Skip to main content

இந்தியா-பாகிஸ்தான்: இன்றைய உலகக்கோப்பை ஆட்டம்


92இல் இருந்தே உலகக்கோப்பை ஆட்டங்களில் இந்தியா பாகிஸ்தானை டவுசர் கழற்றி உள்ளது என்பதால் மட்டுமே இந்தியா மேலான அணி அல்ல - கடந்த சுமார் முப்பதாண்டுகளில் பாகிஸ்தான் நல்ல அணிகளை உருவாக்கி உள்ளது; மிகச்சிறந்த துவக்க மட்டையாளர்களை, வேகவீச்சாளர்களை களமிறக்கி உள்ளது; தொண்ணூறுகளில் பாகிஸ்தானே இந்தியாவை விட பலமடங்கு மேலான அணி. ஆனால் உலகக்கோப்பை ஆட்டம் என்றால் மட்டும் பாகிஸ்தானின் பேஸ்மெண்ட் நடுங்க ஆரம்பித்து விடும். இம்முறை, அதாவது இன்று நடக்க உள்ள ஆட்டத்தில், எந்த அணி தன் உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நிதானமாய் வைத்து நன்றாய் ஆடுமோ அதுவே வெல்லும்

மோசமான வானிலை காரணமாய் ஆட்டம் நடைபெறுமா எனும் ஐயம் வலுவாய் எழுந்துள்ளது என்றாலும், வானம் தெளிவாகும் பட்சத்தில் இந்திய அணியில் யாரெல்லாம் ஆட வேண்டும்? இதைத் தான் விவாதிக்கப் போகிறோம்.


ஷிக்கர் தவன் காயமுற்றிருக்கிறார். அரை-இறுதிப் போட்டியில் தான் அடுத்து அவர் களமிறங்குவார். அதுவரை ராகுல் தான் துவக்க மட்டையாளர். ராகுலின் மத்திய வரிசை இடத்தை எந்த பேட்ஸ்மேன் பெறுவார்? இப்போதைக்கு சங்கர் அல்லது கார்த்திக். இன்றைய ஆட்டத்தில் பெரும்பாலும் சங்கரே எண் நான்கில் களமிறங்குவார். நிதானமான, பந்தை நன்றாய் டைமிங் செய்யக் கூடிய பேட்ஸ்மேன். ஸ்விங் இருக்கும் பட்சத்தில் சங்கரின் மிதவேக பந்து வீச்சு எடுபடும். அவர் நல்ல களத்தடுப்பாளரும் கூட. இன்றைய ஆட்டத்தில் மட்டையாட்டத்தை விட நாம் பந்து வீச்சில் சற்று கூடுதலாய் கவனம் செலுத்த வேண்டும்

இன்றைய ஆடுதளத்தில் அதிகமாய் புற்கள் இருக்காது என்றாலும், தொடர்ந்து சில நாட்களாய் இங்கிலாந்தின் மேன்செஸ்டர் மைதானத்தில் மழை பெய்து வருகிறது; ஆடுதளம் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால் அதற்கு வியர்க்கும்; காற்றில் ஈரப்பதம் இருக்கும்; மேகமூட்டமும் உண்டெனில் பந்து கூடுதலாய் ஸ்விங் ஆகும். இதன் பொருள் நாம் 35-40 ஓவர்களாவது வேகவீச்சாளர்களை வீச வைக்க வேண்டும். பாகிஸ்தானின் பலவீனமும் ஸ்பின்னை ஆடுவதல்ல ஸ்விங் பந்தை ஆடுவது தான். ஆக, இந்தியாவுக்கு மூன்றாவது முழுநேர வேகவீச்சாளர் அவசியம். அது ஷாமியாக இருக்கலாம்

ஒரு சம்பிரதாயமான தேர்வு முதல் பத்து ஓவர்களுக்குப் பிறகு (ஷாமிக்கு பதில்) சங்கர் மற்றும் பாண்டியாவை மிதவேக பந்துகளை வீச வைப்பது; பந்து ஸ்விங் ஆகும் பட்சத்தில் இது ரன்களை கட்டுப்படுத்த உதவுமே அன்றி விக்கெட் எடுக்க உதவாது. ஆக, மூன்றாவது வேகவீச்சாளர் அவசியம். யாரிடத்தில் ஷாமியை கொண்டு வருவது
ஒரு கால்சுழலரின் இடத்தில். அது யார்? சாஹல் மற்றும் குல்தீப் இருவரில் யாரை நீக்குவது என்பதில் எனக்கு தெளிவில்லை. சாஹல் நல்ல ஆட்டநிலையில் இருக்கிறார், ஆனால் குல்தீப்பின் பந்து வீச்சு முறை பாகிஸ்தானுக்கு அவ்வளவாய் பழக்கமில்லாதது. இருவரில் யார் ஆடினாலும் ஓகெ என்று நினைக்கிறேன். பொதுவாக பாகிஸ்தான் கால்சுழலர்களை ஆதிக்கம் பண்ணும்; ஆக, இருவரையும் சேர்த்து ஆட வைக்கலாகாது. இதன்படி நான் தேர்வு செய்யும் அணி இவ்வாறிருக்கும்.

  1. ராகுல்
  2. ரோஹித்
  3. கோலி
  4. சங்கர்
  5. தோனி
  6. ஜாதவ்
  7. பாண்டியா
  8. புவனேஷ்வர்
  9. ஷாமி
  10. சாஹல் / குல்தீப்
  11. பும்ரா

இந்த அணியில் ஒரு பலவீனம் எண் 6. ஜாதவ் நல்ல ஆட்டநிலையில் இல்லை. அவரது பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. ஒரு சிக்கலான கட்டத்தில் அவரால் எந்தளவுக்கு மட்டையாட்டத்தில் பங்களிக்க முடியும்? தெரியவில்லை. ஆக, அவரிடத்தில் ஜடேஜாவை கொண்டு வரலாம். இது சங்கரை ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக மட்டுமே ஆட வைக்க உதவும். அணியில் இடதுகை மட்டையாளர் இல்லை எனும் குறையை நீக்கும். கால்சுழலர் ஷதாப் வீச வரும் போது நாம் தோனிக்குப் பதில் பாண்டியா மற்றும் ஜடேஜாவை களமிறக்கி அடித்தாட முடியும். மூன்று வேக வீச்சாளர்கள் + ஒரு கால்சுழலர் = 40 ஓவர்கள். மீத 10 ஓவர்களில் பாண்டியா 5 ஓவர்களும் மீத ஓவர்களை ஜடேஜாவும் வீசலாம். இது நமது பந்து வீச்சின் பலவீனத்தை பெருமளவுக்கு குறைக்கும். ஆடுதளம் மிகவும் தட்டையாக அமைந்து வானிலையும் சீராக இருந்தால் 300 ரன்கள் அடிப்பது சுலபமாகும். அப்போது சங்கரும் பாண்டியாவும் மத்திய ஓவர்களில் 10 ஓவர்கள் வீசினால் சுமார் 70 ரன்கள் கொடுப்பார்கள், ஆனால் ஷாமியும் பாண்டியாவும் மத்தியில் வீசுகையில் கூட ஜடேஜாவையும் வீச வைத்தால் அது பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும். பத்து ஓவர்களில் 50 ரன்கள், ஒரு விக்கெட் கிடைக்கலாம்.
ஆக, தட்டையான ஆடுதளம், சீரான வானிலை, 300 ரன்கள் சுலபம் என்றால் நான் தேர்வு செய்யும் அணி இது:

  1. ராகுல்
  2. ரோஹித்
  3. கோலி
  4. சங்கர்
  5. தோனி
  6. ஜடேஜா
  7. பாண்டியா
  8. புவனேஷ்வர்
  9. ஷாமி
  10. சாஹல் / குல்தீப்
  11. பும்ரா

யார் இன்று மைதானத்தில் ஆடுவார் - இந்தியா-பாக் அணிகளா, வருணபகவானா - எனப் பார்ப்போம்.



Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...