Skip to main content

இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி – பந்து வீச்சு




2003 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நினைவிருக்கும். அதுவரை தொடரில் நன்றாக வீசி வந்த நம் வேகவீச்சாளர்கள் பதறி விதிர்விதிர்த்து மோசமாக வீசினர். 12 வருடங்களுக்கு பிறகு அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நம் வேகவீச்சாளர்கள் அதே போல் பதறி குழம்பிப் போய் பந்து வீசினர். ஷாமி, மோஹித் ஆகியோர் இத்தொடர் முழுக்க ஒரு குறிப்பிட்ட நீளத்தில் தொடர்ந்து வீசினதால் மட்டுமே நன்றாக வீசி விக்கெட்கள் வீழ்த்தினர். ஆனால் இன்றோ ஆஸ்திரேலியா ஆடுவதற்கு முன்பே அவர்கள் நிதானம் இழந்து பயப்பட துவங்கினர். அதனால் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தும் மிகை ஆர்வத்தில் ஒரே ஓவரில் பல பந்துகளை வீச முயன்று சொதப்பினர்.


 இன்றைய ஆட்டத்துக்கான ஆடுதளம் சற்றே மெத்தனமானது. ஆனால் இலங்கை ஆஸ்திரேலியா காலிறுதி ஆட்டம் நடந்த அன்று அளவுக்கு மெத்தனம் அல்ல. இந்த தளத்தில் 300க்குள் ஆஸ்திரேலியாவை நாம் சுருட்டியிருக்க முடியும். சற்று நிதானமாக அமைதியாக வீசியிருக்கும் பொருட்டு. ஆனால் நம் பந்து வீச்சாளர்கள், களத்தடுப்பாளர்கள் யாருமே இன்று உள்ளமைதியுடன் இல்லை.
இருந்தும் கூட அஷ்வின், ஷாமி ஆகியோர் அவ்வப்போது நன்றாக வீசியதால் மேக்ஸ்வெல், வாட்ஸன் ஆகியோரை சரியான நேரத்தில் வீழ்த்த முடிந்தது. வார்னர், கிளார்க் போன்றோரின் விக்கெட்டுகள் அதிர்ஷ்டத்தில் கிடைத்தன. மேக்ஸ்வெலின் விக்கெட் கிடைத்ததும் நம் வீரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமானது. அடுத்து எட்டு ஓவர்கள் நன்றாக வீசினார்கள். அமைதியும் நிதானமும் பந்து வீச்சில் தாளமும் திரும்பியது. இறுதி சில ஓவர்கள் மீண்டும் பதற்றத்தில் மோசமாய் வீச ஜான்சனின் காட்டு சுற்றலில் இருபது ஓட்டங்கள் கூடுதலாய் கொடுக்க நேர்ந்தது.
மேக்ஸ்வல் மட்டும் வெளியேறாமல் 48 ஓவர்கள் வரை ஆடியிருந்தா ஆஸ்திரேலியா 370இல் இருந்து 400 வரை எட்டி இருக்கும். அவ்விதத்தில் 328க்குள் சுருட்டியது என்பது ஒரு சின்ன சாதனை தான்.
இப்போதும் கூட இந்த 329 இலக்கை நம்மால் விரட்டி அடைய முடியும். ஆனால் அதற்கு நாம் நிதானமாக ஆட வேண்டும். முதல் இருபது ஓவர்கள் விக்கெட் கொடுக்க கூடாது. நூறு ஓட்டங்கள் எடுத்தால் கூட போதும். ஜான்சன், ஸ்டார்க்கை கடந்தால் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல வீச்சாளர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவின் வியூகம் எப்போதுமே முதல் இருபது ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகள் எடுப்பது தான். அதனால் தான் அவர்கள் மட்டையாட்டத்தை வலுவாக வைத்து பந்து வீச்சை பலவீனமாக கொண்டுள்ளார்கள். அவர்களின் திட்டத்தை முறியடித்து நிதானமாக ஆடினால் நாம் நிச்சயம் வெல்ல முடியும். ஆனால் பந்து வீச்சில் காட்டின பதற்றத்தை மட்டையாட்டத்திலும் காட்டினால் நாம் 20 ஓவருக்குள் 90 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் கொடுத்திருப்போம். பிறகு தோனியும் ரெய்னாவும் ஜடேஜாவுமாக நத்தை ஓட்டம் ஓடி 80 ஓட்டங்களுக்கு ஆஸ்திரேலியாவிடம் தோற்போம். 2003 இறுதி ஆட்டம் மீண்டும் மறு ஒளிபரப்பானது போல் இருக்கும்.
இன்று எந்த இந்தியா மட்டையாடுகிறது எனப் பார்ப்போம். நடுக்கமுற்ற இந்தியாவா அமைதியான இந்தியாவா? 2011 இறுதிப் போட்டியில் இறங்கின இந்தியாவா 2003இல் களமிறங்கின இந்தியாவா?
இப்போதைக்கு நம் வெற்றி வாய்ப்பு 60-40 தான். அரை இறுதி போட்டிகளில் பதற்றமாவது இயல்பு தான். நியுசிலாந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பதற்றமாக பந்து வீசியது. ஆனால் மட்டையாட்டத்தில் அமைதியும் நிதானமும் கொண்டிருந்தது. அதனால் வென்றது. இந்தியா என்ன பண்ணுகிறது என பார்ப்போம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...