Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ரிஷப் பண்டின் முதிர்ச்சி


Rishabh Pant

நான் ரிஷ்ப பண்டின் விசிறி. இதற்கு முன் என்னை இந்தளவுக்கு கவர்ந்த ஒரு கீப்பர் பேட்ஸ்மேன், இடதுகை அதிரடிக்காரர் என்றால் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட். அவருக்குப் பின் சிறிது காலம் யுவ்ராஜ் சிங்.


ரிஷப் பண்ட் உள்ளூர் ஆட்டங்கள் ஆடும் காலத்தில் இருந்தே சூப்பர் ஸ்டார் தான். சில வீரர்கள் டெஸ்ட் போட்டியை ஒருநாள் ஆட்டத்தின் வேகத்தில் ஆடுவர். பண்டோ டி-20 தாளத்தில் டெஸ்டில் மேளம் அடிப்பவர். பத்து பவுண்டரிகள் அடிக்கும் நீளத்தில் விழும் பந்துகளை ஏன் வீணடிக்க வேண்டும் என பத்து சிக்ஸர்கள் அடிப்பார் அவர். ஒரு பேட்ஸ்மேன் 20 சிக்ஸர்கள் அடித்தால் 160-200 ரன்களை நான்கு நாள் போட்டிகளில் அடிக்கலாம் என உள்ளூர் கிரிக்கெட்டில் நிரூபித்தவர். அப்படித் தான் அவர் தேர்வாளர்கள் மற்றும் ரசிகர்களின் பரவலான கவனத்தை பெற்றார்.

 தில்லி அணிக்காக இரண்டாவது வருடம் ரஞ்சி கோப்பை ஆடிய போது பண்ட 48 பந்துகளில் ஜார்கண்டுக்கு எதிராக சதம் அடித்தார் - ரஞ்சி கோப்பை வரலாற்றிலேயே மிக வேகமான சதம் அது. அதே ஆண்டில் அவர் மகாராஷ்டிராவுக்கு எதிராய் 326 பந்துகளில் முச்சதம் அடித்தார். இத்தனையும் செய்து பண்ட் அதிர்வுகளை ஏற்படுத்திய போது அவருக்கு வயது 18 மட்டுமே. அதன் பின்னர் பண்ட் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் அது நிகழவில்லை. தோனி அப்போது மோசமான பார்மில் இருந்தார் - ஆகையால் அப்போது தோனிக்கு ஓய்வளித்து பண்டு உள்ளே கொண்டு வரப்படுவது தோனிக்கு தேவையற்ற சிக்கலை, நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. ஆனால் டெஸ்ட் கீப்பர் சாஹா காயப்பட, எதிர்பாராத விதமாய் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் அயல்மண்ணில் ஆடினார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நேரடியாய் ஆடக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திய பண்ட் ஒன்பது போட்டிகளில் 2 சதங்களும் 2 அரை சதங்களும் அடித்தார். ஆகையால், அவர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டு அது நிகழாத போது இந்தியா முழுக்க மட்டுமல்ல உலக அளவில் கூட ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் முன்னாள் வீரர் வாஹ்ன், ஆஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் போன்றோர் பண்ட் தேர்வாகாதது குறித்து ஆச்சரியம் தெரிவித்தனர். பண்ட் நிச்சயம் தன் ஆட்டவாழ்வில் மூன்று உலகக்கோப்பைகளாவது ஆடுவார் என பாண்டிங் ஆருடம் கூறியுள்ளார். முன்னாள் தேர்வாளர் வெங்க்சார்க்கர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் அசருதீன் ஆகியோரும் பண்ட் நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கருத்து கூறினர். இந்த கருத்துக்களின், எதிர்பார்ப்பின் நெருக்கடி காரணமாய் பண்ட் உலகக்கோப்பை அணிக்கான மாற்று வீரர்களில் ஒருவராய் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் இவ்வளவு ஆதரவு இருந்தும் ரிஷப் பண்டின் சில குறைகள் குறித்த விமர்சனங்களையும் மறுக்க முடியாது. அவருக்கு ஆட்டச் சூழல் குறித்த புரிந்துணர்வு இல்லை, பொறுமையோ முதிர்ச்சியோ இல்லை, தேவையான நேரத்தில் அபத்தமாய் ஆடி அவசியமற்று வெளியேறுகிறார் என தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டது. 2019 ஐ.பி.எல்லில் கூட இதற்கு பல உதாரணங்களை நாம் கண்டோம். ஆக, 22-04-19 அன்று தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ராஜஸ்தானுக்கு எதிராய் ஆடிய பண்ட் 36 பந்துகளில் 78 அடித்து தன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அது ஒரு சாதாரண இன்னிங்ஸ் அல்ல. பண்ட் ஒரு நிதானமான பொறுப்பான பேட்ஸ்மேனாக முதிர்ந்து விட்டார் என நமக்கு சொல்கிற இன்னிங்ஸ் அது.

192 எனும் இலக்கு அந்த சற்றே மெத்தனமான ஆடுதளத்தில் சற்று சிரமமானது. பண்ட் உடனடியாய் அவசரகதியில் வெளியேறி இருந்தால் தில்லி நிச்சயம் தோற்றிருக்கும். ஆனால் பண்ட் இம்முறை பொறுமையாய் இறுதி ஓவர் வரை நின்று, தோனி ஸ்டைலில், ஆடினார். வந்த உடனே சிக்ஸர்களை இலக்காக்காமல் பவுண்டரிகள், ஒற்றை, இரட்டை ரன்கள குறி வைத்தார். முப்பது பந்துகளில் முப்பது ரன்கள் எனும் நிலை வந்த போதும் ஓவருக்கு ஒரு சிகஸர் போதுமென புரிந்து ஆடினார். சிக்ஸர் அடித்து விட்டு அடுத்து ஒற்றை ரன் எடுத்தார். கடைசி ஓவரில் ஆறு ரன்கள் தேவைப்பட்ட போது அவர் ஒற்றை ரன்கள் எடுத்து ஆட்டத்தை தேவையின்றி சிக்கலாக்கவில்லை. ஏனென்றால் இறுதி ஓவர்களில் சிங்கிள்ஸ் எடுப்பது ஆபத்தானது. ஆக இரண்டாவது பந்தில் அவர் ஒரு தட்டையான சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.


எதிரணி தலைவர் ஸ்மித் குறிப்பிட்டது போல பண்டின் ஒரு சிறப்பு அவர் எதிர்பாராத இடங்களில் ரன்களை அடிப்பார் என்பது. குறிப்பாய் கால்பக்கமாய் அவரது ஷாட்கள் தனித்துவமானவை. முன்பு off பக்கமாய் பந்தை வீசி பண்டின் பொறுமையை சோதிப்பார்கள். அவரும் வைடான பந்துகளை கால்பக்கம் அடிக்க முயன்று வெளியேறுவார். ஆனால் இன்றோ அவர் பவுலர்கள் ஓரளவு நேராய் வீசும் படி பொறுமை காத்தார்.



ரிஷப் பண்ட் முதிர்ந்து விட்டார். இதே கதியில் தொடர்ந்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் தோனியை நாம் அதிகம் மிஸ் பண்ணாமல் பார்த்துக் கொள்வார் அவர். அதுவே ஒரு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்!


Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...