இயக்கம் உருவாக்கப்பட்டு போராட வேண்டிய காலத்தில் இருக்கிறோம். நம்முடைய முக்கிய பிரச்சனை ஊழலை தடுப்பதை விட ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் உரித்தான தண்டனை அனுபவிப்பதை உறுதி செய்வதே. அவர்கள் அதிகார ஸ்தானத்தில் இருக்கையில் அது நடக்காது. BCCI தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததும் இதை முன்னிட்டே.
சொல்லப் போனால் கனிமொழி விசயத்தில் நமக்கு இன்னும் கவலை கூடுதலாகிறது, ஏமாற்றம் மிகுகிறது. அவர் தேர்ந்த சிந்தனையும் தெளிவான ஆரசியல் பார்வையும் கொண்டவர். ஒரு எதிர்பார்க்கத்தக்க எழுத்தாளராக தோன்றியவர். ஆனால் தன் கண்ணியத்தை முழுக்க இழந்து அவர் ஊழலுக்கு கீழ்ப்படிவார் என நாம் எதிர்பார்க்கவில்லை. ஒருவிதத்தில் அது தமிழ் அறிவுலகத்துக்கு, சமூக சிந்தனையாளர்களுக்கு, அவர் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு துரோகம் பண்ணி விட்டார். அதனால் தான் அவரைப் போன்ற ஒருவர் தான் செய்த குற்றத்துக்காக தண்டனையை விட வெகுமதிகளை பெறுவது பார்க்கையில் நமக்கு கொதிப்பும் வருத்தமும் இன்னும் அதிகமாகிறது.
2G ஊழலில் கனிமொழி நேரடியாக சம்மந்தப்படவில்லை என்றொரு தரப்பு உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அவரது சம்பாத்தியம், சொத்துக்கள் பன்படங்கு பெருகி உள்ளன. சரி அவர் வழி சென்ற பணம் எங்கு போயிற்று? அவர் உண்மையை வெளிக்கொணர்ந்து தன்னை நியாயப்படுத்தப்பட்டுமே? அதுவரை அவர் தியாகி என்பதும், ஒரு வருடம் ஜெயிலில் இருந்த பரிகாரத்துக்காக அவரது அம்மாவை சமாதானப்படுத்த திமுக அவரை மீண்டும் காங்கிரசிடம் சமரசம் பேசி ராஜ்யசபா அனுப்புகிறதையும் வெட்கங்கெட்ட அரசியல் என்று மட்டுமே நாம் கூற முடியும்.
”அவனை முதலில் நிறுத்த சொல்லுங்க, நான் நிறுத்துறேன்” என்று மணிரத்னம் வசனத்தை சிலர் கனிமொழிக்கு ஆதரவாக சொல்லுகிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருக்கையில் ஏன் கனிமொழி கூடாது என்று கேட்கிறார்கள். இதற்கான ஒரே பதில் கனிமொழியை எதிர்ப்பவர்களை ஜெயா ஆதரவாளர்களாக பார்ப்பது ஒரு அபத்தம் என்பதே. திமுக அதிமுக என்கிற எதிரிடை கடந்து அரசியலை பார்ப்பவர்களும், இருதரப்பின் சீர்கேட்டை எதிர்ப்பவர்களும் தான் இங்கு இங்கிருக்கிறோம்.
மேலும் இதே தர்க்கத்தை நீங்கள் பயன்படுத்துவதானால் நீங்கள் ராஜபக்‌ஷேவுக்கு சர்வதேச நீதிமன்றம் தண்டனை வழங்க வேண்டும் எனவும் கேட்கக் கூடாது. அவர் ருவாண்டாவில், துருக்கியில், வங்கதேசத்தில், கம்போடியாவில் இனப்படுகொலை நடக்கவில்லையா எனக் கேட்பார். ஏன் இந்தியாவில் கூடத் தான் இஸ்லாமியரை பலகட்டங்களாய் படுகொலை செய்தார்கள். அதற்கு நீங்கள் நீதி வழங்கி விட்டீர்களா? இல்லையே? அப்புறம் எப்படி என்னை கேள்வி கேட்கலாம் என ராஜபக்‌ஷே கேட்கலாம். கனிமொழியை ஆதரிக்கும் ஈழ ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்லுவீர்கள். அவர் மோடியை உள்ளே தள்ளி விட்டு என்னிடம் வாங்க எனலாம். நீங்கள் முழி பிதுங்கி நிற்பீர்களா?
என்றுமே நாம் ஒரு அநீதியை இன்னொரு அநீதியின் பெயரில் நியாயப்படுத்தல் ஆகாது. நாளை உங்கள் மகளை ஒருவன் பலாத்காரம் பண்ணி விட்டு அல்லது உங்கள் மகனை ஒருவன் கொன்று விட்டு ஊரில் நடக்காததையா பண்ணி விட்டேன் எனக் கேட்பான். அவனையும் ஆதரிப்பீர்களா?

கருத்துகள்

Krishnaprabhu இவ்வாறு கூறியுள்ளார்…
Top class points.... Very true :)
Kalaivendhan இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க உண்ம தான்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...