முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெயரில் சாதியை ஒழிப்பது



ஒரு பழைய “நீயா நானாவின்” டிரைலரைப் பார்த்தேன்சாதியை ஒழிப்பதில்கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை இது விவாதிக்கிறதுசாதியை வெளிப்படையாகபெயரொட்டாக வைத்துக் கொள்ளும் கேவலமான வழக்கம் கேரளாவில் பலருக்கும் உண்டுஇது ஏன்தமிழகத்தில் இது ஏன் இல்லை என நிகழ்ச்சியில் கரு.பழனியப்பனின்நடிகை பார்வதி நாயரும்விவாதிக்கிறார்கள்.
டிரைலரில் இந்த குறுவிவாதத்தைக் கண்ட போது எனக்குள் எண்ணம் நாம் இந்தளவுக்கு மேம்பட்டு தான்இருக்கிறோமா எனும் கேள்வி எழுந்தது
நீயா நானா” போன்ற நிகழ்ச்சிகளில் பெயரில் சாதி வைப்பதில்லை என தமிழர்கள் பெருமையடித்தாலும்கொடூரமான சாதிப் படுகொலைகள்ஆணவக் கொலைகள் இங்கே தான் அதிகமாக நடந்துள்ளனதாழ்த்தப்பட்டவர்களை பொதுவெளியில் வைத்து வெட்டுவதுகொன்று ரயில்பாதையில் கிடத்துவதுகாலனிக்குதீ வைப்பது போன்ற அநீதிகள் நம்மூரில் அதிகம்மேலும்சாதிக்கொரு கட்சியையும் நாமே அங்கீகரிக்கிறோம்அந்த சாதியின் அடிப்படையிலே இன்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்ஏன் இத்தகையசீரழிவுகளை கேரளாவில் நாம் காண்பதில்லை?


ஒரு காரணம் அங்கே சாதியை சமூகம் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பதுஅதாவது சாதிஅமைப்பு இறுக்கமாக இருக்கும் போது சமரசம் நிலவும்ஆனால் தமிழகத்தில் போல இளகலாக இருக்கும்போது அதற்குள் அசைவுகளும் மேல்நோக்கிய பாய்ச்சல்களும் நடக்கும்அப்போது எதிர்ப்பும் வன்முறையும்வெடிக்கும்தமிழகத்தில் உள்ள நிலைமை “நான் உன் சாதியை கேள்விக்கு உட்படுத்த மாட்டேன்நீ என்னைமாற்றவோ என்னை விமர்சிக்கவோ முயலாதேநீ என் பெண்ணைத் தொடாதே நானும் உன் பெண்ணைத் தொடமாட்டேன்அது மட்டுமல்ல நீ உன் எல்லைகளைத் தாண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்உன்உயிரைப் பறிப்பேன்உடைமைகளை எரிப்பேன்குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வருவேன்.” எனும்சமரச ஒப்பந்தம்இது ஒரு அச்சுறுத்தலும் தான்தமிழகத்தில் இந்த அச்சுறுத்தல் மிக மௌனமாக ஆனால்பட்டவர்த்தமாக படமெடுத்தாடுகிறது.
 இங்கு முழுமையாக வெளிப்படையாக நாம் சாதியை ஏற்க முடியாமல் தவிக்கிறோம்இதுவே பின்னர் சாதிமோதல்கள் / தாக்குதல்கள் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு வழிவகுத்தது - அதாவது தமிழர்கள் அரைகுறைமுற்போக்காக இருப்பதே சாதி வன்முறைக்கு வழிவழ்குத்துள்ளதுஎது சாதியை பெயரில் உதறத் தூண்டியதோஅதுவே சாதிக்காக கத்தியை தூக்கவும் வைத்தது.
 மேலும் நாம் பெயரில் ஒழித்து விட்டு அரசியல் களத்தில் வெளிப்படையாக அதை வைத்து அறுவடைபண்ணினோம்இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ராமதாஸும் அன்புமணியும்அவர்கள் தம் பெயருக்கு ஒட்டாகசாதியை வைப்பதில்லைஆனால் அவர்களின் அரசியல் முழுக்க முழுக்க வன்முறையால் சாதியைமுன்னெடுப்பதும்அச்சத்தால் மக்களை பிரித்து பயன்படுத்துவதும்தொண்ணூறுகளில் இப்படியான சாதிஅரசியல் ஒரு மோசமான அலையாக எழுந்து சமூகத்தை அலைகழித்ததுசாதிப்பெயரை வைத்துக் கொள்வதைவிட நாம் இதற்காகத் தான் அதிகமாக வெட்கப்பட வேண்டும்.

இதையெல்லாம் பார்க்கும் போது நாம் மலையாளிகளை விட மேலும் இல்லைமோசமும் இல்லை எனப்படுகிறதுஅது மூடின புண்நாம் திறந்தநிலைப் புண்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...