Skip to main content

இந்துத்துவாவுக்கு இந்து மதம் முக்கியமல்ல: சாவார்க்கரில் இருந்து மோடி வரை (1)

Image result for ashis nandy

இந்துத்துவாவை நான் எப்படி புரிந்து கொள்கிறேன்?
 மதவாதத்தின் அடிப்படையில் ஒற்றை பண்பாட்டு அடையாளத்தின் கீழ் இந்திய சமூகத்தை ஒரு பிராந்தியமாய் கண்டு, அவ்வாறே இந்துக்களை ஒன்று திரட்ட முயலும் ஒரு கருத்தாக்கம்.
 இந்துத்துவாவின் மையவிசையாக இந்து மத பெருமிதத்தை, பிராமணியத்தையே நான் கண்டு வந்துள்ளேன். சொல்லப் போனால் பசுத்தோல் போர்த்திய சாதியமாகக் கூட நான் இந்துத்துவாவை கண்டதுண்டு. பாபர் மசூதியும், காவி உடை தரித்த சாமியார் அரசியல் தலைவர்களும், அத்வானியின் ரத யாத்திரையும், மதத்தின் பெயரிலான படுகொலைகளும் என் கண்ணை விட்டு மறைவதில்லை. இந்த பிம்பங்களின் ஊடாகத் தான் நான் பா.ஜ.கவை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இத்தனை நாட்களாய் புரிந்து வந்திருக்கிறேன். தமிழகத்திலும் மதவெறி என்றதுமே நம் நாவில் உருண்டு வரும் சொல் பா.ஜ.க தானே!
 ஆனால் சமீபத்தில் நான் வாசித்த ஒரு கட்டுரை இந்த பார்வையை முழுக்க மாற்றி அமைத்தது எனலாம்.

 ஆஷிஸ் நந்தி எழுதிய “A Disowned Father of the Nation in India: Vinayak Damodar Savarkar and the Demonic and the Seductive in Indian Nationalism” (India and the Unthinkable எனும் நூலில் இடம்பெற்றது; Oxford பதிப்பக வெளியீடு). ஆய்வுக் கட்டுரை என்றாலும் வெகுசுவாரஸ்யமானது இது.
சாவார்க்கரை ஒரு தீவிர தேசியவாதியாக பார்க்க முயலும் ஆஷிஸ் நந்தி அவரது ஐரோப்பிய கல்வி, நம்பிக்கைகள், அணுகுமுறை, உளவியல் ஆகியவை எப்படி பிற்பாடு இந்து தேசியவாதம் தோன்ற காரணமாகியது, எப்படி நாம் இன்று காணும் இந்துத்துவாவில் சாவார்க்கரின் ஆளுமையின், உளவியலின் நிழல் விழுந்து கிடக்கிறது என விளக்குகிறார். சாவார்க்கரின் அந்த நம்பிக்கைகள், அணுகுமுறை தாம் என்ன?
முதலில், சாவார்க்கர் ஒரு மதநம்பிக்கையாளரோ இந்து மத வெறியரோ அல்ல. அவர் ஒரு நாத்திகர். மரணத்துக்கு பிறகு தனது ஈமச்சடங்குகளை இந்து முறைப்படி செய்ய வேண்டாம், மின்மயானத்துக்கு கொண்டு போய் தன்னை எரித்தால் போதும் என சொன்னவர் அவர். மோடி இன்று பல்லாயிரம் மக்கள் மத்தியில் நின்று யோகா செய்கிறார். நெற்றியில் குங்குமம் இட்டு காவி முண்டாசு கட்டி போஸ் கொடுக்கிறார். யோகி ஆத்யத்நாத் போன்ற ஒரு துறவியை உ.பி முதல்வராக்குகிறார். மோடியின் தலைமையில் இந்து மத பெருமிதத்தை முடிந்த இடங்களில் எல்லாம் முன்னெடுக்க பா.ஜ.க தலைவர்கள் முயல்கிறார்கள். ஆனால் சாவார்க்கர் இதையெல்லாம் செய்ய மாட்டார் என்று மட்டுமல்ல, அவருக்கு இந்து மத சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் கிஞ்சித்தும் ஆர்வமில்லை.
 பா.ஜ.க இன்று பசுவை புனிதமான உயிராக பார்க்கிறது. பசு பாதுகாவலர்களாய் ஒவ்வொரு காவி விசுவாசியும் செயல்படுகிறார்கள். ஆனால் சாவார்க்கர் பசுவை கசாப்பு செய்வது தப்பில்லை என அறிவித்தார். பசுவில் எந்த புனிதமும் இல்லை, அது ஒரு உதவாக்கரை மிருகம் என கூறினார். அது மட்டுமல்ல, இந்துக்கள் சைவ உணவுப் பழக்கத்தை விடுத்து, கறி, மீன், முட்டை ஆகியன உண்ண வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். காந்தி லண்டனில் சாவார்க்கரை அவரது இருப்பிடத்துக்கு சென்று சந்திக்கிறார். அப்போது சாவார்க்கர் இறால் சமைத்துக் கொண்டிருக்கிறார். காந்தி அவரிடம் எதையோ தீவிரமாய் உரையாட ஆரம்பிக்க சாவார்க்கர், வம்படியாக, “வாங்க முதலில் சாப்பிட்டுவிட்டு பேசுவோமே” என்கிறார். மீன் உணவைப் பார்த்த காந்தி சற்று தயங்குகிறார். உடனே சாவார்க்கர் “எங்களுடன் சாப்பிட நீங்கள் தயாராய் இல்லை என்றால் உங்களுடன் நாங்கள் எப்படி வேலை செய்ய முடியும்?” என்கிறார்.
 இந்த சந்திப்பு நிகழ்ந்த காலத்தில் சாவார்க்கர் இந்துத்துவாவை முன்னெடுக்கவில்லை. அவர் அப்போது ஆயுதப் போராட்டம் மூலம் இந்திய விடுதலையை முன்னெடுக்கும் ஒரு தீவிர தேசவிடுதலை போராளி. அப்போதே அவருக்கு காந்தியின் மென்மையான, கனிவான, அனைவரையும் அணைத்துப் போகும் அணுகுமுறை மீது கடும் கசப்பு இருந்தது. முக்கியமாய் காந்தியின் சைவ உணவுப் பழக்கம் சாவார்க்கருக்கு அருவருப்பாய் இருந்தது.
ஆய்வாளர் ஜி.பி தேஷ்பாண்டே சாவார்க்கரை ஒரு “மதசார்பற்ற வகுப்புவாதி” என அழைத்து, அவர் முன்னெடுத்தது ஒரு “மதம் கடந்த கொள்கை” என்கிறார். சாவார்க்கர் மட்டுமல்ல அவருக்கு முந்தைய இந்துத்துவர்களான கேஷவ் பலிராம் ஹெட்ஜ்வார் (ஆர்.எஸ்.எஸ்ஸின் முதல் தலைவர்) போன்றோர் ஐரோப்பிய தாக்கமும், பகுத்தறிவுப் பார்வையும் கொண்டு இந்துமத சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர்கள்.
சாவார்க்கருக்கு காந்தி மீது இருந்த வெறுப்பு கலாச்சார ரீதியானது மட்டும் அல்ல. கருத்தியல்ரீதியாகவும் அவர் காந்திக்கு முழுக்க நேர் எதிரானவர். காந்தியின் அகிம்சை, உண்ணாநிலை போராட்டங்கள், பசுவின் மீதான அக்கறை ஆகியவற்றை சாவார்க்கர் “விஞ்ஞானத்துக்கு புறம்பானது”, “அறிவுக்கு புறம்பானது” என அழைத்தார். காந்தி கிராமிய வாழ்க்கையை உன்னதமாய் எண்ணினார் என்றால் சாவார்க்கர் நகரமயமாக்கலையும் அறிவியலையும் பகுத்தறிவையும் நவீன மாற்றங்களையும் கொண்டாடினார். (பெரியாரியவாதிகளுக்கு இதையெல்லாம் படிக்க நிச்சயம் அதிர்ச்சியாக இருக்கும் தான்.)
 நவீன அறிவியல் எந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்திய போது காந்தி ராட்டையை ஒரு குறியீடாய் கையில் எடுத்தார். நவீன ஐரோப்பா துப்பாக்கி, குண்டுகள், விமானங்கள், பீரங்கிகள் மூலம் உலகை ஆக்கிரமித்த போது காந்தி அதற்கு மாற்றாய் அகிம்சையை முன்னெடுத்தார். இந்த நடவடிக்கைகளை சாவார்க்கர் ”பிற்போக்கானவை” என்றார். நவீன அறிவியலையும் அரசியல் கோட்பாடுகளையும் அறிந்து பின்பற்றுவதே இந்தியா முன்னேற அவசியம் என சாவார்க்கர் கருதினார்.

இந்த நேர்கோட்டில் சாவார்க்கரும் பெரியாரும் கைகுலுக்குவதை நாம் கற்பனை செய்ய முடியும். (பெரியாரியவாதிகள் கொதிப்படையாதீர்கள். தொடர்ந்து படியுங்கள்!) இருவருமே மதத்தை பிற்போக்காய் கருதினர். ஐரோப்பிய பகுத்தறிவுவாதத்தை, அறிவியலை, முன்னேற்றத்தை வழிபட்டனர். இருவருமே தேசியவாதிகள். இருவருமே காந்தியை வெறுத்தார்கள். ஒரே வித்தியாசம் இருவருமே யாரை எந்த இனத்தவரை தம் கொள்கை விரோதிகளாய், மற்றமையாய் கண்டார்கள் என்பது தான். சாவார்க்கருக்கு இஸ்லாமியர் மற்றமை என்றால் பெரியாருக்கு பிராமணர்கள்.
(தொடரும்)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...