முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2019 உலகக்கோப்பை அணிகள் ஒரு பார்வை: ஆஸ்திரேலியா


இம்மாதம் 30ஆம் தேதி, ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் தொடங்க உள்ளது. முதல் ஆட்டமே இங்கிலாந்துக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும்  இடையே. செமையாக களைகட்டப் போகும் ஆட்டம் இது. அதற்கு முன் நாம் சிறந்த ஐந்து அணிகளின் முன்னோட்டம் ஒன்றைப் பார்போம். எந்த அணிகள் வலிமையானவை, இங்கிலாந்தின் ஆட்டச்சூழலுக்கு தோதானவை. நல்ல ஆட்டநிலையில் உள்ளவை. இந்த அணிகளின் பலவீனம் என்னென்ன ஆகிய விசயங்களை இந்த முன்னோட்டத் தொடரில் பார்க்கலாம். முதலில் ஆஸ்திரேலியா.

அணி வீரர்கள்:

  1. ஆரோன் பிஞ்ச் (தலைவர்)
  2. கேரி (கீப்பர்)
  3. பேட் கம்மின்ஸ்
  4. ஜேஸன் பெர்ரண்டர்ப்
  5. நேதன் கூல்ட்டர்நைல்
  6. உஸ்மான் கவாஜா
  7. நேதன் லயன்
  8. ஷான் மார்ஷ்
  9. கிளென் மேக்ஸ்வெல்
  10. கேன் ரிச்சர்ட்ஸன்
  11. ஸ்டீவ் ஸ்மித்
  12. மிட்சல் ஸ்டார்க்
  13. மார்க்கஸ் ஸ்டாயினிஸ்
  14. டேவிட் வார்னர்
  15. ஆடம் ஸாம்பா

ஆஸ்திரேலிய அணி இப்படி இருக்க வேண்டியதல்ல. ஆரோன் பிஞ்ச் தலைவர் என்பது சற்று ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அவர் நமது தொன்மக் கதைகளில் யானை பூமாலையை போட்டதால் பரதேசி மன்னனானது போல, தலைவர் ஆனவர். அவருக்கு முன்பு ஸ்டீவ் ஸ்மித்தே தலைவர். அவர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் வெற்றிகரமான தலைவராகவும் இருந்தார். துணைத்தலைவரான வார்னர் உலகின் மிக ஆபத்தான துவக்க மட்டையாளர்; ஒருநாள், டெஸ்ட் மாற்றும் டி-20 போட்டிகளில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் ஆடுதளங்களிலும் ஜொலித்தார். இந்த இருவரும் எதேச்சையான ஒரு சிக்கலில் மாட்டி அது மிகப்பெரிய சர்ச்சையாகி பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையே புரட்டிப் போட்டது.

மேலும் படிக்க: https://tamil.asiavillenews.com/article/2019-world-cup-teams-review-5993


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...