முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாதியை ஏன் திராவிட கழகங்கள் ஒழிக்கவில்லை? (2)


சாதி ஏன் ஒழிக்கப்படவில்லை என வினவும் ஜி. முருகனின் பதிவுக்கு நான் கீழ்கண்டவாறு எதிர்வினை ஆற்றினேன்:

Image result for martin luther king

சமூகத்தை கட்சி மற்றும் அதன் கொள்கை திருத்தி வழிநடத்தும் என்பது ஒரு நடைமுறை சாத்தியமற்ற மார்க்ஸிய பார்வை. அது வெறும் லட்சியம். சமூகத்தின் பல சிக்கலான, பகுத்தறிவுக்கு அப்பாலான விசைகளுக்கு முகம் கொடுப்பதே அரசியல் செயல்பாடு. ஆகையால் சாதியை அப்படி யாரும் பதாகை உயர்த்தி நடவடிக்கை எடுத்து ஒழிக்க இயலாது. வரலாற்றின் பாய்ச்சலில் அதுவாக சாதி அழிய வேண்டும். யாரையும் பழித்து அர்த்தமில்லை.

 மக்கள் தான் அரசியல். அரசியல் தான் மக்கள். அவ்வள்வு பெரிய மகானான, ஆளுமையான காந்தியையே சுதந்திரத்துக்குப் பிறகு தேசம் கைவிட்டது. அவருக்கான வரலாற்று அவகாசம் முடிந்த பின் அவரது லட்சியவாதத்துக்கு, மகத்தான நம்பிக்கைகளுக்கு தேவையில்லாமல் போனது. அவர் படுகொலை செய்யப்பட்டார் – அரசு எந்திரங்கள் அதை ஆவலாய் எதிர்பார்த்தது போல் வேடிக்கை பார்த்தனர். காந்தி சுலபத்தில் தூக்கி கடாசப்பட்டார். தேசத்தை இந்தளவுக்கு வழிநடத்தி செதுக்கியவர் அவர் எனில் எப்படி அவர் ஒரேயடியாய் தனக்கான அரசியல் இடத்தை இழந்திருக்க முடியும்? ஏன் அவரது அஹிம்சாவாதத்தை பிரிவினைக்கு பின்பான இந்தியாவால் ஏற்க முடியவில்லை? இதெல்லாம் ஒன்றைக் காட்டுகின்றன – தனிமனிதன் அவன் மாபெரும் தலைவனே ஆனாலும் வெறும் பொம்மை தான்; அவனை ஆட்டும் கைகள் திரைக்கு பின்னே இருக்கின்றன.
 இதுவரை வரலாற்றில் எந்த அமைப்பும் தலைவரும் சமூகத் தீங்குகளை ஒழித்ததில்லை. அதுவாகத் தான் காணாமல் போக வேண்டும், அதற்கான சமூக பொருளாதார சூழல் அமையும் போது. உதா. அமெரிக்காவில் நவீனமாக்கலுக்கும், கார்ப்பரேட் பொருளாதாரம் நோக்கி அவர்கள் நடை போட்டதற்கும் மார்ட்டின் லூதர் "ஏற்படுத்திய" கறுப்பினத்தோர் எழுச்சிக்கும் ஒரு தொடர்புள்ளது. சந்தைக்கான பயனாளர்களை விரிவுபடுத்த சமூகத்தில் சமத்துவம் பேண வேண்டி உள்ளது. அப்போது கருப்பர்களும் பெண்களும் விடுதலை பெற்றார்கள். அதே போராட்டம் இருநூறு வருடங்களுக்கு முன் சாத்தியப்பட்டிருக்குமா? ம்ஹும். சாதி இனவெறியை விட நுணுக்கமானது. ஆகையால் சாதி ஒழிவது இன்னும் இன்னும் கடினம்!
சரி, ஏன் தமிழகத்தில் இன்னும் சாதி இருக்கிறது?
ஏனெனில் இன்னும் முழுக்க சாதியற்ற சமூக வாழ்வுக்கு தமிழகம் தயாராகவில்லை. அத்தகைய நிர்பந்தத்தை நம் பொருளாதார கலாச்சார வாழ்வு ஏற்படுத்தவில்லை. தமிழ் வரலாறு இன்னும் சாதி ஒழிப்புக்கான முனைப்பை பெறவில்லை.
 நடைமுறையில் சாதி இன்னும் தமிழர்களுக்கு ஏற்புடையதே; நிறைய வசதிகளும் ஆறுதலும் வலுவான அடையாளத்தையும் சாதி நம் மக்களுக்கு அளிக்கிறது; ஒரு குழந்தை பிறந்த மறுநொடி சமூகத்தில் பண்பாட்டில் அதன் இடத்தை சாதி உறுதி செய்கிறது – குழந்தைகள் வளர்ந்த பின் அவர்களாய் அடையாளத்தை தேடி லோல்பட தேவையில்லை. தலித்துகளை பொறுத்தமட்டில் இந்த அடையாளம் ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும் பாகுபாடுகளுக்கு வழிகோலுகிறது. ஆகையால் அவர்கள் சாதி ஒழிப்புக்கு பாடுபடுவதில் ஒரு அவசியமும் நியாயமும் உள்ளது. ஆனால் மத்திய, மேல் சாதிகளுக்கு இந்த நடைமுறை மட்டும் அரசியல் தேவை இல்லை.
ஆனால் சாதி ஒரு தொந்தரவாக, ஆறாவது விரலாக மாறும் நாள் நிச்சயம் எதிர்காலத்தில் வரும். அன்று நாம் சாதியை முறித்து ஜன்னலுக்கு வெளியே வீசுவோம். அதுவரை ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் …



கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மக்களின் மனதிறலில் மாற்றம் வரவேண்டும் இதையே காந்தி வலியுறுத்தினார் அதாவது மக்களின் மனசாட்சியை நோக்கி பேசினார் சாதிய கொடுமைகளை செய்வதற்கு வெட்கப்படவேண்டும் என்றார். அகிம்சையை கைவிட்டதா இந்த தேசம் ஆம். சமீபத்திய ஒரு நேர்காணலின் போது தமிழருவி மணியன் காந்தியின் போராட்டத்தின் போது வரிசையாக போராட்டக்காரர்கள் போலீஸிடம் அடிவாங்குகிறார்கள் என்று சொல்கிறார் அதற்கு நெறியாளர் கேட்கறார் எனில் இப்பொது மக்களும் அடிவாங்க வேண்டுமா என்று கேட்கறார்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு முறை என் நண்பர் சொன்னார் அருந்ததியர்கள் விசிக வை ஏற்பது இல்லை என்று. சந்தையூர் பிரச்சனையில் விசிக வின் நிலைப்பாடு அவர்களுக்கு எதிரானதாகவே இருந்தது எனவே தலித் பிரச்சனை அவர்களுக்குள்ளேயே கூட இருக்கிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...