Skip to main content

கோலமாவு அரசியல்



CAA, NRCக்கு எதிராக கோலமிட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்கள் ஒரு புது மாதிரியான போராளிகள் - ஹமீம் முஸ்தபா சொல்வதைப் போல அவர்கள் பண்பாட்டு மொழியை கையில் எடுத்திருக்கிறார்கள், தர்க்கரீதியான அரசியல் மொழியை அல்ல. அரசு பண்பாட்டு எதிர்ப்பரசியலையே அதிகம் கவனத்தில் கொள்ளும், அஞ்சும், அச்சுறுத்தும். ஜெயலலிதாவும் தன் ஆட்சியில் கலைஞர்கள் தன்னை எதிர்க்கும் போது கைது, தாக்குதல் என கடுமையாய் எதிர்வினையாற்றிருக்கிறார், ஆனால் அரசியல் எழுத்தாளர்களை அவர் பொருட்படுத்தியதில்லை.  

காவல்துறையினர் இக்கைதுக்கு தந்த காரணமும் சுவாரஸ்யம் - கோலமிட்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவே வழக்கை புனைந்திருக்கிறார்கள். கோலம் என்பது உங்கள் வீட்டுக்கு முன்னால் சாலையில் போடப்பட்டாலும் அதற்காக அரசு இதுவரை யாரையும் கைது பண்ணியதில்லை. ஏனென்றால் கோலம் என்பது ஒரு பொருள் அல்ல, அது காயப்போட்ட வடாம் அல்ல. அதன் மீது நீங்கள் ஏறி நடக்கலாம். ஆனால் இதைப் பற்றி பேசும் போது காவல்துறை CAAக்கு எதிரான போராட்டத்துக்காக சிலர் அனுமதி கோரியதாகவும், அது மறுக்கப்பட்டதாகவும் சொல்லி உள்ளது. இந்த கோலத்தையும் போராட்டத்துக்கான விண்ணப்பத்தையும் இணைத்துப் பார்க்கையில் ஒரு பொதுவான அம்சம் நம் கண்ணில் படுகிறது - வெளி
போராட்டத்தின் போதும் கோலமிடும் போதும் நீங்கள் பொதுவெளியையே பயன்படுத்துகிறீர்கள். இந்த வெளி என்பது அரசுக்கு சொந்தமானது. கேட்க விநோதமாக இருக்கலாம், ஆனால் இது உண்மை - நகரத்தில் தனிவீடுகளில் கூட கோலமிடும் முற்றம் கதவுக்கு வெளியே தான் இருக்கிறது. அதாவது பொதுமக்கள் கால் படும் இடமே கோலமிடப்படும் இடம். ஆக அரசியல் கோலமிடுவது கிட்டத்தட்ட அரசியல் பதாகை ஒன்றை வெளியே வைப்பதற்கு இணையானது. நான் பேஸ்புக்கில் என் பக்கத்தில் எழுதும் போது பொறுத்துக் கொள்ளும் காவல்துறை காவல்துறையின் முகநூல் பக்கத்தில் அத்துறையை விமர்சித்து நான் எழுதினால் எனக்கு எதிராக கடுமையான வழக்குகளை இடும். முற்றத்தில், வாயிற்கதவுக்கு முன்னால், கோலமிடுவது, அந்த கோலத்தின் வழி, அரசுக்கு எதிராக கோஷமிடுவது நுட்பமாக பொதுவெளியில் முழங்குவதற்கு சமமானதும் தான். ஆனால் இதே கோலத்தை நீங்கள் வாயிற்கதவுக்கு உள்ளே, பொதுமக்கள் கண்ணில் படாத இடத்தில், உங்களுக்கு சொந்தமான இடத்தில், வரைந்தால் அரசால் உங்களை கைது பண்ண முடியாது. ஆனால் அது அரசியல் போராட்டமும் ஆகாது. பொதுவெளியை ஆக்கிரமிப்பதே அரசியல். உங்களை உதாசீனிப்போரின் தோளைத் தட்டி கவனத்தைக் கோருவதற்கு இணையானது அரசியல். இந்த கோல சர்ச்சை இதுவரையிலும் பொதுவெளி குறித்த நமக்கு இருந்த பிரக்ஞையை கூர்மைப்படுத்தி உள்ளது.

நாளை CAA ஒழிக என ஒரு கோஷத்தை டீஷர்ட்டில் பதித்து நீங்கள் அதை வெளியே அணிந்து சென்று அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டால் அரசு உங்களை கைது பண்ணுமா? நெற்றியில் இதே வாசகத்தை எழுதி சென்றால் உங்களை கைது பண்ணுமா? உங்கள் பைக்கில் எண் பலகைக்கு மேலே இவ்வாசகத்தை எழுதிச் சென்றால் அரசால், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறீர்கள் என, உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? நடைபாதையில் இருந்து ஒருவர் ஊதுபத்தி விற்கும் போதும் அவர் பொதுவெளியைத் தான் ஆக்கிரமிக்கிறார். அரசு கண்டுகொள்ளாது. அவர் அதே இடத்தில் இருந்து லாபம் தரும் ஒன்றை விற்றால் காவல்துறை லஞ்சம் கேட்டு உங்களை துரத்தி அடிக்கும். அதே இடத்தில் இருந்து அரசியல் செய்தால் காவல்துறை உங்களை கைது பண்ணி மிரட்டும். பொதுவெளி மக்களுக்கானதே, ஆனால் மக்களுக்கானதும் அல்ல. அரசியல்மயமாகும் போது மட்டுமே மக்கள் இந்த வித்தியாசத்தை உணர்கிறார்கள். அவ்வகையில் இந்த கோலப் போராட்டம் கவனிக்கத்தக்கது.


 எடப்பாடியின் அரசு பாஜகவை திருப்திப்படுத்த எதையும் செய்யும் என்றாலும், சமூகவலைதளஙக்ள் வழியாக மக்கள் அதிகமாய் அரசியல்படும் இந்த சூழலில் பொதுவெளியில் நடத்தப்படும் போராட்டங்கள் புதுப்புது வடிவங்களை எடுக்கின்றன. அப்போது காவல்துறையால் முடிவதெல்லாம் மக்களை கைதுபண்ணி மிரட்டுவது தான்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...