முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெயரில் சாதியை ஒழிப்பது



ஒரு பழைய “நீயா நானாவின்” டிரைலரைப் பார்த்தேன்சாதியை ஒழிப்பதில்கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை இது விவாதிக்கிறதுசாதியை வெளிப்படையாகபெயரொட்டாக வைத்துக் கொள்ளும் கேவலமான வழக்கம் கேரளாவில் பலருக்கும் உண்டுஇது ஏன்தமிழகத்தில் இது ஏன் இல்லை என நிகழ்ச்சியில் கரு.பழனியப்பனின்நடிகை பார்வதி நாயரும்விவாதிக்கிறார்கள்.
டிரைலரில் இந்த குறுவிவாதத்தைக் கண்ட போது எனக்குள் எண்ணம் நாம் இந்தளவுக்கு மேம்பட்டு தான்இருக்கிறோமா எனும் கேள்வி எழுந்தது
நீயா நானா” போன்ற நிகழ்ச்சிகளில் பெயரில் சாதி வைப்பதில்லை என தமிழர்கள் பெருமையடித்தாலும்கொடூரமான சாதிப் படுகொலைகள்ஆணவக் கொலைகள் இங்கே தான் அதிகமாக நடந்துள்ளனதாழ்த்தப்பட்டவர்களை பொதுவெளியில் வைத்து வெட்டுவதுகொன்று ரயில்பாதையில் கிடத்துவதுகாலனிக்குதீ வைப்பது போன்ற அநீதிகள் நம்மூரில் அதிகம்மேலும்சாதிக்கொரு கட்சியையும் நாமே அங்கீகரிக்கிறோம்அந்த சாதியின் அடிப்படையிலே இன்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்ஏன் இத்தகையசீரழிவுகளை கேரளாவில் நாம் காண்பதில்லை?


ஒரு காரணம் அங்கே சாதியை சமூகம் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பதுஅதாவது சாதிஅமைப்பு இறுக்கமாக இருக்கும் போது சமரசம் நிலவும்ஆனால் தமிழகத்தில் போல இளகலாக இருக்கும்போது அதற்குள் அசைவுகளும் மேல்நோக்கிய பாய்ச்சல்களும் நடக்கும்அப்போது எதிர்ப்பும் வன்முறையும்வெடிக்கும்தமிழகத்தில் உள்ள நிலைமை “நான் உன் சாதியை கேள்விக்கு உட்படுத்த மாட்டேன்நீ என்னைமாற்றவோ என்னை விமர்சிக்கவோ முயலாதேநீ என் பெண்ணைத் தொடாதே நானும் உன் பெண்ணைத் தொடமாட்டேன்அது மட்டுமல்ல நீ உன் எல்லைகளைத் தாண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்உன்உயிரைப் பறிப்பேன்உடைமைகளை எரிப்பேன்குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வருவேன்.” எனும்சமரச ஒப்பந்தம்இது ஒரு அச்சுறுத்தலும் தான்தமிழகத்தில் இந்த அச்சுறுத்தல் மிக மௌனமாக ஆனால்பட்டவர்த்தமாக படமெடுத்தாடுகிறது.
 இங்கு முழுமையாக வெளிப்படையாக நாம் சாதியை ஏற்க முடியாமல் தவிக்கிறோம்இதுவே பின்னர் சாதிமோதல்கள் / தாக்குதல்கள் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு வழிவகுத்தது - அதாவது தமிழர்கள் அரைகுறைமுற்போக்காக இருப்பதே சாதி வன்முறைக்கு வழிவழ்குத்துள்ளதுஎது சாதியை பெயரில் உதறத் தூண்டியதோஅதுவே சாதிக்காக கத்தியை தூக்கவும் வைத்தது.
 மேலும் நாம் பெயரில் ஒழித்து விட்டு அரசியல் களத்தில் வெளிப்படையாக அதை வைத்து அறுவடைபண்ணினோம்இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ராமதாஸும் அன்புமணியும்அவர்கள் தம் பெயருக்கு ஒட்டாகசாதியை வைப்பதில்லைஆனால் அவர்களின் அரசியல் முழுக்க முழுக்க வன்முறையால் சாதியைமுன்னெடுப்பதும்அச்சத்தால் மக்களை பிரித்து பயன்படுத்துவதும்தொண்ணூறுகளில் இப்படியான சாதிஅரசியல் ஒரு மோசமான அலையாக எழுந்து சமூகத்தை அலைகழித்ததுசாதிப்பெயரை வைத்துக் கொள்வதைவிட நாம் இதற்காகத் தான் அதிகமாக வெட்கப்பட வேண்டும்.

இதையெல்லாம் பார்க்கும் போது நாம் மலையாளிகளை விட மேலும் இல்லைமோசமும் இல்லை எனப்படுகிறதுஅது மூடின புண்நாம் திறந்தநிலைப் புண்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...