முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (5)


 Image result for haiku basho
ஹைக்கூவில் எப்படி கருத்து சொல்வது கூடாதோ அப்படியே ஒப்பீடு, உருவகம் ஆகியவற்றுக்கும் இடமில்லை. எந்த தரப்பையும் எடுக்காமல், எதையும் வலியுறுத்தாமல், நியாயப்படுத்தாமல், விளக்காமல் தர்க்க மொழியில் இடமில்லாத ஒரு தூய காட்சியை அல்லது ஒரு படிமத்தை சித்தரித்து விட்டு இடத்தை காலி பண்ணுவதே ஒரு சிறந்த ஹைக்கூவின் பண்பு.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜம்ஸித்தின் ஹைக்கூ கவிதைகளுக்கு இப்போது வருவோம். அவர் எனக்கு அனுப்பித் தந்த ஹைக்கூக்களில் கச்சிதமானவையும் உண்டு; நவீன கவிதையின் குறைகள் உடையனவும் உண்டு, முதலில் அவரது சிறந்த ஹைக்கூக்களை பார்ப்போம்.

சிறந்தவை:

கோடை மதியம்
 குளிர்ச்சி தந்தது
 தூண்டில் ஊசி

*இக்கவிதை ஒரு விளக்க முடியாத அனுபவத்தை தருகிறது. நீருக்கடியில் மீனின் வாய் வந்து கவ்வுவதற்காக காத்துக் கிடக்கும் தூண்டிலா அல்லது கவிதைசொல்லி கையில் வைத்து உணர்கிற தூண்டிலா? நமது அகத்தின் அதர்க்கமான, பகுத்தறிவை மீறிச் செல்கிற பரிமாணத்தை சுட்டுகிறது என்பதைத் தாண்டி இதை நாம் விளக்க இயலாது. இதன் சர்ரியல் அனுபவத்தை ரசித்தேன்.

பாதி அப்பிள்
ஒரு சிலந்தி ஏறி
 இரவுக்குள் இறங்கும்

·       மிக காட்சிபூர்வமானது இக்கவிதை. பாதி கடித்த ஆப்பிள் பகலின் ஒரு துண்டு போல் தெரிகிறது. அங்கிருந்து சிலந்தி இருளுக்குள் இறங்குகிறது. ஆனால் சிலந்தி இரவில் தான் இருக்கிறது. இரவில் இருளுக்குள் தான் பயணிக்கிறது. ஆயினும் அது பகலில் இருந்து இரவுக்குள் காலடி எடுத்து வைக்கிற சித்திரம் வருகிறது இங்கு. பகலைப் போன்ற பாதி கடித்த ஆப்பிள் எனும் மறைமுகமான ஒப்பீடு இதில் வருவது ஒரு சிக்கல் தான் எனினும் அவ்வளவு உறுத்தலாய் அது இல்லை. முதல் கவிதையைப் போன்றே இதிலும் ஒரு முரண் வருவதை நீங்கள் கவனிக்கலாம். இது ஹைக்கூவில் முக்கியமானது.
வறள் சேற்று நிலம்
வரிசையாக அடிமாடுகளின்
 கால் தடம்
·       தமிழக வறட்சியை நினைவுறுத்தும் சித்திரம். அடிமாடுகள் எங்கே செல்கின்றன? அதுவும் வரிசையாக? கசாப்புக்காக கேரளா நோக்கியா? ஆனால் சத்தமான சமூக விமர்சனம் இல்லை என்பது பாராட்டத்தக்கது. இது ஒரு கச்சிதமான ஹைக்கூ அல்ல. ஆனாலும் இதன் மௌனம் என்னை கவர்ந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...