முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்கவுண்டர் என்பதே போலி இல்லையா?


திருப்பதி வனப்பகுதியில் நடந்த 20 பேர் என்கவுண்டர் பற்றின சேதிகளை கேட்கும் போது எனக்கு மேற்கண்ட கேள்வி தான் எழுகிறது. இந்த என்கவுண்டர் சம்மந்தமாக மீடியா முன்வைக்கும் கேள்விகளான 20 பேரும் வெறும் உள்ளாடைகளுடன், ஒரு மாத பழைய சந்தனக்கட்டைகளுடன் படுக்க வைக்கப்பட்டுள்ளது, ஒரே போல் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சுடப்பட்டிருப்பது, அங்கு 5 கிலோமீட்டர் சுற்றளவில் சந்தன மரங்களே இல்லாதது ஆகியவை இந்த என்கவுண்டர் காவல்துறையால் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தின் குறையை தான் மீண்டும் மீண்டும் விமர்சிக்கின்றன. ஒருவேளை இந்த என்கவுண்டர் இன்னும் நம்பத்தகுந்த முறையில் “சித்தரிக்கப்பட்டிருந்தால்” சரியா? அப்போது நம் மனசாட்சி உறுத்தப்பட்டிருக்காதா?

 ஒருவேளை அவர்கள் ஆடைகளுடன் வெவ்வேறு போஸ்களில், புதுசாக (போலிசாராலே) வெட்டப்பட்ட சந்தனக்கட்டைகளுடன், வெவ்வேறு இடங்களில் சுடப்பட்டிருக்க வேண்டுமா? அவர்களின் ஆயுதங்கள் என்ற பெயரில் சில கத்திகள், துப்பாக்கிள் அங்கு சிதற விடப்பட்டிருக்க வேண்டுமா? அவர்களால் தாக்கப்பட்டதாய் சில காவலர்கள் போலிக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் “அனுமதிக்கப்பட்டிருக்க்க” வேண்டுமா? அப்படி நடந்திருந்தால் ஒருவேளை இவ்வளவு தீவிரமான மீடியா கவனமும் பரபரப்பும் ஏற்பட்டிருக்காதோ?

 இந்த என்கவுண்டரின் சிறப்பே இது நம்மை எளிதாக கடந்து செல்ல அனுமதிக்காதபடி கொடூரமாக நடந்துள்ளது என்பது. நம்மைச் சுற்றி இன்னும் நாசூக்காய், சாமர்த்தியமாய் திட்டமிட்ட என்கவுண்டர்கள் நடக்கின்றன. அவை சரியாக களம் அமைக்கப்பட்டு நடிக்கப்பட்டதாலே போதிய மீடியா கவனம் பெறவில்லையோ?


அடிப்படையில் நாம் எல்லாவகை போலீஸ் சூடுகளையும் கடுமையாய் விமர்சித்து எதிர்க்க வேண்டும். நம்பத்தகுந்தபடியாய் சித்தரிக்கப்படுகிற என்கவுண்டர்களையும் தான். என்கவுண்டர் என்பதே போலி எனத் தெரிந்தும் கூட நாம் நம் பாசாங்கை அடித்து நொறுக்கும் இந்த வகையான வெளிப்படை என்கவுண்டர்களை மட்டும் வேறுவழியில்லாமல் எதிர்த்து கொந்தளிப்பது எந்த வகையில் நியாயம்? இது போன்று மோசமாக செட் செய்யப்பட்ட மற்றொரு என்கவுண்டர் நடப்பது வரை மீண்டும் கண்மூடி இருக்கப் போகிறோமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...