முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணுக்குத் தெரியாமல் பேட்டரியை கொல்லும் ஆப்கள்

Image result for phone charge draining fast



நான் ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்தவன் அல்ல. பேஸ்புக் எட்டிப் பார்க்கவும் பாட்டுக் கேட்கவும் மட்டுமே போனை பயன்படுத்துவேன். போன் பேட்டரி இரவில் சார்ஜ் போடும் வரை தாங்கும். சமீபத்தில் என் போன் திரை நொறுங்கியது. அதோடு பேட்டரியும் நீரிழிவு நோயாளி போல் அடிக்கடி பசித்து சோர்ந்து கொண்டே வந்தது. ரெண்டு மணி நேரம் இணையத்தில் புழங்கினாலே 60%க்கு குறைந்து விடும். அதோடு பாட்டும் கேட்டால் மதியத்துக்குள் 20% வந்து விடும். பகல் முழுக்க தாங்க வேண்டும் என்றால் இரண்டு முறை சார்ஜ் செய்ய வேண்டும். 

சரி போன் பழசாகி விட்டது; பேட்டரி கடைசி கட்டத்தில் இருக்கிறது என நினைத்து புது போன் வாங்கினேன். ரெட்மி 5.
இந்த ரெட்மி பற்றின விமர்சனங்களில் பேட்டரி இரவு வரை தம் கட்டும் என பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் போன் என் கைக்கு வந்த பின் அதன் பேட்டரி நிலை சற்று பலவீனமாகவே தென்பட்டது. மதியத்துக்குள் 30% வந்து விட்டது. எனக்கோ செம கடுப்பு. வாங்கின சில நாட்களிலே போன் பேட்டரி இப்படி தள்ளாடி விழுகிறதே! ஒருவேளை பழுதான பேட்டரியா? புகார் தெரிவித்து போனை திரும்ப அனுப்பிவிட  வேண்டுமா?
பிறகு, நான் எப்படி சார்ஜை போனில் சேமிப்பது என கொஞ்சம் இணையத்தில் படித்தேன். இணையம் தந்த அறிவுறுத்தல் படி செட்டிங்ஸ் போய் ஆப்களுக்கு பின்னணியில் இயங்குவதற்கான அனுமதியை சோதித்தேன். நான் தினமும் நான்கு ஆப்களுக்கு மேல் பயன்படுத்துவது இல்லை எனிலும் இருபதுக்கு மேல் ஆப்கள் பின்னணியில் ஓடுவதை கவனித்தேன். அவை அப்படி ஓடுவதை என்னால் பார்க்க முடியாது; ஆனாலும் அவை மாயமாய் இயங்குகின்றன. இப்படி அவை இயங்குவதற்கான அனுமதியை ரத்து செய்தேன். ஆப்களில் வாட்ஸ் ஆப் தவிர பிற ஆப்கள் அறிவிக்கைகள் அனுப்பும் அனுமதியையும் மறுத்தேன். அடுத்து ஜி.பி.எஸ்ஸை ரத்து செய்தேன்.
இதன் பிறகு போன் சற்று அமைதியானது. அதோடு பேட்டரியின் உடல்நிலையில் ஆச்சரியப்படும்படியாய் மேம்பட்டது. முன்பு, இரவு வை பையை அணைத்து விட்டு போனை வைத்தால் காலையில் 20% சார்ஜ் குறைந்திருக்கும். ஆனால் இந்த மாற்றங்களுக்குக் பின் வெறும் 2% மட்டுமே குறைந்தது. அது மட்டுமல்ல, 12 மணிநேரம் கழித்து சார்ஜ் 70% இருக்கிறது.  இணைய அலைச்சல், கேமிங், முகநூல் எட்டிப் பார்த்தல், பாட்டுக் கேட்டல் என போனை வழக்கமான படியே பயன்படுத்தினேன்.
ஒரு ஸ்மார்ட் போனில் கணிசமான சார்ஜை உறிஞ்சுவது அதில் நான் பயன்படுத்தாத ஆப்களின் வெளித்தெரியாத செயல்பாடே என்பது இப்போதும் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நாம் மூன்று ஆப்களை நாள் முழுக்க பயன்படுத்துகிறோம் என்றால் முப்பது ஆப்கள் நம் போனுக்குள் குடித்தனம் பண்ணி, நம் சமையலறையில் இருந்து திருடித் தின்று, நம்மை பயன்படுத்துகின்றன. அவற்றை அடித்து தூங்கச் செய்தால் போன் நமக்காக மட்டும் பயன்படுகிறது. சார்ஜும் நின்று வேலை செய்கிறது.

கருத்துகள்

ஸ்ரீராம். இவ்வாறு கூறியுள்ளார்…
உபயோகமான தகவல்கள்.

ரெட்மி செல் சூடாகும் என்கிற கம்பிளெயின்ட் இருக்கிறதே... அதைச் சரி செய்து விட்டார்களா?

உங்கள் செல்லிலிருந்து UIDAI எண்ணையும். Distress எண்ணையும் நீக்கி விட்டீர்களா? இரண்டும் நாம் அறியாமல் தானாகவே வந்து ஒட்டிக்கொண்டிருக்கும் எண்கள்.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
இரண்டு பிரச்சனைகளும் என் போனில் இல்லை :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...