Skip to main content

Posts

Showing posts from April, 2015

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

உயிர்மை நூல்களின் தரமும் அபாண்ட குற்றச்சாட்டும்

’’ மனுஷ்ய புத்திரன் நாலாந்தர மான வணிக எழுத்துகளை இலக்கியம் என்ற பெயரில் பதிப்பிக்கிறார்” . என  ஜெயமோகன் கூறியிருக்கிறார். ஒருவருக்கு எதிரான எந்த ஒரு அவதூறும் அவரை முன்னெடுப்பதற்கான ஒரு நல்வாய்ப்பையும் சேர்த்தே அளிக்கிறது. ஜெயமோகனின் இந்த கூற்றை எடுத்துக் கொள்வோம். இது உண்மையா? எனக்குத் தெரிந்த கடந்த பத்து வருடங்களில் தமிழில் வெளிவந்த மிக முக்கியமான புனைவு நூல்களை உயிர்மையும், தமிழினியும் சேர்த்து கொணர்ந்துள்ளன. முக்கியமான கட்டுரை நூல்கள், ஆய்வு நூல்கள், மொழியாக்கங்கள் காலச்சுவடில் இருந்து வந்துள்ளன. கவிதைகளை பொறுத்த மட்டில் உயிர்மை, காலச்சுவடு, புதிய எழுத்து ஆகிய பதிப்பகங்களை சொல்லலாம். உயிர்மையில் பெரும்பாலான முக்கிய தமிழ் எழுத்தாளர்களின் நூல்களும் வந்துள்ளன. அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை ஒரு பட்டியல் போடுகிறேன்.

தட்பம் தவிர்

இரண்டு வகையான வெகுஜன நாவல்கள் உண்டு. ஒன்று மலிவானவை. இன்னொன்று புத்திசாலித்தனமும் கலைநயமும் கூடியவை. முதல் வகைக்கு ராஜேஷ் குமாரையும், இரண்டாவதற்கு சுஜாதாவையும் உதாரணம் காட்டலாம். இன்று சுஜாதாவின் வாசகர்கள் அவர் “இலக்கிய எழுத்தாளர் இல்லைன்னு சொல்றாங்களே, உண்மையா?” என விசனமாக கேட்கிறார்கள். இன்னும் சிலர் இலக்கியமோ இல்லையோ அவர் போல விற்பனைத் தகுதி கொண்ட எழுத்தை வேறு யார் உருவாக்கி இருக்கிறார்கள் என கேட்கிறார்கள். எனக்கு இந்த இரு கேள்விகளுமே அவசியமற்றவை எனத் தோன்றுகின்றன.

ஜெயமோகனின் ஒரு பக்கம்

நேற்று ஒரு நண்பரின் திருமண வரவேற்புக்கு போயிருந்தேன். அங்கு முகநூலில் என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் ஒரு நண்பர் ஒரு கேள்வி கேட்டார்: “நீங்கள் ஜெயமோகன் பற்றி எழுதியிருந்தது படித்தேன். அவர் நிஜமாகவே அப்படிப்பட்டவரா?”. அக்கேள்வி உண்மையில் என்னை வருத்தப்பட வைத்தது. ஒரு சின்ன சங்கடத்துடன் “இல்லை அது ஜெயமோகனின் ஒரு பக்கம் மட்டுமே” என்றேன். பிறகு நான் எனக்குள் இதுபற்றி உரையாடிக் கொண்டிருந்தேன். ஜெயமோகனின் அந்த இன்னொரு பக்கம் என்ன?

அன்புள்ள ஜெயமோகன்

சமீபமாக ஒரு நண்பரிடம் சு.ரா பள்ளியில் இருந்து தோன்றிய எழுத்தாளர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு பள்ளி இருக்கிறதோ இல்லையோ, சு.ராவுடன் நெருக்கமாய் இருந்தவர்கள் தமிழின் முக்கிய எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், யுவன் இப்படி உங்களையும் சேர்த்து இந்த பட்டியல் நீளமானது. அவர் இந்த எழுத்தாளர்களை உருவாக்கவில்லை. அவர்கள் மீது உரிமை கோரவில்லை. தன் அருகாமையையும் பிரியத்தையும் அவர்களுக்கு அளித்தார். ஏன் இது போன்ற முக்கியமான எழுத்தாளர்கள் உங்கள் அருகாமையில், நட்பில் இருந்து தோன்றவில்லை? நீங்கள் முன்னிறுத்திய ஒருசிலரை ஏன் வாசகர்கள் பொருட்படுத்தவில்லை? இதற்கு ஒரே காரணம் தான் தோன்றுகிறது. நீங்கள் உங்கள் நண்பர்கள் ஒன்று சேவகர்களாகவோ புரவலர்களாகவோ அல்லது உபத்திரவமற்ற வாசகர்களாகவோ இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். உங்கள் வாசகர்களில் சிறப்பாக தனித்தன்மையுடன் யாராவது எழுத முற்பட்டால் அவர்களை முளையிலேயே கிள்ளி விடுவீர்கள். சராசரியாக எழுதினால் ஊக்குவிப்பீர்கள். உங்கள் வாசக வட்டத்துக்குள் தனிமனித சுதந்திரத்துடன் யாரும் விவாதிப்பதையோ எழுதுவதையோ உங்களால் சகித்துக்...

தொட்டாற்சிணுங்கிகள்

உங்கள் படைப்பை யாராவது கிண்டலடித்தால் தாங்கிக் கொள்வீர்களா? ஜென்ம விரோதியாக பாவிப்பீர்களா அல்லது புறக்கணித்து கூலாக கடந்து விடுவீர்களா? சமீபத்தில் நவீன கவிதை பற்றின நீயா நானாவில் இ.எம்.எஸ் கலைவாணனிடம் கோபிநாத் கேட்டார்: “உங்கள் புத்தகத்தை எடுத்துப் பார்க்கும் நான் இவை வெறும் காகிதங்கள் தானே, வேறு என்ன இருக்கிறது என கேட்டால் என்ன சொல்வீர்கள்?”. அதாவது கோபிநாத் அப்படி கருதி கேட்கவில்லை. ஒரு சாத்தியத்தை பரிசீலிக்கும் நோக்கில் கேட்டார். அதற்கு கலைவாணன் “எனக்கு வலிக்கும்” என தன் கரகர தழுதழுத்த குரலில் சொன்னார்.

ரஜினியும் கமலும்

  எனக்கு என்றுமே ரஜினி ரொம்ப நவீனமான நடிகர் எனத் தோன்றும். குளோசப் மற்றும் சூழலை மிக நுணுக்கமாய் காட்டும் தொழில்நுட்ப வசதி காரணமாய் ஒரு நடிகன் இன்று மிக மிக கொஞ்சம் உணர்ச்சிகளை காட்டினால் போதும் - அது பன்மடங்காக பெருகி பார்வையாளனை அடையும். ஒரு நுண்பெருக்கியின் கீழ் ஒரு எறும்பு நிற்பது போன்ற காரியம் இது. ஆனால் கமல் இதை புரிந்து கொண்டதாய் தெரியவில்லை. கமலுக்கு தன் கை, கால், விரல்கள், மூக்கு, கண், நாடி நரம்பெல்லாம் நடிக்க வேண்டும். சட்டகம் முழுக்க தான் வியாபிக்க வேண்டும். படக்கருவி, இசை, சூழல் இவற்றின் பங்கை அவர் முக்கியமாய் கருதுவதில்லை.

நவீன கவிதை “நீயா நானா”

இந்த குறிப்பிட்ட நீயா நானாவை டிவியில் பார்க்க தவறி விட்டேன். ஆனால் அடுத்த நாளில் இருந்து இதைப் பற்றி தான் பேஸ்புக் கொதித்து நுரை விட்டுக் கொண்டிருந்தது. எதற்குத் தான் திட்டுகிறார்கள் என எனக்கு ரொம்ப நேரமாய் புரியவில்லை. ஆளாளுக்கு வாலை விட்டு தலையை பிடித்து வாய்க்குள் கையை விட்டு என்னவெல்லாமோ பண்ணிக் கொண்டிருந்தார்கள். இப்போது இணையத்தில் அந்நிகழ்ச்சியை பார்த்த பின்னும் ஏன் திட்டினார்கள் என எனக்கு சத்தியமாக புரியவில்லை. நான் பார்த்த நீயா நானாக்களில் சிறந்த அத்தியாயங்களில் ஒன்றாக இதை நினைக்கிறேன். நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. நான் மிகவும் நேசிக்கும் ஒரு கலைவடிவம் இப்படி ஒரு பிரைம் டைம் நிகழ்ச்சியில் கொண்டாடப்படும் என நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. ஆண்டனி மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.

ஏன் யாரும் கவிதைத் தொகுப்புகள் வாங்குவதில்லை?

     பதிப்பகங்கள் பற்றி முருகேச பாண்டியன் பெப்ரவரி மாத உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அவருக்கு எதிர்வினையாக வா.மணிகண்டனும் ஒரு கட்டுரையை தன் வலைதளத்தில் எழுதி உள்ளார். இருவரும் ஏன் கவிதைகள் இங்கு பரவலாக படிக்கப்படுவதில்லை, ஏன் கவிதைத் தொகுப்புகள் விற்பதில்லை எனும் முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்கள்.

ஜெயகாந்தன் பற்றி எம்.டி.எம்: சில மாற்றுக்கருத்துக்கள்

எம்.டி.எம் ஜெயகாந்தன் பற்றி எழுதியுள்ள இந்த அஞ்சலிக்கட்டுரை படிக்க வேண்டிய ஒன்று . இதன்   ஒரே சிக்கல் முக்கால்வாசியும் ஒரு ரஜினி ரசிகன் அவரது பட ரிலீஸ் அன்று தியேட்டர் வாசலில் நின்று புளகாங்கிதம் கொள்ளும் தொனியில் உள்ளது . குறிப்பாக ஜெயகாந்தன் பற்றின வாய்மொழிக் கதைகளை எம் . டி . எம் பட்டியலிடுவது . ஜெயகாந்தன் தான் ஒவ்வொரு கதை எழுதும் போதும் மௌனி படிப்பதாய் சொன்னதாய் ஒரு கருத்து இதில் வருகிறது . அது உண்மையென்றால் மௌனியின் கதை அவருக்கு மொழியின் நுணுக்கம் , பிரச்சாரம் செய்யாமல் மனதின் ஆழத்துக்குள் பயணிப்பது பற்றி ஒன்றூமே கற்றுத்தரவில்லையா ? அல்லது ஜெயகாந்தன் தான் மௌனியை உள்வாங்கிக் கொள்ளவில்லையா ? தன்னுடைய எழுத்து பாணியின் தட்டைத்தன்மையை , உருட்டுக்கட்டையால் வீசுவது போன்ற கண்மூடித்தனத்தை உணர்ந்திருந்தும் அவர் தனது வாசகர் பரப்புக்காக தொடர்ந்து அப்படியே எழுதினாரா ? ஒருவர் தான் மதிக்கிற ரசிக்கிற ஒரு எழுத்துக்கு நேர்மாறாக எப்படி எழுத முடியும் என எனக்கு சத்தியமாக விளங்கவில்லை .

வாழ்த்துக்கள் வா.மணிகண்டன்!

வா.மணிகண்டன்  சரளமான , நகைச்சுவை ததும்பும் அனுபவக் கட்டுரைகள் எழுதுவதில் சமர்த்தர் . கடந்த பத்து வருடங்களில் பத்திரிகை பத்தியாளர்கள் , பிளாகர்கள் கூட நாட்டு நடப்பு , அரசியல் , சமூகம் என நகர்ந்து விட்டாலும் மணிகண்டன் தன்னுடைய காணி நிலத்திலேயே வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் . தனக்கு பிடித்தமான பாணியில் எழுதுவது தான் அவர் எழுத்து புதுமையுடன் இருப்பதற்கு காரணம் என நினைக்கிறேன் .

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் நம் பண்பாட்டுச் சூழலில் ஒரு புயல் போல் வீசிய காலத்தில் நான் வாசிக்க துவங்கவில்லை. அவரது தாக்கத்தை நான் நேரடியாக உணர்ந்ததில்லை. வெகுஜன எழுத்தை பொறுத்தமட்டில் நான் சுஜாதா, பாலகுமாரன் காலகட்டத்தை சேர்ந்தவன். அதே போல நான் ஜெயகாந்தனை முற்றுமுழுதாக படித்ததும் இல்லை. சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், பாரிசுக்கு போ போன்றவை, சில குறுநாவல்கள், பல சிறுகதைகள், கூர்மையான கட்டுரைகள் இது தான் நான் வாசித்தவை. ஆக ஜெயகாந்தன் பற்றி ஒரு முழுமையான மதிப்பீடு வைக்கும் தகுதி எனக்கில்லை. படித்த மட்டில் அவர் மீதான என் மனப்பதிவை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

உலகக்கோப்பை கடாவிருந்தில் இந்தியாவும் நியுசிலாந்தும்

(இரண்டு வாரங்களுக்கு முன்பான கல்கியில் வெளியான கட்டுரை) உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்தியாவும் இறுதியில் நியுசிலாந்தும் பூசாரி ஓங்கிய அருவா முன் நடுங்கியபடி கால்களை பின்னிக் கொண்டு நகரும் ஆட்டைப் போன்றே சென்று துண்டாகின. அந்த நொடி ஆட்டை அவிழ்த்து விட்டாலும் அது ஓடாது. தானாகவே சென்று கழுத்தைக் கொடுக்கும். அந்தளவுக்கு மனதளவில் அது தன்னை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்திருக்கும். கிரிக்கெட் 90% உளவியல் ஆட்டம் தான். உலகக்கோப்பையின் “நீயா நானா” கட்டத்தை அடைந்த பின் இந்தியா ஆஸ்திரேலியா எனும் அணியிடம் அல்ல, அந்த அணி மீதான தன் அச்சத்திடம் தான் மோதியது. அதனாலே தோற்றது.

என்கவுண்டர் என்பதே போலி இல்லையா?

திருப்பதி வனப்பகுதியில் நடந்த 20 பேர் என்கவுண்டர் பற்றின சேதிகளை கேட்கும் போது எனக்கு மேற்கண்ட கேள்வி தான் எழுகிறது. இந்த என்கவுண்டர் சம்மந்தமாக மீடியா முன்வைக்கும் கேள்விகளான 20 பேரும் வெறும் உள்ளாடைகளுடன், ஒரு மாத பழைய சந்தனக்கட்டைகளுடன் படுக்க வைக்கப்பட்டுள்ளது, ஒரே போல் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சுடப்பட்டிருப்பது, அங்கு 5 கிலோமீட்டர் சுற்றளவில் சந்தன மரங்களே இல்லாதது ஆகியவை இந்த என்கவுண்டர் காவல்துறையால் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தின் குறையை தான் மீண்டும் மீண்டும் விமர்சிக்கின்றன. ஒருவேளை இந்த என்கவுண்டர் இன்னும் நம்பத்தகுந்த முறையில் “சித்தரிக்கப்பட்டிருந்தால்” சரியா? அப்போது நம் மனசாட்சி உறுத்தப்பட்டிருக்காதா?

என்கவுண்டர் கொலைகளுக்கான தீர்வு என்ன?

20 தமிழ ர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சனையை ஆந்திர அரசு × தமிழர்கள் என தமிழ் தேசிய மனப்பான்மையுடன் மட்டும் பார்க்காமல் இந்தியா முழுக்க காவல்துறை செய்து வரும் மனித உரிமை மீறல் குற்றங்களின் ஒரு பகுதியாகவும் காண வேண்டும். தமிழகத்தில் ரவுடிகளும் பிற குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்படும் போதும் நாம் இவ்வாறே அதை எதிர்க்க வேண்டும். லாக் அப் வன்முறை உள்ளிட்ட அனைத்து வகை காவல் துறை வன்முறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு: தகுதியும் வேலையும்

இன்று ஒரு கல்லூரி ஆசிரியர் வேலையிடத்துக்கான சந்தை மதிப்பு 12 லட்சத்தில் இருந்து 25 லட்சம் வரை. இந்த அதிமுக அரசு பதவிக்கு வந்த பின், வேலை நியமன ஊழலை ஒழுங்குபடுத்தி ஒரு கட்டாய வடிவத்துக்கு கொண்டு வந்துள்ளது. இது பற்றி முன்னர் ஜுனியர் விகடனில் வந்த அறிக்கை நினைவிருக்கும். இந்த லஞ்சத்தில் ஒரு பகுதி அரசுக்கும் போகிறது என ஜுவியில் கூறியிருந்தார்கள்.

எங்கிட்ட ஒரு காசிருக்கு

சின்ன வயதில் என் அப்பா அடிக்கடி ஒரு நாட்டுப்புற கதை சொல்வார். ஒரு குருவிக் கதை. அதை அண்ணாத்துரை ஒரு மேடையில் சொன்னதாக கூறுவார். ரொம்ப நகைச்சுவையான அட்டகாசமான கதை. கதை இப்படி போகிறது. ஒரு ராஜாவும் அவர் மந்திரியும் வேட்டைக்கு வனத்துக்கு போகிறார்கள். வேட்டை முடித்து இருவருமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு குருவி இவ்வாறு பாடுவது கேட்கிறது: “என் கிட்ட ஒரு காசிருக்கு யாருக்கு வேணும் யாருக்கேனும் தேவையிருந்தா வாங்கிட்டு போங்கோ”