Skip to main content

தேர்தல் முடிவுகள்


பாராளுமன்ற தேர்தல் முடிவுகளைப் பொறுத்தமட்டில், எனக்கு பெரிய ஆச்சரியமில்லை. இரண்டு விதமாய் மத்தியில் பாஜகவின் எதிர்காலம் ஊகிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்பான அலையில் இந்துத்துவா அரசியல் பெரிய எழுச்சி பெற்று பெருவாரியான வெற்றியை மோடி பெறுவார்  என்பது ஒன்றுஅடுத்து, மக்களுக்கு பரவலாக இந்த ஆட்சி மீதுள்ள ஏமாற்றத்தினால் பாஜக போன தடவை பெற்றதை விட குறைவான இடங்களைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் அல்லது பலவீனமான அரசாக தொடரும். நான் இயல்பாகவே இரண்டாவது ஆருடமே நிகழட்டும் என ஏங்கினேன். ஆனால் பாஜக தென்னகம் தவிர தேசம் முழுக்க தனது ஆதிக்கத்தை நிறுவி உள்ளது


இந்த முடிவுகள் தந்துள்ள துணிச்சலினால் பாஜக அடுத்து என்னவெல்லாம் பண்ணும் எனும் அச்சம் பரவலாக எழுந்துள்ளது. .தா., அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுமா முழுமையான சர்வாதிகாரத்தை அவிழ்த்து விடுமா என என் நண்பர்கள் சிலர் பதற்றத்தோடு விவாதிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எப்படியும் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தானே! எப்படி காங்கிரஸ் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததோ அதுவே பாஜகவுக்கும் நிகழும் என அரசியல் நோக்காளர்களும் பாஜகவினரும் கூறி வந்தது தானே. இப்போது நம்முள் உள்ள கேள்வி மூன்றாம் முறை பாஜக தொடர்ந்து வெற்றி பெறுமா என்பதே. அது நிச்சயம் நிகழாது என நம்ப விரும்புகிறேன்.

இந்த ஆட்சியில் மோடி என்னவெல்லாம் கொடுமைகள் செய்வார் என கற்பனை செய்ய நான் விரும்பவில்லை. முழங்கால் வரை நனைஞ்சாச்சு, மூழ்கி விடுவோமே என மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். மேலும் இப்போதைக்கு மத்தியில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லை. ராகுலை இன்னும் ஒரு தலைவராக யாரும் ஏற்க தயாராக இல்லை. மற்றபடி மேற்கு வங்கம் உட்பட்ட மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள பெருவெற்றிகளை பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் அவர்கள் தேசம் முழுக்க வலுவாகவே (பாஜக அளவுக்கு இல்லையென்றாலும்) திகழ்ந்தார்கள். ஆனால் அவர்களின் வீழ்ச்சி துவங்கியதும் முழுமையாய் தடயம் இன்றி காணாமல் போகவில்லையா? இதுவே விரைவில் பாஜகவுக்கும் நிகழும்

இந்த கசப்பான முடிவுகளுக்கு மாற்றாய் ஆறுதலாக தமிழக முடிவுகள் உள்ளன. திமுகவுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றிருக்கும் எழுத்தாள நண்பர்கள் தமிழச்சி, ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகியோருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும். அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக முழுமையாக துடைத்து நீக்கப்படும் எனத் தெரிந்தும் பாஜக தொடந்து எடப்பாடிக்கு ஆதரவளிக்கப் போகிறதா? இதை மக்களின் விருப்பமாக ஏற்று அதிமுக அரசு ஆட்சி விலகுவதே நலம். மாநிலத்தில் திமுக விரைவில் ஆட்சியமைப்பதே தமிழகத்துக்கு விடியலைக் கொண்டு வரும். அல்லாவிடில், இந்த தேர்தல் வெற்றியால் என்ன பயன் பெரிதாக இருக்க முடியும்?


Comments

bandhu said…
//இந்த கசப்பான முடிவுகளுக்கு மாற்றாய் ஆறுதலாக தமிழக முடிவுகள் உள்ளன. திமுகவுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றிருக்கும் எழுத்தாள நண்பர்கள் தமிழச்சி, ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகியோருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும். அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக முழுமையாக துடைத்து நீக்கப்படும் எனத் தெரிந்தும் பாஜக தொடந்து எடப்பாடிக்கு ஆதரவளிக்கப் போகிறதா? இதை மக்களின் விருப்பமாக ஏற்று அதிமுக அரசு ஆட்சி விலகுவதே நலம். மாநிலத்தில் திமுக விரைவில் ஆட்சியமைப்பதே தமிழகத்துக்கு விடியலைக் கொண்டு வரும். அல்லாவிடில், இந்த தேர்தல் வெற்றியால் என்ன பயன் பெரிதாக இருக்க முடியும்?
//
அரசியல் ஒரு வியாபாரம். அவ்வளவு தான். தார்மீக பொறுப்பேற்று பதவி விலகல்.. எல்லாம் யார் பண்ணுவார்கள்? அதெல்லாம் ஒரு காலம்.

யாருக்கும் முழுமையான சந்தோஷத்தை தராத குழப்பமான வெற்றி!

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...