Skip to main content

அஷ்வின் எனும் மாந்திரிகன்

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரின்போது ஆடிய அஸ்வின் பழைய அஸ்வின் அல்லர். அவர் உலகின் எந்த மூலையிலும் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை பெற்றிருந்தார். ஆனால், அவரது உடல்தகுதி அவரை முதல் டெஸ்டிலிருந்தே கைவிடத் தொடங்கியது. ஆகையால், அவரால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சோபிக்க முடியுமா என விவாதங்கள் நடந்தன. பல நிபுணர்களும் குல்தீப் யாதவே ஆஸ்திரேலிய மண்ணுக்குத் தோதானவர் என்றனர். ஆஸ்திரேலியாவில் அஸ்வினின் பந்து வீச்சு சராசரி 50க்கு மேல் எனச் சுட்டிக்காட்டினர். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆடுதளம் சற்றே மெத்தனமானது; கொஞ்சம் சுழல்வது. இது பேட்ஸ்மேனைக் கட்டுக்குள் வைக்க அவருக்குக் கைகொடுத்தது என்றாலும் பிளைட், லூப், டிரிஃப்டைக் கொண்டுதான் அஸ்வின் பெரும்பாலான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைக் கவனிப்பதே நல்ல கலை அனுபவமாய் இருந்தது.


கவாஜாவுக்கு அஸ்வின் விரித்த வலை


அடிலெய்டில் நான்காவது நாளன்று ஆஸ்திரேலியா 323 எனும் இலக்கை நோக்கி ஆடிவந்தபோது இடது கையாளரான உஸ்மான் கவாஜா வருகிறார். அவரே தற்போது ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன். அஸ்வின் வழக்கம்போல் இடது கையாளரின் கால் பக்கமாய் பந்து விழுவது போல மயக்கம் தோன்றும்படியாய் லூப் செய்து வீசுகிறார். ஆனால் பந்து விழுந்த பின் வெளிநோக்கித் திரும்புகிறது. கவாஜா இதைச் சமாளிப்பதற்காக இறங்கி வந்து அடிக்க முயல்கிறார். ஆனால் லூப்பும் டிரிஃப்டும் அவரை நேராக அடிக்கச் செய்கின்றன. பந்து கடைசி நேரத்தில் வெளிநோக்கித் திரும்பிட, கிட்டத்தட்ட அவுட் ஆகிறார். ஆனால் தப்பித்துவிட்டார்.


இதற்கு அடுத்த பந்தில் அஸ்வின் என்ன செய்ய வேண்டும்? முந்தைய பந்தைப் போன்றே வீச வேண்டும் என நாம் சொல்வோம் அல்லவா! ஆனால், அஸ்வினோ வேறு விதமாய் சிந்தித்தார்.




அஸ்வின் அடுத்த பந்தைச் சற்று வைடாக, குறை நீளத்தில் வீசினார். கவாஜா அதை வெட்டி ஆடினார். அடுத்ததற்கு அடுத்த ஓவர். அஸ்வின் மீண்டும் கவாஜாவுக்கு வீச வருகிறார். சில பந்துகளை வெளியே திருப்பிவிட்டு ஒரு பந்தை நேராக பிளைட் செய்து வீசுகிறார். அழகான லூப்புடன் இப்பந்து கவாஜாவை அடிக்கக் கோருகிறது. கவாஜா தன்னை அறியாது இறங்கி வருகிறார்; வந்த பின் அதைத் தடுத்தாட முடியாது என எண்ணிக் கூடுதலாய் நெருங்கிச் சென்று தூக்கி அடிக்கிறார். இப்போது பந்து டிரிஃப்ட் ஆகி வெளியே போகிறது. லீடிங் எட்ஜ் எக்ஸ்டிரா கவருக்குச் செல்ல ரோஹித் ஷர்மா அங்கு லாகவமாய் அதை ஏற்கிறார்.


இதே பந்தை அஸ்வின் கவாஜாவுக்கு முந்தின ஓவரில் அடுத்தடுத்து வீசியிருந்தால் அவர் கவருக்கு மேலாக அடித்திருப்பார். விக்கெட் விழுந்திருக்காது. ஏனென்றால் பேட்ஸ்மேன் தெளிவற்று, சுயசிந்தனையற்று பந்தின் போக்கால் வசியப்பட்டு அடித்தாடும்போதே வெளியேற வாய்ப்பு அதிகம். மட்டையாளரின் ஷாட் செல்லும் வழி மனமும் சென்றால், அறிவும் பிரக்ஞையும் சென்றால் அது நல்ல ஷாட்டாகும். ஆனால், உணர்வால் தவறாய் வழிநடத்தப்பட்டு ஆடும்போது மட்டையாளர் வீழ்கிறார். அஸ்வின் தொடர்ந்து இரண்டாம் முறையாக அப்பந்தை வீசியிருந்தால் கவாஜா அதை பிரக்ஞைபூர்வமாய் எதிர்கொண்டிருப்பார். ஆகையால்தான் அவரை ஏமாற்றும் விதமாக அஸ்வின் குறை நீளப் பந்தை வீசினார். ஆனால், அடுத்த ஓவரில் இந்த லூப்பான பந்து கவாஜாவை நோக்கி எதிர்பாராத வேளையில் வருகிறது. அஸ்வினின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பந்து மாயம் செய்ய கவாஜா ஆடும் நிலைமை ஏற்படுகிறது. லீடிங் எட்ஜ் பிறக்கிறது. இதை விடச் சிறப்பாய் ஒரு பேட்ஸ்மேனின் மனத்தையும் உடலையும் ஒரு சுழலர் கட்டுப்படுத்த முடியுமா?


மேலும் படிக்க

https://www.minnambalam.com/k/2018/12/12/17


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...