முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டெஸ்ட் போட்டியை எப்படி அழிவில் இருந்து காப்பாற்றுவது?


ஆடுகளம்: டெஸ்ட் போட்டி வடிவத்தைப் பாதுகாப்பது எப்படி?
இந்த கேள்வியைக் கேட்டுப் புலம்புவதே முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும், விமர்சகர்களுக்கும் வழக்கமாகிவிட்டது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் இன்றும் குவிகிறார்கள். ஆனால், மற்ற நாடுகளில் ஈயடிக்கிறது. ஆனால் இந்த மூன்று நாடுகளிலும்கூட டெஸ்ட் ஆட்டம் நிலைக்குமா என்பது ஐயமே. டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான வரவேற்பு டெஸ்டுக்கு இருப்பதில்லை. காரணங்கள் இவை:
டெஸ்ட் ஆட்டம் நம் காலத்துக்கு ஒவ்வாதது. வேகம், பரபரப்பு குறைவு. “இக்குறையை” சரி செய்ய இயலாது, ஆமையை குதிரை ஆக்க இயலாது என்றாலும் இது எனது தீர்வு:

போனஸ் புள்ளிகள்
கொஞ்சம் விதிமுறைகளை மாற்ற வேண்டும். பொறுமை, காத்திருப்பு, அமைதி போன்ற விழுமியங்களைக் கைவிட்டு விட வேண்டும். பதிலாக இன்னும் திகிலாய் ஆட்டத்தை மாற்றும் வண்ணம் போனஸ் புள்ளி முறையைக் கொண்டு வரலாம். வெற்றி தோல்வியை இந்தப் புள்ளிகளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். உதாரணமாய், ஒரு இன்னிங்ஸில் முதல் ஐம்பது ஓவர்களுக்குள் 10 விக்கெட்டுகளை எடுத்தால் பத்து புள்ளிகள். அதே போல, முதல் ஐம்பது ஓவர்களுக்குள் 300 ரன்கள் எடுத்தால் 10 புள்ளிகள். இந்த விதிமுறை பந்து வீச்சையும் மட்டையாட்டத்தையும் துணிச்சலாய் அதிரடியாய் ஆக்கும்.
பந்து வீச்சாளர்களின் ஓவர் எண்ணிக்கையிலோ, களத்தடுப்பு விவகாரத்திலோ கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் இது 50 ஓவர் ஆட்டம் போன்றும் மாறாது. பதிலுக்கு, இப்போதைக்கு டெஸ்ட் ஆட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினையை இது சரி செய்யும். இப்போதைய நிலையில் எதிரணி மட்டையாளர்கள் நன்றாய் ஆடினால் பந்து வீச்சாளர்கள் தடுப்பாட்டத்துக்குத் தாவிவிடுவார்கள். அடுத்து விக்கெட்டுகள் தடுமாறும் வரை எதையும் முயல மாட்டார்கள்.
மட்டையாளர்களும் அப்படியே – விக்கெட்டுகள் விழுந்தால் பதுங்கி ஒடுங்கிவிடுவார்கள். இதைக் காணும் பார்வையாளர்கள் தூங்கி வழிவார்கள். இந்த போனஸ் புள்ளி விஷயம் மட்டையாளர்களை அடித்தாடத் தூண்டும்.
இந்த போனஸ் புள்ளிகளை நான்கு இன்னிங்ஸ்களிலும் அதிகமாய் பெற்ற அணியே வெற்றி பெறும் அணி. ஒரு அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் நன்றாய் ஆடி லீட் பெற்று 20 புள்ளிகள் பெற்றுவிட்டது எனக் கொள்வோம். இப்போது பின்னடைவுற்ற அணியோ மூன்றாவது இன்னிங்ஸில் தான் அளித்துள்ள லீடை பற்றி கவலைப்படாமல் 50 ஓவர்களில் 300 அடிப்பதையே இலக்காய் கொண்டு அடித்தாடலாம். அதை அவர்கள் வெற்றிகரமாய் செய்தால் புள்ளிகள் 10-20 என ஆகிவிடும். நான்காவது இன்னிங்ஸில் எதிரணியை 300க்குள் ஆல் அவுட்டாக்கினால் டிரா செய்துவிடலாம்

மேலும் படிக்க...

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Changing all the pitches into bowling pitch and make hard to bat is the remedy(like England pitch)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...