முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

ப்டம்: அய்யப்ப மாதவன்

ரவிசுப்பிரமணியனின் புதிய தொகுப்பான “விதானத்து சித்திரம்” படித்த போது அதில் ஒரு விசயம் வித்தியாசமாக தோன்றியது. வழக்கமாக, நம் கவிகள் உள்ளூர்ச் சூழலை சித்தரித்தாலும் அதில் ஒலிப்பது ஒரு ஐரோப்பிய குரலாக இருக்கும். தனித்து, விடுபட்ட, சுயமாய் சிந்திக்கிற, சிறிய ஐயத்துடன், விலகலுடன் எதையும் கவனிக்கிற, பெண்கள் முந்தானையை சரி செய்வது போல் பிரக்ஞை நழுவி விடாதிருக்கும் கவனத்துடன், உணர்ச்சிவயப்பட்டு நம்மை இழந்து விடாதிருக்க விரும்பும் ஒரு ஐரோப்பிய மனமே நமது கணிசமான சமகால கவிதைகளில் கூட வாசகனை வரவேற்கிறது. ரவிசுப்பிரமணியனிடம் ஒரு அசலான தமிழ் மனம் வெளிப்படுகிறது; அவரிடம் சராசரி இந்தியத்தனம் தெரிகிறது. குறிப்பாய், தி.ஜாவை வெகுவாய் நினைவுபடுத்துகிறார்.
 இசையில் லயித்து தோயும் மனம், அந்த மனத்தின் இன்னொரு பக்கம் தெரியும் வன்மமும் பொறுப்பின்மையும், எதிலும் தன்னை இழந்து வெல்லக்கட்டி போல் கரையும் மனப்போக்கு, சிலாகிப்பு, சிலாகிப்பு, சிலாகிப்பு….

 அனைத்தும் சிறந்த, கச்சிதமான, முழுமை பெற்ற கவிதைகள் அல்ல. ஆனால் எனக்கு அது ஒரு பிரச்சனை அல்ல. அந்த மொழிக்காகவே அவரை முழுக்க புன்னகை மாறாது வாசித்தேன். மிகச்சிறிய தொகுப்பு. எளிய நேரடியான கவிதைகள். நேற்று எங்கள் பல்கலையின் தபால் பிரிவுக்கு சென்று நூலை வாங்கி மின்தூக்கியிடம் வந்து காத்தி்ருந்தேன். அதன் பிறகு மின்தூக்கி என்னை தப்பான ஒரு தளத்துக்கு எடுத்துச் சென்றது. அங்கிருந்து மீண்டும் காத்திருந்து ஏறி கீழ்த்தளத்துக்கு வந்து காப்பி குடித்து, மீண்டும் ஏறி மேல்தளத்தில் நூலகம் போகும் முன் மொத்த தொகுப்பையும் படித்து முடித்து விட்டேன்.
எனக்குப் பிடித்த இரு கவிதைகளை கீழே தருகிறேன்.

அப்படித்தானே அமிர்தா
பகல் நேரத்துப்
பொரிகளின் ஞாபகத்தில்
நியான் விளக்கொளியில்
படிக்கட்டுப் பக்கமாய்
வந்து வந்து மீள்கின்றன
மீன்கள்

எப்போதாவது
மரங்களிலிருந்து உதிரும்
சருகுகள் கண்டு ஏமாந்து
விடியலின் பொழுதுக்காய்
குளமெல்லாம் சுற்றி வருகின்றன

இதில்
மீன்களுக்கும்
எனக்கும்
பொரி தூவும் விரல்களுக்கும்
உனக்கும்
யாதொரு சம்பந்தமும் இல்லை தானே
அமிர்தா

வால் முளைத்த அன்பு
அணிலாய்
உருவெடுத்த அன்பு
மரம் தாவி சுவரேறி
தயங்கித் தயங்கி வருகுது வீட்டுக்குள்

இரு கையால்
வணக்கம் சொல்வதான பாவனை

பயந்தபடி ஒரு பார்வை
வாலசைத்து வரையும் குதூகலம்
ஓடத் துடிக்கும் பரபரப்பு

சர சரவென்று ஓடி

திரும்ப வந்து பார்த்து நிற்கிறது அன்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...