முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோலமாவு அரசியல்



CAA, NRCக்கு எதிராக கோலமிட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்கள் ஒரு புது மாதிரியான போராளிகள் - ஹமீம் முஸ்தபா சொல்வதைப் போல அவர்கள் பண்பாட்டு மொழியை கையில் எடுத்திருக்கிறார்கள், தர்க்கரீதியான அரசியல் மொழியை அல்ல. அரசு பண்பாட்டு எதிர்ப்பரசியலையே அதிகம் கவனத்தில் கொள்ளும், அஞ்சும், அச்சுறுத்தும். ஜெயலலிதாவும் தன் ஆட்சியில் கலைஞர்கள் தன்னை எதிர்க்கும் போது கைது, தாக்குதல் என கடுமையாய் எதிர்வினையாற்றிருக்கிறார், ஆனால் அரசியல் எழுத்தாளர்களை அவர் பொருட்படுத்தியதில்லை.  

காவல்துறையினர் இக்கைதுக்கு தந்த காரணமும் சுவாரஸ்யம் - கோலமிட்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவே வழக்கை புனைந்திருக்கிறார்கள். கோலம் என்பது உங்கள் வீட்டுக்கு முன்னால் சாலையில் போடப்பட்டாலும் அதற்காக அரசு இதுவரை யாரையும் கைது பண்ணியதில்லை. ஏனென்றால் கோலம் என்பது ஒரு பொருள் அல்ல, அது காயப்போட்ட வடாம் அல்ல. அதன் மீது நீங்கள் ஏறி நடக்கலாம். ஆனால் இதைப் பற்றி பேசும் போது காவல்துறை CAAக்கு எதிரான போராட்டத்துக்காக சிலர் அனுமதி கோரியதாகவும், அது மறுக்கப்பட்டதாகவும் சொல்லி உள்ளது. இந்த கோலத்தையும் போராட்டத்துக்கான விண்ணப்பத்தையும் இணைத்துப் பார்க்கையில் ஒரு பொதுவான அம்சம் நம் கண்ணில் படுகிறது - வெளி
போராட்டத்தின் போதும் கோலமிடும் போதும் நீங்கள் பொதுவெளியையே பயன்படுத்துகிறீர்கள். இந்த வெளி என்பது அரசுக்கு சொந்தமானது. கேட்க விநோதமாக இருக்கலாம், ஆனால் இது உண்மை - நகரத்தில் தனிவீடுகளில் கூட கோலமிடும் முற்றம் கதவுக்கு வெளியே தான் இருக்கிறது. அதாவது பொதுமக்கள் கால் படும் இடமே கோலமிடப்படும் இடம். ஆக அரசியல் கோலமிடுவது கிட்டத்தட்ட அரசியல் பதாகை ஒன்றை வெளியே வைப்பதற்கு இணையானது. நான் பேஸ்புக்கில் என் பக்கத்தில் எழுதும் போது பொறுத்துக் கொள்ளும் காவல்துறை காவல்துறையின் முகநூல் பக்கத்தில் அத்துறையை விமர்சித்து நான் எழுதினால் எனக்கு எதிராக கடுமையான வழக்குகளை இடும். முற்றத்தில், வாயிற்கதவுக்கு முன்னால், கோலமிடுவது, அந்த கோலத்தின் வழி, அரசுக்கு எதிராக கோஷமிடுவது நுட்பமாக பொதுவெளியில் முழங்குவதற்கு சமமானதும் தான். ஆனால் இதே கோலத்தை நீங்கள் வாயிற்கதவுக்கு உள்ளே, பொதுமக்கள் கண்ணில் படாத இடத்தில், உங்களுக்கு சொந்தமான இடத்தில், வரைந்தால் அரசால் உங்களை கைது பண்ண முடியாது. ஆனால் அது அரசியல் போராட்டமும் ஆகாது. பொதுவெளியை ஆக்கிரமிப்பதே அரசியல். உங்களை உதாசீனிப்போரின் தோளைத் தட்டி கவனத்தைக் கோருவதற்கு இணையானது அரசியல். இந்த கோல சர்ச்சை இதுவரையிலும் பொதுவெளி குறித்த நமக்கு இருந்த பிரக்ஞையை கூர்மைப்படுத்தி உள்ளது.

நாளை CAA ஒழிக என ஒரு கோஷத்தை டீஷர்ட்டில் பதித்து நீங்கள் அதை வெளியே அணிந்து சென்று அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டால் அரசு உங்களை கைது பண்ணுமா? நெற்றியில் இதே வாசகத்தை எழுதி சென்றால் உங்களை கைது பண்ணுமா? உங்கள் பைக்கில் எண் பலகைக்கு மேலே இவ்வாசகத்தை எழுதிச் சென்றால் அரசால், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறீர்கள் என, உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? நடைபாதையில் இருந்து ஒருவர் ஊதுபத்தி விற்கும் போதும் அவர் பொதுவெளியைத் தான் ஆக்கிரமிக்கிறார். அரசு கண்டுகொள்ளாது. அவர் அதே இடத்தில் இருந்து லாபம் தரும் ஒன்றை விற்றால் காவல்துறை லஞ்சம் கேட்டு உங்களை துரத்தி அடிக்கும். அதே இடத்தில் இருந்து அரசியல் செய்தால் காவல்துறை உங்களை கைது பண்ணி மிரட்டும். பொதுவெளி மக்களுக்கானதே, ஆனால் மக்களுக்கானதும் அல்ல. அரசியல்மயமாகும் போது மட்டுமே மக்கள் இந்த வித்தியாசத்தை உணர்கிறார்கள். அவ்வகையில் இந்த கோலப் போராட்டம் கவனிக்கத்தக்கது.


 எடப்பாடியின் அரசு பாஜகவை திருப்திப்படுத்த எதையும் செய்யும் என்றாலும், சமூகவலைதளஙக்ள் வழியாக மக்கள் அதிகமாய் அரசியல்படும் இந்த சூழலில் பொதுவெளியில் நடத்தப்படும் போராட்டங்கள் புதுப்புது வடிவங்களை எடுக்கின்றன. அப்போது காவல்துறையால் முடிவதெல்லாம் மக்களை கைதுபண்ணி மிரட்டுவது தான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...