முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்கவுண்டர் என்பதே போலி இல்லையா?


திருப்பதி வனப்பகுதியில் நடந்த 20 பேர் என்கவுண்டர் பற்றின சேதிகளை கேட்கும் போது எனக்கு மேற்கண்ட கேள்வி தான் எழுகிறது. இந்த என்கவுண்டர் சம்மந்தமாக மீடியா முன்வைக்கும் கேள்விகளான 20 பேரும் வெறும் உள்ளாடைகளுடன், ஒரு மாத பழைய சந்தனக்கட்டைகளுடன் படுக்க வைக்கப்பட்டுள்ளது, ஒரே போல் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சுடப்பட்டிருப்பது, அங்கு 5 கிலோமீட்டர் சுற்றளவில் சந்தன மரங்களே இல்லாதது ஆகியவை இந்த என்கவுண்டர் காவல்துறையால் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தின் குறையை தான் மீண்டும் மீண்டும் விமர்சிக்கின்றன. ஒருவேளை இந்த என்கவுண்டர் இன்னும் நம்பத்தகுந்த முறையில் “சித்தரிக்கப்பட்டிருந்தால்” சரியா? அப்போது நம் மனசாட்சி உறுத்தப்பட்டிருக்காதா?

 ஒருவேளை அவர்கள் ஆடைகளுடன் வெவ்வேறு போஸ்களில், புதுசாக (போலிசாராலே) வெட்டப்பட்ட சந்தனக்கட்டைகளுடன், வெவ்வேறு இடங்களில் சுடப்பட்டிருக்க வேண்டுமா? அவர்களின் ஆயுதங்கள் என்ற பெயரில் சில கத்திகள், துப்பாக்கிள் அங்கு சிதற விடப்பட்டிருக்க வேண்டுமா? அவர்களால் தாக்கப்பட்டதாய் சில காவலர்கள் போலிக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் “அனுமதிக்கப்பட்டிருக்க்க” வேண்டுமா? அப்படி நடந்திருந்தால் ஒருவேளை இவ்வளவு தீவிரமான மீடியா கவனமும் பரபரப்பும் ஏற்பட்டிருக்காதோ?

 இந்த என்கவுண்டரின் சிறப்பே இது நம்மை எளிதாக கடந்து செல்ல அனுமதிக்காதபடி கொடூரமாக நடந்துள்ளது என்பது. நம்மைச் சுற்றி இன்னும் நாசூக்காய், சாமர்த்தியமாய் திட்டமிட்ட என்கவுண்டர்கள் நடக்கின்றன. அவை சரியாக களம் அமைக்கப்பட்டு நடிக்கப்பட்டதாலே போதிய மீடியா கவனம் பெறவில்லையோ?


அடிப்படையில் நாம் எல்லாவகை போலீஸ் சூடுகளையும் கடுமையாய் விமர்சித்து எதிர்க்க வேண்டும். நம்பத்தகுந்தபடியாய் சித்தரிக்கப்படுகிற என்கவுண்டர்களையும் தான். என்கவுண்டர் என்பதே போலி எனத் தெரிந்தும் கூட நாம் நம் பாசாங்கை அடித்து நொறுக்கும் இந்த வகையான வெளிப்படை என்கவுண்டர்களை மட்டும் வேறுவழியில்லாமல் எதிர்த்து கொந்தளிப்பது எந்த வகையில் நியாயம்? இது போன்று மோசமாக செட் செய்யப்பட்ட மற்றொரு என்கவுண்டர் நடப்பது வரை மீண்டும் கண்மூடி இருக்கப் போகிறோமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...