முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் முடிவுகள்


பாராளுமன்ற தேர்தல் முடிவுகளைப் பொறுத்தமட்டில், எனக்கு பெரிய ஆச்சரியமில்லை. இரண்டு விதமாய் மத்தியில் பாஜகவின் எதிர்காலம் ஊகிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்பான அலையில் இந்துத்துவா அரசியல் பெரிய எழுச்சி பெற்று பெருவாரியான வெற்றியை மோடி பெறுவார்  என்பது ஒன்றுஅடுத்து, மக்களுக்கு பரவலாக இந்த ஆட்சி மீதுள்ள ஏமாற்றத்தினால் பாஜக போன தடவை பெற்றதை விட குறைவான இடங்களைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் அல்லது பலவீனமான அரசாக தொடரும். நான் இயல்பாகவே இரண்டாவது ஆருடமே நிகழட்டும் என ஏங்கினேன். ஆனால் பாஜக தென்னகம் தவிர தேசம் முழுக்க தனது ஆதிக்கத்தை நிறுவி உள்ளது


இந்த முடிவுகள் தந்துள்ள துணிச்சலினால் பாஜக அடுத்து என்னவெல்லாம் பண்ணும் எனும் அச்சம் பரவலாக எழுந்துள்ளது. .தா., அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுமா முழுமையான சர்வாதிகாரத்தை அவிழ்த்து விடுமா என என் நண்பர்கள் சிலர் பதற்றத்தோடு விவாதிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எப்படியும் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தானே! எப்படி காங்கிரஸ் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததோ அதுவே பாஜகவுக்கும் நிகழும் என அரசியல் நோக்காளர்களும் பாஜகவினரும் கூறி வந்தது தானே. இப்போது நம்முள் உள்ள கேள்வி மூன்றாம் முறை பாஜக தொடர்ந்து வெற்றி பெறுமா என்பதே. அது நிச்சயம் நிகழாது என நம்ப விரும்புகிறேன்.

இந்த ஆட்சியில் மோடி என்னவெல்லாம் கொடுமைகள் செய்வார் என கற்பனை செய்ய நான் விரும்பவில்லை. முழங்கால் வரை நனைஞ்சாச்சு, மூழ்கி விடுவோமே என மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். மேலும் இப்போதைக்கு மத்தியில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லை. ராகுலை இன்னும் ஒரு தலைவராக யாரும் ஏற்க தயாராக இல்லை. மற்றபடி மேற்கு வங்கம் உட்பட்ட மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள பெருவெற்றிகளை பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் அவர்கள் தேசம் முழுக்க வலுவாகவே (பாஜக அளவுக்கு இல்லையென்றாலும்) திகழ்ந்தார்கள். ஆனால் அவர்களின் வீழ்ச்சி துவங்கியதும் முழுமையாய் தடயம் இன்றி காணாமல் போகவில்லையா? இதுவே விரைவில் பாஜகவுக்கும் நிகழும்

இந்த கசப்பான முடிவுகளுக்கு மாற்றாய் ஆறுதலாக தமிழக முடிவுகள் உள்ளன. திமுகவுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றிருக்கும் எழுத்தாள நண்பர்கள் தமிழச்சி, ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகியோருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும். அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக முழுமையாக துடைத்து நீக்கப்படும் எனத் தெரிந்தும் பாஜக தொடந்து எடப்பாடிக்கு ஆதரவளிக்கப் போகிறதா? இதை மக்களின் விருப்பமாக ஏற்று அதிமுக அரசு ஆட்சி விலகுவதே நலம். மாநிலத்தில் திமுக விரைவில் ஆட்சியமைப்பதே தமிழகத்துக்கு விடியலைக் கொண்டு வரும். அல்லாவிடில், இந்த தேர்தல் வெற்றியால் என்ன பயன் பெரிதாக இருக்க முடியும்?


கருத்துகள்

bandhu இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்த கசப்பான முடிவுகளுக்கு மாற்றாய் ஆறுதலாக தமிழக முடிவுகள் உள்ளன. திமுகவுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றிருக்கும் எழுத்தாள நண்பர்கள் தமிழச்சி, ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகியோருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும். அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக முழுமையாக துடைத்து நீக்கப்படும் எனத் தெரிந்தும் பாஜக தொடந்து எடப்பாடிக்கு ஆதரவளிக்கப் போகிறதா? இதை மக்களின் விருப்பமாக ஏற்று அதிமுக அரசு ஆட்சி விலகுவதே நலம். மாநிலத்தில் திமுக விரைவில் ஆட்சியமைப்பதே தமிழகத்துக்கு விடியலைக் கொண்டு வரும். அல்லாவிடில், இந்த தேர்தல் வெற்றியால் என்ன பயன் பெரிதாக இருக்க முடியும்?
//
அரசியல் ஒரு வியாபாரம். அவ்வளவு தான். தார்மீக பொறுப்பேற்று பதவி விலகல்.. எல்லாம் யார் பண்ணுவார்கள்? அதெல்லாம் ஒரு காலம்.

யாருக்கும் முழுமையான சந்தோஷத்தை தராத குழப்பமான வெற்றி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...