முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் நாவல்களில் திணை

Image result for எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ். ரா
Image result for பெருமாள் முருகன்
பெருமாள் முருகன்


அன்புள்ள அபிலாஷ்
     நலம் என நம்புகிறேன். எஸ்.ரா சாகித்ய அகாதமி விருது பெற்றதை தொடர்ந்து அவர் நாவல்களை பற்றி தங்கள் வலைப்பூவில்‌ உரையாடலாம் என பதிவிட்டிருந்தீர்கள். நேற்று விமர்சகர் அ.இராமசாமியின் வலைதளத்தில் எஸ்.ராவின் யாமம் நாவல் தமிழின் ஐம்பெரும் நிலங்களும் மதராசபட்டினத்தில் வந்து சேர்ந்து திரிதலுற்று நவீன நிலமாக மாறுவதின் சித்திரம் உள்ளது என்ற பார்வையை முன்வைக்கிறார்.

"நவீன நிலவியல் வெளி என்பது மரபின் கலவை. நவீன வாழ்க்கை என்பது மரபடையாளங்களின் இணைவும் தொலைப்பும். தொலைந்ததிற்குள் தேடினால் அவரவர் அடையாளங்களின் பங்களிப்பும் இருக்கவே செய்யும். அதே நேரத்தில் நவீனத்துவத்திற்குள் கரைந்துவிட்ட மரபடையாளங் களைத் தேடிக் கொண்டாடிக் கொண்டிருப்பது நவீன வாழ்வாக இருக்கவும் முடியாது என்பதும் உண்மை. இந்த உண்மையை எழுதிக்காட்டியதின் வழியாக எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் அவரது நாவல்களின் முக்கியமானதாக இருப்பதோடு, நவீனத்தமிழ் வாழ்வின் முக்கியப்பதிவாகவும் ஆகியிருக்கிறது." (அ.இராமசாமி)

இந்த பார்வையாமம் பற்றிய வித்தியாசமான திறப்பை எனக்கு கொடுத்தது.யாமம் பற்றி தங்கள் பார்வை என்ன?

ஜானகிராமன்


வணக்கம் ஜானகிராமன்
ஆம் நீங்கள் சொல்வதும் பேராசிரியர் அ. ராமசாமி சொல்வதும் உண்மையே. திணைக் கோட்பாடு வழி, “யாமம் நாவலை மட்டுமல்ல, “நெடுங்குருதியையும் வித்தியாசமான கோணத்தில் படிக்க முடியும். தமிழ் நிலமும் மனமும் வேறு வேறல்ல. சில படைப்புகளில் நிலமும் மனமும் சம இடம் பிடிப்பது நடக்கிறது. பெருமாள் முருகனின் நாவல்களில் திணையின் சுபாவமும் அதன் காலத்தின் இயல்பும் அவ்வளவு துல்லியமாய் பொருந்தி வருகின்றன. ஆனால் எஸ்.ராவில் அப்படி இல்லை. ஒருவித சிதைவுற்ற கால வெளி அவர் புனைவுகளில் உள்ளது. வெக்கையிலே அங்கு காதலும் மலர்கிறது. பகலில் காதலியின் வாசம் ஒருவனை பித்துக் கொள்ள வைக்கிறது.

 கதை மாந்தரின் மனமும் நிலமும் இப்படி ஒருங்கிணையாத மகத்தான நாவல்களும் உண்டு. இது நாம் விரிவாய் மேற்கொள்ள வேண்டிய விவாதம். தொடர்ந்து பேசுவோம்!

அன்புடன்
ஆர். அபிலாஷ்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...