Skip to main content

இந்துத்துவாவுக்கு இந்து மதம் முக்கியமல்ல 5

Related image
காந்தி இந்த தேசியவாத, முதலாளித்துவ நகரமயமாக்கல் அஜெண்டாவுக்கு குறுக்கே நின்றது தான் இந்துத்துவர்கள் அவர் மீது கொதிப்புற்றதற்கும் அவரை படுகொலை செய்ய முடிவெடுத்ததற்கும் உண்மையான காரணம். இந்திய விடுதலைக்குப் பின் காந்தி தேசபக்தி எழுச்சி அலையில் பங்கெடுக்க மறுத்தார். பிரிவினைக்கு முன்பாக இந்தியா பாகிஸ்தானுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை (75 கோடிகள்) அவர்களின் பங்காக அளிக்க வேண்டும் என ஒப்பந்தம் இருந்தது. ஆனால் பிரிவினையின் போது பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைமுகமாய் வன்முறையில் ஈடுபட்டது, காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது ஆகிய விசயங்கள் இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கசப்பையும் உண்டு பண்ண, “நம் எதிரி தேசத்துக்கு அந்த ஒப்பந்த தொகையை கொடுக்கக் கூடாது” எனும் கோரிக்கை பரவலாய் எழுந்தது. பிரதமர் நேருவும் இதை ஏற்றுக் கொண்டார். இப்பணத்தை அளித்தால் பாகிஸ்தான் அதை இந்தியாவுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என இந்திய பாராளுமன்றமும் நம்பியது.

 ஆனால் காந்தி மட்டுமே அத்தொகையை பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்தே ஆக வேண்டும் என வற்புறுத்தி உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டார். பாகிஸ்தான் வெறுப்பு எனும் கருத்தமைவு இந்தியா எனும் தேசம் புதிதாய் உருவான அன்றைய நிலையில் அரசியல்வாதிகளுக்கும் தலைவர்களுக்கும் தேவையிருந்தது. ஒரு தேசியவாத உணர்வுநிலையை, எழுச்சியை கட்டமைக்க அது அவசியப்பட்டது. ஆனால் காந்தியோ இந்த எழுச்சி மனநிலையை ஒரு பலூனை உடைப்பது போல் உடைக்க எத்தனித்தார்.
 நேரு, பட்டேல் உள்ளிட்ட தலைவர்களின் பாகிஸ்தான்-மற்றமை தேசியவாத கருத்தமைவுக்கு, அஜெண்டாவுக்கு, வெறுப்பரசியலுக்கு குறுக்கே நின்றார் காந்தி. மாறாக அந்த வெறுப்பை அன்பாக மாற்ற முனைந்தார்.
 மற்றமை மீதான வெறுப்பை அழிப்பது இந்திய தேசியவாதத்தை அழிப்பதற்கு சமானமானது. இந்தியா ஒரு இளம் தேசமாய் மொட்டு விடத் துவங்கிய அக்காலத்தில் பாகிஸ்தான் மீதான வெறுப்பரசியலே ஒரு தேசமாய் ஒற்றை அடையாளத்தின் கீழ் நம்மைத் திரட்டும், ஒன்றிணைக்கும், இயக்கும் விசையாக இருந்தது. காந்தி இந்த விசையை எதிர்த்து தனியாக நின்றார். நாம் ஒற்றை அடையாளத்தின் கீழ் இணையத் தேவையில்லை, பல்வேறு அடையாளங்களின் தொகுப்பாய் இருப்போம் என்றார். அன்றைய சூழலில் சாவார்க்கர் மட்டுமல்ல நேருவும் பட்டேலும் கூட காந்தியை உள்ளூர இதனாலே வெறுத்தனர்.
காந்தியின் அரசியல் ஒரு பக்கம் ஆளும் காங்கிரசுக்கு பாதத்தில் தைத்த முள்ளாக இருந்தது என்றால் இன்னொரு பக்கம் காங்கிரஸின் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபையினருக்கு காந்தியின் நிலைப்பாடு கடும் எரிச்சலையும் கொலை வெறியை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் சாவார்க்கர் இந்திய பிரிவினையை ஆதரித்தார். அப்படி இருக்க, ஏன் பிரிவினையை காரணமாய் காட்டி அவர் காந்தியை எதிர்த்தார்? பிரிவினையின் போதான வன்முறைகள் காரணமாய் இந்து பெரும்பான்மையினர் மத்தியில் இஸ்லாமியர் மீது கடும் வெறுப்பும் கசப்பும் கொழுந்து விட, அதை மேலும் வளர்த்து இந்து தேசியவாதத்தை ஒரு யாகமாய் எரிய விட சாவார்க்கர் விரும்பினார். சட்டென உயிர்பெற்ற அவர் இந்த பணியில் தன்னை மிக ஆர்வமாய், ஆவேசமாய் ஈடுபடுத்திக் கொண்டார். (இந்த கட்டத்தில் தான் கோட்சே அவரால் ஈர்க்கப்பட்டு, சதித்திட்டத்தில் இணைகிறான்.)
 ஆனால் காந்தி எனும் பேரலை தான் வளர்த்து எழுப்பும் வெறுப்புத் தீயை சுலபத்தில் அணைத்து விடலாம் என சாவார்க்கர் உணர்ந்தார். தன் வாழ்நாள் பூரா அவர் காந்தியால் இப்படி தோற்கடிக்கப்பட்டவர். ஆனால் இம்முறை அவர் தோற்க தயாராக இல்லை.
காந்தியின் உண்ணாநிலை போராட்டம் பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல, இந்திய தேசியத்துக்கு எதிரானது என சாவார்க்கரும் அவரது சீடர்களும் உள்ளூர உணர்ந்து கொண்டார்கள். காந்தியின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, (முள் ஏற்படுத்திய வலியை தாங்க முடியாத கட்டத்தில்) உண்ணாநிலை போராட்டத்தை முடிக்கக் கோரி பிரதமர் நேரு ஒப்பந்த பணத்தை பாகிஸ்தானுக்கு அளிக்க ஒப்புக் கொண்டார். இந்த தருணத்தில் தான் “இனி காந்தி உயிருடன் இருக்க கூடாது” என கோட்சேவும் சகாக்களும் முடிவெடுக்கிறார்கள். ஏனெனில் காந்தி உயிருடன் இருந்தால் தேசியவாத வெறி திரண்டு ஒரு யாகமாய் வளர அவர் அனுமதிக்க மாட்டார் என அவர்கள் நம்பினர். காந்திக்கு எதிராய் காங்கிரஸார் ஆழ்மனதில் வளர்ந்து வந்த கசப்பை இந்துத்துவர்கள் அன்று “துணிச்சலாய்” வெளிப்படுத்தினர். ஏனெனில் ஆளும் காங்கிரஸ் அரசும் அவர்களுக்கு மறைமுக ஆதரவை அளித்தது.
அப்படித் தான் ஒரு “இந்துத் துறவியை” படுகொலை செய்யும் முடிவுக்கு இந்துத்துவர்கள் தள்ளப்பட்டனர்.
(தொடரும்)


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...