முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிர்மலா தேவி வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் ஏன் தப்பிக்கிறார்கள்?


Image result for நிர்மலா தேவி
அதிகார வர்க்கத்துக்காக நிர்மலாதேவி செய்தது போன்ற குற்றங்களில் சம்மந்தப்பட்ட பிரமுகர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து காப்பாற்றப்படுவது வாடிக்கை. யாரும் இதைத் தடுக்க முடியாது. இதற்கு முழுப்பொறுப்பை நம் அரசியல் சட்ட அமைப்பை எழுதினவர்கள் தாம் சுமக்க வேண்டும். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதை விட அதிகார ஓரிடத்தில் குவிய வேண்டும், ஆளும் கட்சி நிலையாக இருக்க வேண்டும், மாநிலங்கள் ஒற்றைப் புள்ளியில் திரள வேண்டும், அவர்களுக்குள் அதிகாரப் போட்டி ஏற்படக் கூடாது, பிரிவினை எண்ணம் வரக் கூடாது என்பதே நம் சட்டத் தந்தைகளின் நோக்கமாய் இருந்தது. ஆகையால் அதிகார பரவலாக்கத்தை ரத்து செய்து அதிகார குவிப்பை அவர்கள் ஆதரித்தார்கள்.

 முழுக்க முழுக்க அதிகார வர்க்கத்துக்கு சாதகமான, பொதுமக்களுக்கு விரோதமான அரசியல் சட்டம் நமது. மக்களுக்கு தண்டிக்க கிடைக்கும் ஒரே வாய்ப்பு தேர்தலே. அப்போதும் எதிர்க்கட்சி வந்து முந்தின ஆட்சியாளர்களை தண்டிப்பார்கள் என்பதில் எந்த உறுதியும் இல்லை. அது மட்டுமல்ல, ஊழல்களில் சரிபங்கை வகிக்கும் நம் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியாது. அதிகாரிகளே தம்மைத் தாமே விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியாதில்லையா?
இந்த அவல நிலைக்கு ஒரு தீர்வு, இத்தகைய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான வழக்குகள் வரும் போது நீதிமன்றத்தின் கீழ் சமூக ஆர்வலர், எதிர்க் கட்சி தலைவர், நிபுணர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை நிர்மாணித்து அதன் கீழ் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐடி போன்ற அமைப்புகளை கொண்டு வருவது; இந்த அமைப்பில் உள்ள விசாரணை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவும் அவர்களின் பதவி உயர்வுக்கு தடை விதிப்பதற்குமான அதிகாரத்தை இந்த நீதிமன்றக் குழுவுக்கு கொடுப்பது – சுருக்கமாய் ஆளும் கட்சியின் கையை சற்றே கட்டிப் போடுவது.
அதுவரை நீதி என்பதே சாத்தியமில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...